எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவித்துள்ளார் . ஜூன் 17ம் தேதி தொடங்கும் வங்காளதேசத்தத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் ஏஞ்சலோ மேத்யூஸ் ஓய்வு பெறுகிறார். இலங்கை அணி நிர்வாகம் விரும்பும் பட்சத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடத் தயார் எனவும் விளக்கமளித்துள்ளார்.
118 டெஸ்ட் போட்டிகளில், மேத்யூஸ் 44.62 சராசரியுடன் 8,167 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 16 சதங்கள் மற்றும் 45 அரைசதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 200 ரன்கள் ஆகும். டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்காக அதிக ரன்கள் குவித்த 3வது வீரராக ஏஞ்சலோ மேத்யூஸ் உள்ளார்.
ஹம்பர்க் ஓபன்: ரூப்லெவ் முன்னேற்றம்
ஜெர்மனியில் ஹம்பர்க் ஓபன் ஆண்கள் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது . இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், இத்தாலியின் லூசியானோ டர்டேரி உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக ஆடிய ரூப்லெவ் 6-1, 3-6, 6-3 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரையிறுதியில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் உடன் ரூப்லெவ் மோதுகிறார்.
கிரிக்கெட் மைதானம் திறப்பு
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் செங்குன்றம் அடுத்த எடப்பாளையத்தில் கோஜன் கிரிக்கெட் மைதானம் திறக்கப்பட்டுள்ளது. புதிய வளாகத்தில் 4 மைதானங்கள், 3 டா்ப் வசதிகள் உள்ளன. வலைப் பயிற்சிக்காக 10 டா்ஃப் விக்கெட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவா் பி. அசோக் சிகாமணி தலைமை வகித்தாா். முன்னாள் இந்திய வீரா்கள் வி.வி. குமாா், சத்விந்தா் சிங் ஆகியோா் புதிய மைதானங்களை திறந்து வைத்தனா். திருவள்ளூா் ஆட்சியா் மு. பிரதாப், கோஜன் கல்விக் குழும தலைவா் ஜி. நடராஜன், துணைத் தலைவா் என். விஸ்வநாதன் முன்னிலை வகித்தனா். டி.என்.சி.ஏ. துணைத் தலைவா் ஆடம் சேட், செயலாளா் ஆா்.ஐ. பழனி, பொருளாளா் டிஜே. சீனிவாசராஜ், இணைச் செயலாளா் ஆா்.என். பாபா ஆகியோா் பங்கேற்றனா்.
ஆர்.சி.பி.: பில் சால்ட் விலகல்
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன. இந்த நிலையில் லக்னோவில் நேற்று நடைபெற்ற 65-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை எதிர்கொண்டது.
இந்நிலையில் பெங்களூரு அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு சில தினங்களில் குழந்தை பிறக்கவுள்ளதால் பிளே ஆப் சுற்றை தவறவிடுகிறார். இந்த முறையாவது ஆர்.சி.பி. அணி கோப்பையை வெல்வதற்கு உத்வேகத்தில் இருக்கும் நிலையில் இவரது விலகல் ஆர்.சி.பி. அணிக்கு பின்னடைவாக இருக்கும். இவர் நடப்பு தொடரில் 9 போட்டிகள் விளையாடி 239 ரன்கள் குவித்துள்ளார்.
மீண்டும் ஜோஸ் ஹேசில்வுட்?
ஐ.பி.எல். 18-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் நான்கு நாள்களில் லீக் சுற்று போட்டிகள் முடிவடைய உள்ளன. குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் காயம் காரணமாக கடந்த சில போட்டிகளாக அந்த அணிக்காக விளையாடவில்லை.
இந்த நிலையில், தோள்பட்டை காயத்திலிருந்து குணமடைந்துள்ள ஜோஸ் ஹேசில்வுட் பிளே ஆப் சுற்றுக்காக ஆர்சிபி அணியுடன் மீண்டும் இணைய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுவது முக்கியத்துவம் பெறுகிறது. பிளே ஆப் சுற்று வருகிற மே 29 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், ஜோஸ் ஹேசில்வுட் ஆர்சிபியுடன் மீண்டும் இணைந்தால், அந்த அணிக்கு அது கூடுதல் பலமாக அமையும். நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஆர்சிபிக்காக அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஸ் ஹேசில்வுட் 19 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 3 weeks ago |
-
அனைத்து மாற்றுத்திறனாளிகள் சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா
20 Jun 2025சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் முதல் நிகழ்ச்சியாக இன்று அனைத்து மாலை மாற்றுத்திறனாளிகள் பயன்தரத்தக்க வகையில் 60-க்கும் மேற்பட்ட அரசாணைகளை பிறப்பித்த முதல்வர் மு.க.ஸ்டாலின
-
உயர்கல்வித்துறை சார்பில் தமிழ்நாட்டில் மேலும் நான்கு புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
20 Jun 2025சென்னை, உயர்கல்வித்துறை சார்பில் தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
-
திட்டங்களின் செயல்பாடு குறித்து நான்கு துறை அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
20 Jun 2025சென்னை, அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து வருவாய் பேரிடர் மேலாண்மை துறை, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம்
-
ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்
20 Jun 2025சென்னை, ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை பொதுமக்களின் பார்வைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார்.
-
தங்கம் விலை சரிவு
20 Jun 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூன் 20) பவுனுக்கு ரூ.440 என குறைந்து விற்பனையானது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.73,680-க்கு விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-06-2025.
21 Jun 2025 -
நமது கலாச்சாரம், பண்பாட்டின் அடையாளம் முருகப்பெருமான்: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேட்டி
21 Jun 2025மதுரை, மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது.
-
ஈரானின் முக்கிய தளபதி கொலை: இஸ்ரேல் அறிவிப்பு
21 Jun 2025தெஹ்ரான், ஈரானின் புரட்சிகர காவல்படை ட்ரோன் படைப் பிரிவின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
-
பீகாரில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1,100 ஆக உயர்வு: நிதிஷ்
21 Jun 2025பீகார், பீகாரில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.400-ல் இருந்து ரூ.1
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
21 Jun 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூன் 21) பவுனுக்கு ரூ.200 என உயர்ந்து விற்பனையானது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.73,880-க்கு விற்பனை ஆகிறது.
-
ட்ரம்ப் நினைத்தால் போரை முடிவுக்கு கொண்டுவரலாம்: ஈரான் அதிபரின் ஆலோசகர் கருத்து
21 Jun 2025தெஹ்ரான், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நினைத்தால், ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் மோதலை நிறுத்த முடியும் என ஈரான் தெர
-
உலகத்தை இணைத்த யோகா: விசாகப்பட்டினம் யோகா தினம் நிகழ்வில் பிரதமர் மோடி பேச்சு
21 Jun 2025விசாகப்பட்டினம், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நேற்று (ஜூன் 21) ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் மாபெரும் அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
-
புதுப்பொலிவு கண்ட வள்ளுவர் கோட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
21 Jun 2025சென்னை, வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வந்தே தீரும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
21 Jun 2025சென்னை : சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை சார்பில் சர்வதேச யோகா
-
போர் நடைபெறும் ஈரானில் இருந்து நேபாளம், இலங்கை மக்களையும் வெளியேற்ற இந்திய அரசு முடிவு
21 Jun 2025புதுடெல்லி, நேபாளம் மற்றும் இலங்கை அரசாங்கங்களின் வேண்டுகோளின் பேரில் அந்நாடுகளின் குடிமக்களை ஈரானில் இருந்து வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்தியா தெரிவி
-
சிற்றுந்துகள் திட்டத்தால் 1 கோடி மக்கள் பயணம்: தமிழ்நாடு அரசு பெருமிதம்
21 Jun 2025சென்னை, மினி பேருந்து திட்டத்தால் இதுவரை பஸ் வசதி கிடைக்காத 90 ஆயிரம் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏறத்தாழ 1 கோடி மக்கள் பயணம் செய்து அளவில்லாத மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள
-
போர் பதற்றம் சூழ்ந்த ஈரானிலிருந்து இந்தியர்கள் 1000 பேரை அழைத்து வர ஏற்பாடு
21 Jun 2025புதுடெல்லி : போர் பதற்றம் சூழ்ந்த ஈரானிலிருந்து மேலும் 1000 இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
இந்தியா - பாக். போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் கிடைக்காது: ட்ரம்ப் ஆதங்கம்
21 Jun 2025வாஷிங்டன் : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது.
-
யோகா தின நிகழ்ச்சியில் ஆந்திரா 2 உலக சாதனைகள்: சந்திரபாபு நாயுடு பெருமிதம்
21 Jun 2025அமராவதி : யோகா தின நிகழ்ச்சியில் ஆந்திராவில் 2 உலக சாதனை படைத்துள்ளது என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
21 Jun 2025தர்மபுரி : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
இஸ்ரேல் - ஈரான் போரால் அங்கு சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவிகளை வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
21 Jun 2025சென்னை, இஸ்ரேல் - ஈரான் இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக அந்நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உடனடியாக அவர்களுக்கு தேவைப்
-
அகமதாபாத் விமான விபத்து எதிரொலி: 3 முக்கிய அதிகாரிகளை நீக்க ஏர் இந்தியாவுக்கு அறிவுறுத்தல்
21 Jun 2025புதுடெல்லி, அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தி வரும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ), விமானக் குழுவினரை திட்டமிடுவது, இயக்குவது
-
உடல்நலக்குறைவால் வால்பாறை எம்.எல்.ஏ., காலமானார்
21 Jun 2025கோவை : வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி, 60, நேற்று உடல்நலக்குறைவால் காலமானார்.
-
இஸ்ரேலிடம் போரை நிறுத்த சொல்வது மிகவும் கடினம் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து
21 Jun 2025வாஷிங்டன் : இஸ்ரேல் போர் நிறுத்த சொல்வது கடினம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
-
ஆபரேஷன் சிந்து மூலம் ஈரானிலிருந்து 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
21 Jun 2025இஸ்ரேல் : ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் மூலம், ஈரானிலிருந்து சுமார் 517 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.