எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
அகமதாபாத் : அகமதாபாத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 10ம் தேதி தொடங்குகிறது.
சுற்றுப்பயணம்...
ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. அதன்படி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 44.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் சிராஜ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
286 ரன்கள் பின்னிலை...
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 2ம் நாள் முடிவில் 128 ஓவரில் 5 விக்கெட்டை 448 ரன்கள் குவித்திருந்தது. இந்தியா தரப்பில் ஜடேஜா 104 ரன்னுடனும், வாஷிங்டன் சுந்தர் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா நேற்று வரை 286 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில், நேற்று 3ம் நாள் ஆட்டம் நடந்தது. நேற்றைய ஆட்டம் தொடங்கும் முன்னரே இந்திய அணி தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதன் காரணமாக 286 ரன்கள் பின்னிலையுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. ஜான் கேம்பல் மற்றும் டேகனரின் சந்தர்பால் களம் புகுந்தனர். இதில் டேகனரின் சந்தர்பால் 8 ரன்னிலும், ஜான் கேம்பல் 14 ரன்னிலும் அவுட் ஆகினர்.
146 ரன்னுக்கு அவுட்...
இதையடுத்து களம் புகுந்த அலிக் அதனேஸ் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இதில் பிரண்டன் கிங் 5 ரன், ரோஸ்டன் சேஸ் 1 ரன், ஷாய் ஹோப் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். தொடர்ந்து ஜஸ்டின் கிரீவ்ஸ் களம் புகுந்தார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது 2வது இன்னிங்சில் 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 146 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், சிராஜ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 10ம் தேதி தொடங்குகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-10-2025.
04 Oct 2025 -
தங்கம் விலை மீண்டும் உயர்வு
04 Oct 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
நடிகர் ரஜினியை போன்று விஜய்யும் அரசியலில் இருந்து பின்வாங்குவார் : எஸ்.வி.சேகர் பேட்டி
04 Oct 2025சென்னை : ரஜினிகாந்தை போன்று விஜய்யும் அரசியலில் இருந்து பின்வாங்கி விடுவார் என்று எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உண்மை விரைவில் வெளியே வரும்: டேராடூனில் ஆதவ் அர்ஜுனா பேட்டி
04 Oct 2025டேராடூன் : கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உண்மை விரைவில் வெளியே வரும் என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.
-
தீபாவளியை முன்னிட்டு இன்றும், நாளையும் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம்
04 Oct 2025சென்னை : தீபாவளியை முன்னிட்டு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
அண்ணாமலை டெல்லி பயணம்
04 Oct 2025கோவை : தமிழக பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் காலை கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.
-
கரூர் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் முழு உண்மையை அரசு வெளிக்கொண்டு வரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
04 Oct 2025சென்னை, மாநிலம் முழுவதும் துறைசார் வல்லுநர்கள், அரசியல் கட்சியினர், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என அனைவரோடும் கலந்தாலோசித்து ஒரு முழுமையான 'நிலையான வழிகாட்டு நெறிமுறை
-
காசா அமைதி ஒப்பந்தம்: அதிபர் ட்ரம்பின் நடவடிக்கையை வரவேற்கிறோம்: பிரதமர் மோடி
04 Oct 2025புதுடெல்லி : காசா அமைதி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அதிபரின் தலைமைத்துவத்தை வரவேற்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
உலக வரைபடத்தில் இருந்து அழித்து விடுவோம்: பாக்.கிற்கு இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை
04 Oct 2025ஜெய்ப்பூர் : பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து த.வெ.க. சார்பில் ஆறுதல்
04 Oct 2025கரூர் : கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவின் பேரில், உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினரை முதன்முறையாக த.வெ.க.
-
மதுரை, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை
04 Oct 2025சென்னை : தமிழகத்தில் திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
கரூர் நெரிசல் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் ஆய்வு
04 Oct 2025கரூர் : கரூர் வேலுசாமிபுரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார்.
-
கலைஞர் பல்கலை., மசோதா விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் கவர்னருக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு
04 Oct 2025புதுடெல்லி : கலைஞர் பல்கலைக்கழக மசோதா விவகாரத்தில் கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
-
வடகிழக்கு பருவமழையின் முதல் சூறாவளி: அரபிக்கடலில் உருவான 'சக்தி' புயல்
04 Oct 2025புதுடெல்லி : வடகிழக்கு பருவமழையின் முதல் சூறாவளியாக அரபிக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது புயலாக உருவாகி உள
-
கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் கைது செய்யப்படுவாரா? அமைச்சர் துரைமுருகன் பதில்
04 Oct 2025வேலூர், 'நாங்கள் யாரையும் அநாவசியமாக கைது செய்யமாட்டோம். ஆனால், ஆதாரங்கள் இருந்து, தவிர்க்க முடியாமல் இருந்தால் கைது செய்வோம்.
-
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா- பாக்., இன்று மோதல்
04 Oct 2025கொழும்பு : கொழும்பில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் 6-வது லீக் போட்டியில் ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய மகளிர் அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
-
கனிமொழி எம்.பி. வீடு உள்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
04 Oct 2025சென்னை : சென்னையில் கனிமொழி எம்.பி. வீடு உள்பட 7 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
மும்பையில் சர்வதேச விமான நிலையம்: வரும் 8-ம் தேதி பிரதமர் திறந்து வைக்கிறார்
04 Oct 2025மும்பை : வரும் 8-ம் தேதி மும்பையில் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணி கேப்டனாக சுப்மன் கில் நியமனம்
04 Oct 2025மும்பை : ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிக்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
அகமதாபாத் முதல் டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
04 Oct 2025அகமதாபாத் : அகமதாபாத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
-
டி20 தொடரை வென்ற ஆஸ்திரேலியா
04 Oct 2025நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
-
உயர் நீதிமன்றம் உத்தரவு எதிரொலி: நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு
04 Oct 2025நாமக்கல், உயர் நீதிமன்றம் உத்தரவு காரணமாக நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
-
குறை கூறுவதற்கு எதுவும் இல்லை: அகமதாபாத் டெஸ்ட் வெற்றி குறித்து கேப்டன் கில் கருத்து
04 Oct 2025அகமதாபாத் : அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் குறை கூறுவதற்கு என்று எதுவும் இல்லை. அனைத்து வீரர்களுமே தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கினர் என சுப்மன் கில் கூறினார்.
-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
04 Oct 2025மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
-
கரூர் சம்பவத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுபடி சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை தொடங்கியது
04 Oct 2025கரூர் : கரூர் சம்பவத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுபடி ஐ.ஜி.அஸ்ராகார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் நேற்று விசாரணை தொடங்கினர்.