எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
முதலாவது டெஸ்டில் ரோகித் சர்மா இல்லாததால் ஜெய்ஸ்வாலுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுல் விளையாடினார். தற்போது ரோகித் சர்மா அணிக்கு திரும்பி விட்டதால் 2-வது டெஸ்டில் அவர் தொடக்க ஆட்டக்காரராக விளையாட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால் லோகேஷ் ராகுல் பின்வரிசைக்கு தள்ளப்படுவார் இந்நிலையில், இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் ராகுலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து ராகுல் கூறியதாவது, பேட்டிங்கில் எந்த வரிசையிலும் விளையாட தயாராக இருக்கிறேன். ஆடும் லெவனில் இடம் கிடைத்தால் போதும். அது எந்த இடமாக இருந்தாலும் சரி, களம் கண்டு அணிக்காக பங்களிப்பு அளிக்க விரும்புகிறேன். இந்திய அணிக்காக பல வரிசையில் விளையாடி இருக்கிறேன்.
தொடக்க காலங்களில் முதல் 20-25 பந்துகளை எதிர்கொள்வது தொழில்நுட்ப ரீதியாக இல்லாமல் மனரீதியாக சற்று சவாலாக இருந்தது. எப்போது அதிரடி காட்ட வேண்டும்?, எவ்வளவு நேரம் எச்சரிக்கையாக ஆட வேண்டும்? போன்ற விஷயங்கள் மனதுக்குள் ஓடிக்கொண்டு இருக்கும். ஆனால் தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் பல இடங்களில் விளையாடி பழக்கப்பட்டு விட்டதால், எனது இன்னிங்சை எப்படி சமாளிக்க வேண்டும் என்ற திட்டம் என்னிடம் இருக்கிறது. நான் தொடக்க வீரராக விளையாடினாலும் சரி, மிடில் வரிசையில் விளையாடினாலும் சரி, முதல் 30-40 பந்துகளை சமாளித்து விட்டால், அதன் பிறகு எளிதாக ஆட முடியும். அதில் எனது கவனத்தை செலுத்த முயற்சிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக நடத்தப்படுகிறது. இந்த டெஸ்ட் அடிலெய்டில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆஸ்திரேலியாவின் ஆடும் அணி (பிளேயிங் 11) அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் இடம்பெற்றிருந்த வீரர்களில் 10 பேர் மாற்றமின்றி தொடருகின்றனர். ஒரே மாற்றமாக காயம் காரணமாக விலகிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட்டுக்கு பதிலாக ஸ்காட் போலந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் 11 விவரம் பின்வருமாறு., உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் சுமித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் மற்றும் ஸ்காட் போலந்து.
பாகிஸ்தான் அணி அறிவிப்பு
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறது தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.இந்த தொடர் வரும் 10ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகள் நடைபெறுகிறது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி: முகமது ரிஸ்வான் (கேப்டன் ), அப்ரார் அகமது, பாபர் அசாம், ஹாரிஸ் ரவுப், ஜஹந்த் கான், முகமது அப்பாஸ் அப்ரிடி, முகமது ஹஸ்னைன், முஹம்மது இர்பான் கான், உமைர் பின் யூசுப், சைம் அயூப், சல்மான் அலி அகாடி, சுஹீன் அலி ஆகா, மொகிம், தயப் தாஹிர் மற்றும் உஸ்மான் கான் .
ஆஸ்திரேலியா அபார வெற்றி
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆஸ்திரேலிய வீராங்கனை மேகன் ஷட்டின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியில் ஹர்லீன் தியோல் (19 ரன்கள்), ஹர்மன்ப்ரீத் கவுர் (17 ரன்கள்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (23 ரன்கள்) மற்றும் ரிச்சா கோஷ் (14 ரன்கள்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கை தொடவில்லை.
வெறும் 34.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்தியா 100 ரன்களில் சுருண்டது. ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக மேகன் ஷட் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 101 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன லிட்ச்பீல்ட் மற்றும் ஜார்ஜியா வால் வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். வெறும் 16.2 ஓவர்களிலேயே 102 ரன்கள் அடித்த ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜார்ஜியா வால் 46 ரன்களும், லொட்ச்பீல்ட் 35 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ரேனுகா சிங் 3 விக்கெட்டுகளும், பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 19 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று விஜய் சுற்றுப்பயணம் : பிரச்சார இடங்கள் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்யவுள்ளார்.
-
அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல்
19 Sep 2025ஐதராபாத் : அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல் வெளயாகியுள்ளது.
-
செப்டம்பர் 22 முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைப்புகள் வழங்கப்படும் : மத்திய வேளாண் அமைச்சர் தகவல்
19 Sep 2025டெல்லி : முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைக்கப்படும் என்று வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
19 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (செப்.20, 21 தேதிகளில்) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெ
-
பாதுகாப்பை மீறி த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்: போலீஸ் விசாரணையில் புதிய தகவல்
19 Sep 2025சென்னை, பாதுகாப்பை மீறி நடிகர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
-
போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
19 Sep 2025சென்னை : போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
-
மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி, கமல்ஹாசன் நேரில் அஞ்சலி
19 Sep 2025மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
ரோபோ சங்கருக்கு நடிகர் விஜய் புகழஞ்சலி
19 Sep 2025சென்னை : தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ரோபோ சங்கர் என்று தவெக தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தி
-
வேலூர் காவலர் பயிற்சிப்பள்ளிக்கு வீரமங்கை வேலு நாச்சியார் பெயர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : வேலூரில் உள்ள காவல் பயிற்சி பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
இன்று பம்பையில் நடைபெறும் அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
19 Sep 2025திருவனந்தபுரம், பம்பையில் இன்று நடைபெறவுள்ள அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் சேகர் பாபு, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார்கள்.
-
கரூர் எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளியுங்கள்: இ.பி.எஸ். பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
19 Sep 2025மதுரை : கரூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளிக்க அ.தி.மு.க.வுக்கு உயர் நீதிமன்றம
-
வாக்குத்திருட்டு நடப்பது எப்படி? - ராகுல் காந்தி பதிவால் பரபரப்பு
19 Sep 2025டெல்லி : வாக்குத் திருட்டு எப்படி நடக்கிறது என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து
19 Sep 2025புதுடெல்லி, தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வோம் : மே.இ.தீவுகள் பயிற்சியாளர் நம்பிக்கை
19 Sep 2025கரீபியன் : இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கிந்தியத் தீவுகளிடம் தரமான வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேர
-
உடல் நலக்குறைவால் காலமான நடிகர் ரோபோ சங்கர் உடல் தகனம்
19 Sep 2025சென்னை, நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 46.
-
அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
-
புதிய குடியேற்ற விதியின்படி இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட முதல் இந்தியர்
19 Sep 2025லண்டன், இங்கிலாந்தில் புதிய குடியேற்ற விதிகளை கொண்ட ‘ஒன்-இன், ஒன்-அவுட்’ என்ற ஒப்பந்தம் ஆகஸ்டு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையல், தற்போது முதல்முறையாக இங்கிலான்தில்
-
பாக்.கில் 2 வெடிகுண்டு தாக்குதல் - 11 பேர் பலி
19 Sep 2025லாகூர் : பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்தவர்களுக்கு 3 கோடி ரூபாய் அபராதம்
19 Sep 2025பெய்ஜிங், சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்த வாலிபர்களுக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
19 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி
19 Sep 2025சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது.
-
மீண்டும் இந்திய அணிக்காக விளையாட உள்ள அஸ்வின்
19 Sep 2025சென்னை : ‘ஹாங்காங் சிக்சர்ஸ் தொடர்’ மீண்டும் இந்திய அணிக்காக அஸ்வின் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
19 Sep 2025மாஸ்கோ, 7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் புதின் விரும்பவில்லை; இங்கி., உளவுத்துறை தலைவர்
19 Sep 2025இஸ்தான்புல், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புதின் விரும்பவில்லை என்று இங்கிலாந்து உளவுத்துறை தலைவர் ரிச்சர்ட் மோரி தெரிவித்துள்ளார்.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது : அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
19 Sep 2025தஞ்சாவூா் : வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.