எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் இந்தியாவின் 2-வது பாகன் கிராமத்தை திறந்து வைத்து, 6 நபர்களுக்கு காவடி பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிக்கமுத்தி யானைகள் முகாமில், பாகன்கள் மற்றும் யானை பராமரிப்பாளர்களின் நலனுக்காக 5.40 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 47 பணியாளர் குடியிருப்புகள் கொண்ட இந்தியாவின் இரண்டாவது யானை பாகன் கிராமத்தை திறந்து வைத்தார். மேலும், யானைகளை பராமரிக்கும் காவடி பணியிடங்களுக்கு 6 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காட்டில் இந்தியாவின் முதல் யானை பாகன் கிராமம் 13.5.2025 அன்று முதல்வரால் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, யானைகளின் பராமரிப்பு மற்றும் தோழமைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் பாகன்கள் மற்றும் காவடிகளின் தன்னலமற்ற சேவை அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதன் தொடர்ச்சியாக, கோழிக்கமுத்தி யானைகள் முகாமில், பாகன்கள் மற்றும் யானை பராமரிப்பாளர்களின் நலனுக்காக 5.40 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 47 பணியாளர் குடியிருப்புகள் கொண்ட இந்தியாவின் இரண்டாவது யானை பாகன் கிராமத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இந்தியாவின் பழமையான யானை முகாமில் ஒன்றான கோழிக்கமுத்தி யானைகள் முகாம், யானை மேலாண்மையில் பல தலைமுறைகளாக பாரம்பரிய அறிவைப் பெற்ற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த யானைப் பாகன்களின் இருப்பிடமாகும். இந்த முகாமில் தற்போது 24 யானைகள் உள்ளன. முதல்வரின் வழிகாட்டுதலின்படி, இம்முகாம்களில் பாதுகாப்பு விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக யானைகளைப் பார்க்கும் காட்சியகம் மற்றும் பார்வையாளர் நடைபாதை போன்ற நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு முன்னோடி முயற்சியாக, மாநில திட்டக்குழு நிதியிலிருந்து இம்முகாமில் 3.50 கோடி ரூபாய் செலவில் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு கொண்ட சூரிய சக்தியில் இயங்கும் மைக்ரோ-கிரிட் நிறுவப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் 124 கி.வாட். சூரிய சக்தி ஆலை, 516 கி.வாட். பேட்டரி வங்கி மற்றும் 100 கி.வாட் இன்வெர்ட்டர் ஆகியவை அடங்கும், இது யானை முகாம் மற்றும் 47 யானைப் பாதுகாவலர் வீடுகளுக்கு தடையற்ற பசுமை மின்சார விநியோகத்தை உறுதி செய்கிறது. மேகமூட்டமான அல்லது மழைக்காலங்களிலும் இந்த அமைப்பு இரண்டு நாட்கள் மின்னாற்றலை வழங்குகிறது, இது அக்கிராமத்தை பசுமை மின்சாரம், நிலையான வாழ்க்கை மற்றும் இயற்கையுடன் இணக்கமான ஒரு வாழ்க்கை மாதிரியாக மாற்றுகிறது. இது நாட்டில் புலிகள் காப்பக நிர்வாகத்தில் சிறந்த நடைமுறைகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம் ஆகியவற்றில் காலியாகவுள்ள காவடி பணியிடங்களை நிரப்பிடும் வகையில் 6 நபர்களுக்கு முதல்வர் நேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
மதுரை, நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கம்
05 Oct 2025சென்னை : தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
-
பொங்கல் பண்டிகைக்குள் 20 புதிய அரசு வால்வோ சொகுசு பேருந்துகளை இயக்க ஏற்பாடு
05 Oct 2025சென்னை : தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் முதல் முறையாக 20 வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகள் பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
-
ராமதாஸ், வைகோவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்
06 Oct 2025சென்னை : உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க.
-
கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறார்: த.வெ.க நிர்வாகிகளிடம் விஜய் ஆலோசனை
06 Oct 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அந்த நேரத்தில், திடீர் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.
-
நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பீகார் சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தல்
06 Oct 2025புதுடெல்லி : பீகார் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.
-
ஓரிரு நாளில் ராமதாஸ் வீடு திரும்புவார் : மருத்துவமனை அறிக்கை
06 Oct 2025சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் உடல்நிலைக் குறித்து அப்பல்லோ மருத்துவமனை திங்கள்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
வழக்குகளில் தீர்ப்பு வழங்கியதற்காக நீதிபதிகள் மீது மோசமான விமர்சனம் : உயர்நீதிமன்ற நீதிபதி ஆதங்கம்
06 Oct 2025சென்னை : வழக்குகளில் தீர்ப்பு வழங்கியதற்காக நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பின்புலம் குறித்து சமூக வளைதளத்தில் மோசமாக விமர்சிக்கப்படுவதாக சென்னை உயர்நீதி
-
சென்னைக்கு திரும்பிய மக்கள்: பெருங்களத்தூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
06 Oct 2025சென்னை : விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பிய மக்களால் பெருங்களத்தூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
-
சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவால் மீண்டும் தமிழக அமைச்சராக செந்தில் பாலாஜிக்கு வாய்ப்பு
06 Oct 2025புதுடெல்லி : நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து அனுமதி பெற்ற பிறகு செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகலாம் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளதை அடுத்து அவர் மீண்டும் அ
-
இந்தியாவின் 2-வது யானை பாகன் கிராமம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
06 Oct 2025சென்னை : ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் இந்தியாவின் 2-வது பாகன் கிராமத்தை திறந்து வைத்து, 6 நபர்களுக்கு காவடி பணியிடங்களுக்கான பணி நியம
-
"காந்தாரா" திரை விமர்சனம்
06 Oct 2025காந்தாரா வனப்பகுதியை கைப்பற்ற அதன் அருகே இருக்கும் நாட்டின் அரசர் முயற்சிக்கிறார்.
-
இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
06 Oct 2025சென்னை : இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-10-2025.
06 Oct 2025 -
’சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு’ அன்புக்கரங்கள் திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
06 Oct 2025சென்னை : ’சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு’ என்று அன்புக்கரங்கள் திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
-
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் : செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிப்பு
06 Oct 2025நாகப்பட்டினம் : மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி ஜி.பி.எஸ் கருவி, இகோ சவுண்டர், 5 செல்போன்கள் மீன்பிடி வலை உள்ளிட்ட பொருட்களை பறித்து சென்ற சம்பவ
-
உ.பி.யில் 'கோல்ட்ரிப்' மருந்துக்கு தடை
06 Oct 2025லக்னோ : குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான கோல்ட்ரிஃப் இருமல் சிரப்பை பயன்படுத்த உத்தரப் பிரதேச அரசு தடை விதித்துள்ளதாக அம்மாநில துணை முதல்வர் பிரஜேஷ் பதக் அறிவித்தார்
-
பிரான்ஸ் பிரதமர் ராஜினாமா
06 Oct 2025பாரீஸ் : பிரான்ஸ் பிரதமர் ஜெபஸ்டியன் லெகோர்னு 2025 செப்டம்பர் 9 -ம் தேதி பிரான்சின் 47வது பிரதமராக பதவியேற்கப்பட்டு வெறும் 27 நாட்களே ஆகியுள்ள நிலையில் இவர் தனது
-
இந்தோனேசியாவில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 50-ஐ தாண்டியது
06 Oct 2025சிடோர்ஜோ : கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 29) இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளது.
-
2025-மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு : ஜப்பானியர் - 2 அமெரிக்கர்களுக்கு பகிர்ந்தளிப்பு
06 Oct 2025படத்துடன்....
2-nd - Model
-
இட்லி கடை திரை விமர்சனம்
06 Oct 2025தனுஷ், படித்து விட்டு வெளிநாட்டுக்கு செல்கிறார்.
-
காசா போர் நிறுத்த திட்டத்தை விரைவாக செயல்படுத்துங்கள் : இஸ்ரேல் - ஹமாசுக்கு ட்ரம்ப் அறிவுறுத்தல்
06 Oct 2025நியூயார்க் : காசா போர் நிறுத்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று இஸ்ரேல் - ஹமாசுக்கு அதிபர் ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.
-
ஜனாதிபதி திரெளபதி முர்மு 22-ம் தேதி சபரிமலை வருகை : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
06 Oct 2025திருவனந்தபுரம் : ஜனாதிபதி திரெளபதி முர்பு இந்த மாதம் சபரிமலைக்கு வருகிறார். இதற்காக அவர் விமானம் மூலமாக வருகிற 22-ம் தேதி மதியம் கொச்சி வருகிறார்.
-
'ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை' இந்தி மொழிபெயர்ப்பு நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
06 Oct 2025சென்னை : ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய ‘சப்யாதா கி யாத்ரா: சிந்து சே வைகை’ (ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை) இந்தி மொழிபெயர்ப்பு நூலை
-
ஐ.சி.யு.வில் இருந்ததால் ராமதாஸை பார்க்க முடியவில்லை: அன்புமணி
06 Oct 2025சென்னை : சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் மகனும், பா.ம.க.
-
கோவில் பணியாளர்களுக்கு ஓய்வூதிய உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
06 Oct 2025சென்னை : திருக்கோவில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் ரூ.5,000 மற்றும் உயர்த்தப்பட்ட குடும்ப ஓய்வூதியம் ரூ.2,500 ஆகியவற்றை முதல்வர்