எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிங்கப்பூர், தமிழ் மொழியை மாணவர்கள் அடுத்த 50 ஆண்டுகளுக்கு துடிப்புடன் வைத்திருக்க வேண்டும் என சிங்கப்பூர் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழி சங்கத்தின் 50-வது ஆண்டு நிறைவு விழாவில், மாணவர்களிடம் கே.சண்முகம் பேசியதாவது;- "அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழைத் துடிப்பாக வைத்திருக்க, உங்களைப் போன்ற இளைய தலைமுறையினர் எங்களுக்கு தேவை. அடுத்த 20 அல்லது 30 ஆண்டுகளுக்குப் பிறகு, மேடையில் சரளமாக தமிழ் பேசக்கூடிய அமைச்சர்கள் நம்மிடம் இருப்பார்களா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.
தமிழை பேசாதவர்கள், இனி வரும் காலங்களில் தமிழை மரியாதைக்குரிய மொழியாக கருதுவார்களா? என்றும் நாம் நம்மை கேட்டுக்கொள்ள வேண்டும். பிற மொழிகளை பேசுபவர்களுக்கு தமிழ் மொழி எளிதில் அணுகக்கூடிய ஒன்றாகவும், ஈடுபாட்டுடன் பேசக்கூடிய மொழியாகவும் இருக்க வேண்டும். வகுப்பறைகள் மற்றும் சமூக மையங்களுக்கு வெளியே உள்ள இடங்களிலும் தமிழ் மொழி இடம்பெற வேண்டும். பல இளைஞர்கள் பெரும்பாலும் ஆங்கிலம் பேசுகிறார்கள். இது தமிழ் மொழியை மட்டுமல்ல, மாண்டரின் மற்றும் மலாய் போன்ற பிற மொழிகளையும் பாதிக்கும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


