எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பஹல்காம் : பாகிஸ்தானின் பொருளாதார நிலை குறித்து ஊடகங்கள் அனைத்தும் அலசத் தொடங்கிவிட்டன. காரணம், அந்நாட்டின் பொருளாதாரம் படுமோசமாக இருப்பதுதான். இப்படியொரு நிலையில், இந்தியாவுடன் போர் தொடுக்க அந்நாட்டால் முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே போர்ப்பதற்றம் உருவாகியிருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையே போர்ப்பதற்றம் உண்டானால், அவ்விரு நாடுகளின் ராணுவ பலம், பாதுகாப்புத் துறையின் பலம் குறித்துத்தான் அலசப்படும். ஆனால், பாகிஸ்தானின் பொருளாதார நிலை குறித்து ஊடகங்கள் அனைத்தும் அலசத் தொடங்கிவிட்டன. காரணம், அந்நாட்டின் பொருளாதாரம் படுமோசமாக இருப்பதுதான். இப்படியொரு நிலையில், இந்தியாவுடன் போர் தொடுக்க அந்நாட்டால் முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதற்கு நம்மிடம் பதில் இல்லை. ஆனால், பாகிஸ்தான் பொருளாதாரம் குறித்த பல தரவுகள் கிடைத்துள்ளன. நாட்டின் மிக முக்கிய உணவாக இருக்கும் சில பொருள்களின் அடிப்படை விலை பற்றிய தகவல்கள் சொல்வது என்னவென்றால், ஒரு கிலோ கோழிக்கறி ரூ.800க்கும், ஒரு கிலோ அரிசி விலை ரூ.340 ஆகவும் உள்ளதாம். ஒரு டஜன் முட்டை ரூ.330க்கும், ஒரு லிட்டர் பால் விலை ரூ.224க்கும் விற்பனையாகிறது என்கிறார்கள்.
வறட்சியால் 1 கோடி மக்கள் பட்டினிக்கு ஆளாகும் நிலை ஊள்ளது. பாகிஸ்தான் பொருளாதாரம் முற்றிலும் மோசமாகியிருக்கிறது. இவ்வாறு உள்நாட்டிலேயே பல சிக்கல்களை வைத்துக்கொண்டு அண்டை நாட்டுடன் பாகிஸ்தான் போர் தொடுக்குமா? அதற்கான நிதி இருக்கிறதா? அதனால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும்? என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழத்தான் செய்கிறது. பாகிஸ்தானில் மழை வெள்ளம், கடுமையான வெய்யில் போன்றவை, வேளாண்மையை பாதித்து அதனால் அங்கு கடும் பஞ்சம் நிலவி வருகிறது. இந்த ஆண்டு கோடைக்குள் ஒரு கோடி பேர் உணவுப் பற்றாக்குறை, பட்டினியால் பாதிக்கப்படுவார்கள் என அஞ்சப்படும் நிலையில், பணவீக்கம் அபாய அளவில் உள்ளது. இதனால் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அரிசி, கோழிக்கறியை விடுங்கள். ரொட்டி, தக்காளி, உருளைக்கிழங்கு போன்றவற்றையே ஏழை மக்கள் வாங்கி சாப்பிட முடியாத நிலை உள்ளது. ஒரு ஏழைக் குடும்பம் ஒரு நாளைக்கு மூன்று வேளையும் உணவு சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போர் கூட வேண்டாம், அங்கு நிலவும் தண்ணீர் பஞ்சம், மின் தடை போன்றவற்றுக்கு இடையே சிந்து நதிநீர் தடுக்கப்பட்டாலே இரண்டு மாகாணங்கள் வறட்சியில் சிக்கிக்கொள்ளும்.
இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை மூடப்பட்டுவிட்டது. முழுமையாக வணிகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டில் அடிப்படைப் பொருள்களின் விலை விண்ணைத் தொடலாம். அடுத்து இந்தியாவிலிருந்து 40 சதவீதம் வரை மருந்துத் தயாரிப்புக்கான கச்சாப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்நாட்டில் மருந்து பொருள்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. பாகிஸ்தான் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏராளமான பொருள்களை இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்துவந்த நிலையில் அவை பாதிக்கப்பட்டால், ஆசியாவிலேயே மிக அதிக செலவாகும் நாடாக பாகிஸ்தான் மாறிவிடும். பாகிஸ்தானின் பொருளாதார நிலை, உள்நாட்டில் பலூச் அமைப்பினரின் தாக்குதல், வெளிநாடுகளுடனான பிரச்னைகள் என அந்நாட்டு அரசுக்கு எத்தனையோ விவகாரங்கள் இருந்தாலும், அனைத்தையும் ஓரங்கட்டிவிட்டு, முழுமையாக இந்தியாவுக்குள் பயங்கரவாதத்தைப் பரப்ப வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வந்ததன் விளைவுதான் நேற்று பாகிஸ்தான் என்றொரு நாடு படும் பாடு.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தி.மு.க. தேர்தல் வாக்குறுதி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
25 Jan 2026சென்னை, தி.மு.க.வால் இனி ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கை கூட தி.மு.க.
-
இன்று 77-வது குடியரசு தினம்: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் இன்று கொடியேற்றுகிறாா்
25 Jan 2026சென்னை, இன்று 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் இன்று கொடியேற்றுகிறாா்.
-
இன்று 77-வது குடியரசு தினம்: தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
25 Jan 2026புதுடெல்லி, நாடு முழுவதும் குடியரசு தினம் இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை உள்பட நாடு முழுவதும் உச
-
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து-நடராசனுக்கு சிலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மரியாதை
25 Jan 2026சென்னை, மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு தாளமுத்து - நடராசன் நினைவிடத்தில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தின
-
டபுள் என்ஜின் எனக்கூறி ஏமாற்ற முடியாது: டெல்லியின் ஆதிக்கத்துக்கு தமிழ்நாடு தலைகுனியாது: காஞ்சிபுரத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை
25 Jan 2026காஞ்சிபுரம், டபுள் என்ஜின் எனக்கூறி இனி தமிழக மக்களை மத்திய அரசு ஏமாற்ற முடியாது என்றும் 7-வது முறையாக தமிழகத்தில் தி.மு.க.
-
உள்துறை அமைச்சர் அமித்ஷா 28-ம் தேதி தமிழ்நாடு வருகை
25 Jan 2026சென்னை, உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 28ம் தேதி தமிழகம் வருகிறார்.
-
வங்கதேசத்தில் பயங்கரம்: மேலும் ஒரு இந்து வாலிபர் உயிரோடு எரித்துக் கொலை
25 Jan 2026டாக்கா, வங்க தேசத்தில் மேலும் ஒரு இந்து வாலிபர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இழுபறி: கைப்பற்றிய பகுதிகளை திரும்பி தர ரஷ்யா மறுப்பு
25 Jan 2026அபுதாபி, அபுதாபியில் ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலைியல் கைப்பற்றிய பகுதிகளை ரஷ்யா திரும்பி தர மறுத்துள்ளதாக
-
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்க சிறப்பு முகாம்கள் நிறைவு
25 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்கள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், வரும் பிப்.17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
-
கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன்: பிரேமலதா விஜயகாந்த் தகவல்
25 Jan 2026திருச்செந்தூர், கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன் என்றும், தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் 2026 தேர்தல் நல்ல மாற்றத்தையும், வெற்றியையும் கொடுக்கும் என்ற
-
ஓ.பன்னீ செல்வத்தின் ஆதரவாளரான கு.ப.கிருஷ்ணன் த.வெ.க.வில் இணைந்தார்
25 Jan 2026சென்னை, த.வெ.க.வில் ஓ.பி.எஸ். ஆதரவாளரான அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் இணைந்துள்ளார்.
-
தமிழ் மொழியை உயிரெனக் காப்போம்: மொழிப்போர் தியாகிகளின் நினைவு நாளில் விஜய் பதிவு
25 Jan 2026சென்னை, ஒப்பற்ற நம் அன்னைத் தமிழை உயிரெனக் காப்போம் என்று மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு விஜய் தெரிவித்துள்ளார். மேலும் த.வெ.க.
-
ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக வாக்கு: இந்தியாவுக்கு ஈரான் நன்றி
25 Jan 2026தெஹ்ரான், ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்கள
-
நாட்டையே முடக்கிய கடும் பனிப்புயல்: அமெரிக்காவில் 13 ஆயிரம் விமானங்கள் சேவை ரத்து
25 Jan 2026நியூயார்க். அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில் இன்றும் பனிப்புயல் தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் ராணி வேலுநாச்சியாரின் கதையை சொன்ன விஜய்
25 Jan 2026சென்னை, த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் நிர்வாகிகளை ஊக்கும்விக்கும் வகையில் த.வெ.க. தலைவர் விஜய் ராணி வேலுநாச்சியார் பற்றி குட்டிக்கதை ஒன்று சொன்னார்.
-
எத்தனை கட்சிகள் வந்தாலும் தி.மு.க.வின் இண்டியா கூட்டணியை யாராலும் எதுவும் செய்ய முடியாது: அமைச்சர் ரகுபதி நம்பிக்கை
25 Jan 2026புதுக்கோட்டை, எத்தனை கட்சிகள் அந்த கூட்டணியில் வந்து சேர்ந்தாலும் தி.மு.க.
-
உள்ளூர் பொருட்களையே வாங்க வேண்டும்: கனடா மக்களுக்கு பிரதமர் கோரிக்கை
25 Jan 2026ஒட்டவோ, அதிபர் ட்ரம்ப் வரி மிரட்டல் காரணமாக கனடா பொருட்களையே வாங்க நாட்டு மக்களுக்கு பிரதமர் கார்னி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
இந்தியாவால் தேடப்படும் குற்றவாளிகள் வெளிநாடுகளில் பதுங்கி உள்ளனர்: மத்திய அரசு
25 Jan 2026புதுடெல்லி, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தேடப்படும் பட்டியலில் உள்ள 70 இந்தியக் குற்றவாளிகள் 2024-25 ஆண்டுகளுக்கு இடையில் வெளிநாடுகளில் இருப்பது கண்டறியப்பட்டுள
-
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே இன்று தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
25 Jan 2026தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே 200 ஏக்கரில் மிக பிரமாண்டமாக "வெல்லும் தமிழ் பெண்கள்" என்ற தலைப்பில் தி.மு.க.
-
சீனாவுடன் தொடரும் உறவு: கனடாவுக்கு 100 சதவீத வரி மிரட்டல் விடுத்தார் ட்ரம்ப்
25 Jan 2026நியூயார்க், சீனாவுடன் உறவு வைத்துக் கொண்டால் கனடாவுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
-
தமிழகத்தில் அன்றும், இன்றும், என்றும் இந்திக்கு இடமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
25 Jan 2026சென்னை, அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு தமிழகத்தில் இடமில்லை என்று மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழுக்காகத் தங
-
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக காவல்துறை அதிகாரிகள், பணியாளர்களுக்கு பதக்கங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
25 Jan 2026சென்னை, 2026-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வரின் மெச்சத்தக்க நுண்ணறிவுப் பதக்கம் மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பதக்கம்’ வழங்க மு.க.ஸ்டாலின் ஆ
-
சேலத்தில் கால்பந்து விளையாடியபோது மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
25 Jan 2026சென்னை, சேலத்தில் விளையாடிக்கொண்டு இருந்தபோது கால்பந்து விளையாடியபோது மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டால
-
தமிழர்களின் நாகரிகம், தோற்றம் அறிவியல் பூர்வமாக நிரூபணம்: தொல்லியல் கருத்தரங்கில் தகவல்
25 Jan 2026மதுரை, தமிழர்களின் நாகரிகம், தோற்றம் அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆகியுள்ளதாக மதுரையில் நடந்த தொல்லியல் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –27-01-2026
26 Jan 2026


