எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, பிரேசில், கானா, நமீபியா உட்பட 27 நாடுகளின் உயரிய விருதுகளைப் பெற்றிருப்பதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்த்திருக்கிறார் என்று ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பவன் கல்யாண் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் சுற்றுப் பயணத்தின்போது பிரேசில், கானா, நமீபியா ஆகிய நாடுகளின் மிக உயர்ந்த சிவில் விருதுகளைப் பெற்றுள்ளார். இதன் மூலம், இதுவரை 27 உலக நாடுகளின் மிக உயரிய சிவில் விருதுகளைப் பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, உலகின் பெரிய மற்றும் சிறிய நாடுகளுடன் வலுவான ராஜதந்திர உறவுகளை வளர்த்து வருவதன் மூலம், இந்தியாவின் உலகளாவிய நிலையை மாற்றியுள்ளார். பிரமதர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமை உலகின் 4-வது பெரிய பொருளாதாரமாக இந்தியாவை மாற்றி உள்ளது. அதோடு, ஆபரேஷன் சிந்தூர் போன்ற முக்கிய தருணங்களில் சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் மரியாதையையும் நாடு பெற்றது.
தனது அரிய சாதனைகள் மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கிறார். மிக உயர்ந்த தலைமைப் பண்பு மற்றும் ராஜதந்திர திறன்கள் மூமல் ஒரு முன்மாதிரியான அரசியல் தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார்.” என பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


