முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கில் இரு பிரிவினர் மோதல்: பலி எண்ணிக்கை 130 ஆக உயர்வு

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2024      உலகம்
Pakistan-2024-12-02

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் இரு பிரிவினர் இடையே நடந்த மோதலில் பலி எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் ஒரு சமூகத்தை சேர்ந்த இரு பிரிவினர் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த சூழலில் கடந்த மாதம் 21-ந் தேதி கைபர் பக்துங்வாவின் குர்ராம் மாவட்டத்தில் ஒரு பிரிவினர் சென்ற வாகனங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 57 பேர் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இரு பிரிவினருக்கும் இடையே பயங்கர மோதல்கள் நடந்தன. இதில் இரு தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

இதனையடுத்து, இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி 10 நாள் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன. ஆனால் அதை மீறியும் தொடர்ந்து வன்முறை சம்பங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் இரு பிரிவினருக்கும் இடையே நடந்த மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ நெருங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து