எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சிம்லா : கடந்த இரண்டரை ஆண்டுகளில் இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் 1,200 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் ரோஹித் தாக்கூர் தெரிவித்தார்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள இமாச்சலப் பிரதேச கல்வி அமைச்சர் ரோஹித் தாக்கூர், “கடந்த இரண்டரை ஆண்டுகளில் மூடப்பட்ட 1,200 பள்ளிகளில் 450 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாக இருந்ததால் மூடப்பட்டன. மற்றவை குறைந்த மாணவர் சேர்க்கை காரணமாக இணைக்கப்பட்டன.
6 முதல் 12-ஆம் வகுப்பு வரை 25-க்கும் குறைவான மாணவர் சேர்க்கை இருந்தால், அந்த பள்ளிகளை மற்றொரு பள்ளியுடன் இணைப்பதற்கான அளவுகோல் பராமரிக்கப்பட்டு வருகிறது. மாநில அரசு காலியாக உள்ள பணியிடங்களையும் நிரப்பி வருகிறது. முந்தைய பா.ஜ.க. ஆட்சியின் போது கல்வித் துறையில் ஆட்சேர்ப்பு செயல்முறை நிறுத்தப்பட்டது, ஆனால், தற்போதைய அரசு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதன் மூலம் கல்வித் துறையை வலுப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ஜனவரி 2025-இல் வெளியிடப்பட்ட 'ஆண்டு கல்வி நிலை அறிக்கை'யின்படி, இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன் நாட்டிலேயே சிறந்ததாக இருந்தது. இந்த கணக்கெடுப்பின் பெரும்பாலான அளவுருக்களின்படி, இமாச்சலப் பிரதேசம் நாடு தழுவிய அளவில் பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக மதிப்பிடப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


