எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பது, பட்டப்படிப்புகளில் கற்றல் முறைகள் தொடர்பாக யு.ஜி.சி. வெளியிட்ட வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக சமீபத்தில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்ட வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் ஜன.9-ம் தேதி அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலினை இணைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நேற்று (ஜன.20) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள் குறித்து தமிழக முதல்வர் தமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தும் வகையில் இக்கடிதத்தை எழுதுகிறேன். வரைவு நெறிமுறைகளில் உள்ள பல விதிகள் மாநிலங்களின் கல்விமுறை மற்றும் கல்விக் கொள்கைகளுக்கு முரணாக உள்ளன. மேலும், வரைவு யுஜிசி (இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் வழங்குவதற்கான குறைந்தபட்ச தரநிலைகள்) – நெறிமுறைகள் 2024 தொடர்பான கவலைக்குரிய சில முக்கிய விதிகள் குறித்து பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
இளநிலை மற்றும் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நடத்துதல்:
பொது நுழைவுத் தேர்வுகளுக்கான முன்மொழிவு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பல்வேறு கவலைகளை எழுப்புகிறது. மாநில மற்றும் தேசிய கல்வி வாரியங்களால் வலுவான இறுதித் தேர்வுகள் மூலம் மாணவர்களின் கல்வித்திறன் ஏற்கெனவே முறையாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆதலால் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்துவது என்பது தேவையற்றதும், சுமையாகவும் அமைந்துவிடும்.
நுழைவுத் தேர்வுகள் மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்துவதுடன் நிதிச்சுமையையும் ஏற்படுத்தி சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நுழைவுத் தேர்வுகள் கட்டாயமாக்கப்பட்டால், பள்ளிகள் நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சியில் கவனம் செலுத்தக்கூடும். இது பள்ளிக்கல்வியின் செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தும். தமிழகத்தின் உயர்கல்வி சேர்க்கை விகிதம்ஏற்கெனவே நாட்டிலேயே முதன்மையாக உள்ளது. எனவே, நுழைவுத் தேர்வுகள் நிச்சயமாக பின்தங்கிய மாணவர்களின் உயர்கல்விக்கான சேர்க்கையைக் குறைத்துவிடும்.
நாட்டிலுள்ள மாறுபட்ட கல்வி முறைகள் மற்றும் அமைப்புகளைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் ஒரே விதமான நுழைவுத் தேர்வு என்பது நடைமுறைக்கு ஒவ்வாது. இது மாநில சுயாட்சியை குறைத்து மதிப்பிடும் வகையில் அமைந்துள்ளது. மாணவர்கள் தங்கள் மேல்நிலைப்பள்ளி பாடப்பிரிவைப் பொருட்படுத்தாமல் எந்தவொரு பட்டப்படிப்பையும் தொடர அனுமதிக்கும் முறை என்பது போதுமான அடிப்படை பாட அறிவு இல்லாமல் உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்குத் தேவையற்ற கல்வி அழுத்தத்தை உருவாக்கும். எனவே, மேற்கூறிய காரணங்களுக்காக, இளங்கலை, முதுகலை சேர்க்கைகள் தனி நுழைவுத் தேர்வைவிட பள்ளி இறுதித் தேர்ச்சி மற்றும் இளங்கலை மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
4 வருட (கலை மற்றும் அறிவியல்) பட்டம் பெற்றவர்கள், எம்.டெக், எம்.இ. பட்டப்படிப்பில் சேர்க்கை பெறத் தகுதி 4 ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்களை எம்.டெக், அல்லது எம்.இ. படிப்புகளைத் தொடர அனுமதிப்பது கவலையளிக்கிறது. அடிப்படை பொறியியல் குறித்த அடித்தளம் இல்லாமல், மாணவர்கள் முதுகலை பொறியியல் படிப்புகளில் சிரமப்படலாம், மேலும் இதுபோன்ற புதிய ஏற்பாட்டுக்கான தேவையைக் குறித்து கவனமாக மறு ஆய்வு செய்யவேண்டும்.
பல நுழைவு மற்றும் பல வெளியேறும் அமைப்பு என்பதும் பல சிக்கல்களை எழுப்புகிறது, குறிப்பாக, கற்றல் தொடர்ச்சியில் சீர்குலைவு, தற்போதைய அமைப்பு கற்றலின் ஓட்டத்தை உறுதி செய்கிறது, அதனை எம்.இ.எம்.இ. சீர்குலைக்கிறது.பாடத்திட்டத்தில் அவ்வப்போது புதுப்பிப்புகள் ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நுழையும் மாணவர்களுக்கு கடினமாக்கும். எம்.இ.எம்.இ. முறை இடைநிற்றலை சட்டப்பூர்வமாக்குவதுடன், உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சிகளை குறைக்கும்.
எம்.இ.எம்.இ. மாதிரி கல்வி திட்டமிடல் மற்றும் வள ஒதுக்கீட்டை சிக்கலாக்குவதன் மூலம் கல்வி நிறுவனங்களை சீர்குலைக்கக்கூடும். வரைவு யுஜிசி (பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை நியமித்தல் மற்றும் பதவி உயர்வு பெறுவதற்கான குறைந்தபட்ச தகுதிகள் மற்றும் உயர்கல்வியின் தரங்களை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள்) நெறிமுறைகள்-2025ஐப் பொருத்தவரை, ஏற்புடையதாக இல்லை.
கல்வியாளர்கள் அல்லாதவர்களை துணைவேந்தர்களாக நியமித்தல் (பிரிவு 10.1) :
துணைவேந்தர்களை நியமிப்பதற்கான முன்மொழியப்பட்ட அளவுகோல்கள், தொழில்துறை, பொது நிர்வாகம் அல்லது பொதுக் கொள்கையில் அனுபவம் வாய்ந்த நபர்களை உள்ளடக்கியது மிகுந்த கவலைகளை எழுப்புகிறது. கல்வித்துறைக்கு வெளியே தலைமைப் பதவிகளில் அனுபவம் மிக்கவர்களாக இருப்பினும், துணைவேந்தர் பதவிக்கு ஆழ்ந்த கல்வி நிபுணத்துவம் மற்றும் உயர் கல்வி முறை பற்றிய புரிதல் தேவைப்படுகிறது. தற்போது முன்மொழியப்பட்டுள்ள அளவுகோல்கள் பல்கலைக்கழகங்களை திறம்பட வழிநடத்த தேவையான கல்வி மற்றும் நிர்வாக அனுபவம் இல்லாத நபர்களை நியமிக்க வழிவகுக்கும் என்று அஞ்சுகிறோம். கல்வி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தில் அனுபவம் கொண்ட நபர்களுக்கு முன்னுரிமை அளிக்க அளவுகோல்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
துணைவேந்தர் தேடல் குழுவில் மாநில அரசை நீக்குதல் (பிரிவு 10.1.iv):
மாநில பல்கலைக்கழகங்களின் உள்கட்டமைபை மாநில அரசுகள் முழுமையாக ஏற்படுத்தியுள்ளன. இப்பல்கலைக்கழகங்கள் மாநில அரசுகளால் முழுமையாக நிதியுதவி அளிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. மாநிலத்தின் உண்மையான விருப்பங்கள், உள்ளூர் மாணவர்களின் கல்வித் தேவைகள், மாநில கொள்கைகள் ஆகியவை உரிய முறையில் பின்பற்றி உறுதி செய்வதற்கு, துணைவேந்தர்களை தேர்வு செய்யும் நடைமுறையில் மாநில அரசின் பங்கேற்பு மிகவும் முக்கியமானது.
மாறுபட்ட பாடப்பிரிவு ஆசிரியர்கள் (பிரிவு 3.2 மற்றும் 3.3):
இளங்கலை அல்லது முதுகலை தகுதியிலிருந்து வேறுபட்ட ஒரு துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு விண்ணப்பதாரர் அல்லது அவர்களின் கல்வி பின்னணியிலிருந்து வேறுபட்ட பாடத்தில் நெட், செட் தேர்ச்சி பெற்ற ஒருவர் அந்தத் துறையில் கற்பிக்கத் தகுதியுடையவர் என்று வரைவு விதிமுறைகள் முன்மொழிகின்றன. சரியான அடிப்படை பாடப்பிரிவு அறிவு இல்லாமல் பாடங்களை கற்பிக்க தனி நபர்களை அனுமதிப்பது மாணவர்களுக்கு, குறிப்பாக இளங்கலை மற்றும் முதுகலை மட்டங்களில் கற்றல் விளைவுகளுக்கு எதிர்மறையாக அமைந்துவிடும்.
வரைவு விதிமுறைகளில் இதுபோன்ற பல விதிகள் மாநில பல்கலைக்கழகங்களின் கல்வி ஒருமைப்பாடு, தன்னாட்சி மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு கடுமையான சவால்களை ஏற்படுத்தக்கூடும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, கல்வி அமைச்சகம் விவாதத்தில் உள்ள வரைவு மசோதாக்களை திரும்பப் பெறவும், இந்தியாவில் உள்ள மாறுபட்ட உயர்கல்வி தேவைகளுடன் சிறப்பாக ஒத்துப்போகும் வகையில் வரைவு விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
எனவே, வரைவு நெறிமுறைகள் திரும்பப்பெறப்பட்டு, மாநிலங்களின், குறிப்பாக தமிழகத்தின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்படுவதை உறுதி செய்வதற்கு மத்திய கல்வி அமைச்சரின் ஆதரவை நான் எதிர்பார்க்கிறேன். இந்த வரைவு விதிமுறைகளை எதிர்த்தும், துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான விதிமுறைகள் உட்பட மேற்கண்ட இரண்டு வரைவு விதிமுறைகளையும் உடனடியாக திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தியும் ஜன.9ம் தேதி அன்று தமிழக சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்தீர்மானத்தின் நகல் ஒன்றினையும் மத்திய கல்வி அமைச்சரின் கனிவான பரிசீலனைக்காகவும், சாதகமான நடவடிக்கைக்காகவும் அனுப்பி வைத்துள்ளேன்’ என்று அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 2 weeks ago |
-
அமெரிக்காவில் சீக்கியர்களின் தலைப்பாகை கட்டாய அகற்றம் : சீக்கிய மத அமைப்பு கண்டனம்
17 Feb 2025பஞ்சாப் : அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட சீக்கியர்களை அமெரிக்க அதிகாரிகள் தலைப்பாகையை அகற்றும்படி கட்டாயப்படுத்திய சம்பவத்திற்கு சீக்கிய மத அமைப்பினர் கண்டனம் தெர
-
வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றி பெறச்செய்ய வேண்டும் : விவசாயிகள் அணி கூட்டத்தில் தீர்மானம்
17 Feb 2025சென்னை : வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றி பெறச்செய்ய அக்கட்சியின் விவசாயிகள் பிரிவின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
2 நாள் பயணமாக இந்தியா வருகை; கத்தார் அதிபர் இன்று ஜனாதிபதி, பிரதமர் மோடியை சந்திக்கிறார்
17 Feb 2025டெல்லி, 2 நாள் பயணமாக இந்தியா வந்த கத்தார் அதிபர் இன்று ஜனாதிபதி, பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.
-
சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு தி.மு.க. கூட்டணி கட்சிகள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்
17 Feb 2025சென்னை: மத்திய அரசசைக் கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்
17 Feb 2025சென்னை: தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைமுருகனிடம் முதல்வர் நலம் விசாரித்தார்
17 Feb 2025சென்னை: உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டஅமைச்சர் துரைமுருகனிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
-
தேசிய அளவில் ஊராட்சிகளில் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தமிழகம் முதலிடம்
17 Feb 2025சென்னை: தேசிய அளவில் ஊராட்சிகளில் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
-
முடிவுக்கு வருகிறது உக்ரைன் போர் ? சவுதியில் அமெரிக்கா-ரஷியா பேச்சுவார்த்தை
17 Feb 2025ரியாத்: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து அமெரிக்கா, ரஷியா பேச்சுவாத்தை நடத்த உள்ளன.
-
குமிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற தாதுமணல் கொள்ளை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
17 Feb 2025சென்னை: கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளில் தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்கை சி.பி.ஐ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-02-2025.
17 Feb 2025 -
உ.பி. மகா கும்பமேளாவில் 53 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடல்
17 Feb 2025லக்னோ: மகா கும்பமேளாவிற்கு இதுவரை 53 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடியுள்ளனர்.
-
4 ரிக்டர் நில அதிர்வுக்கே டெல்லி குலுங்கியது ஏன்?
17 Feb 2025புதுடெல்லி: டெல்லியில் 4.0 ரிக்டருக்கே கட்டிடங்கள் பயங்கரமாகக் குலுங்கியது ஏன்? என்ற தகவல் வெளியாகியுள்ளது.
-
டெல்லி ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
17 Feb 2025புதுடெல்லி, பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பங்கேற்க புதுடெல்லி ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிச
-
ஒத்த ஓட்டு முத்தையா விமர்சனம்
17 Feb 2025சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஒரே ஒரு ஓட்டு வாங்கியதால், ’ஒத்த ஓட்டு முத்தையா’ என்று அழைக்கப்படும் அரசியல்வாதி கவுண்டமணி, தனது மூன்று தங்கைகளுக்கும் ஒரே குடும்பத்தில்
-
அ.தி.மு.க.வில் நான் சாதாரண தொண்டன்: செங்கோட்டையன்
17 Feb 2025திருச்சி, அரசியல் கட்சியில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் கிடையாது என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
-
தடை செய்யப்பட்ட சீன ட்ரோனை இயக்கி சர்ச்சையில் சிக்கிய ராகுல்
17 Feb 2025புதுடில்லி, தடை செய்யப்பட்ட சீன டிரோனை காங்கிரஸ் தலைவர் ராகுல் இயக்கிய வீடியோ வெளியாகி சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் 9-ல் தெப்போற்சவம் ஆரம்பம்
17 Feb 2025திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் 9-ல் தெப்போற்சவம் ஆரம்பமாகிறது.
-
முதலமைச்சரின் காக்கும் கரங்கள் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
17 Feb 2025சென்னை: முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
பிரதீப்பின் நடிப்பு நிச்சயம் பேசப்படும் – இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து
17 Feb 2025பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி பிப்ரவரி 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படம் டிராகன்.
-
தினசரி விமர்சனம்
17 Feb 2025ஐடியில் பணியாற்றும் நாயகன் ஸ்ரீகாந்த் தனக்கு மனைவியாக வருபவர், தன்னை விட அதிகம் சம்பாதிப்பவராக இருக்க வேண்டும் என நினைக்கிறார்.
-
மகளிருக்கான இலவச பஸ்களை அதிகரிக்க தமிழ்நாடு அரசு முடிவு
17 Feb 2025சென்னை : மகளிருக்கான இலவச பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
-
பிணை கைதிகளை விடுவிக்காவிட்டால் மிகபெரிய வேதனையை சந்திக நேரிடும் : ஹமாசுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
17 Feb 2025இஸ்ரேல் : பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் நரக வேதனையை அனுபவிக்க நேரிடும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்தார்.
-
டில்லியில் வரும் 20-ம் தேதி புதிய அரசு பதவியேற்கிறது?
17 Feb 2025புதுடில்லி: டில்லி ராம்லீலா மைதானத்தில் பிப்.20ஆம் தேதி பா.ஜ.க.வின் புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெறும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
-
வள்ளுவர் கோட்டம் புனரமைப்பு பணிகள் 90 சதவீதம் முடிந்தன : அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது
17 Feb 2025சென்னை : வள்ளுவர் கோட்டம் புனரமைப்பு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்ததையொட்டி அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
-
பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
17 Feb 2025சென்னை: பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரம் தொடர்ந்து நசுக்கப்பட்டு வருகிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.