எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி,பிப்.21 - கூட்டுக் குழு பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்ட நிலையில் பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது - 25 ம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கல்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வந்த விவகாரத்தில் கிட்டத்தட்ட ஒரு தீர்வு ஏற்பட்டு விட்ட சூழ்நிலையிலும் பரபரப்பான சூழ்நிலையிலும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. முதல் நாளான இன்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார். 25 ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 28 ம் தேதி மத்திய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது.
ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை நாட்டுக்கு ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ஜே.பி.சி. எனப்படும் பாராளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க, பாரதீய ஜனதா போன்ற கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதன் காரணமாக கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரே முற்றிலுமாக ஸ்தம்பித்துப் போனது. அந்த கூட்டத் தொடரில் எந்த அலுவல்களுமே நடக்கவில்லை. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலும் இந்த பிரச்சினையை எழுப்புவோம். விட மாட்டோம் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் ஆளும் அரசு அரண்டு போனது.
இதையடுத்து கூட்டுக் குழு விவகாரத்தில் மத்திய அரசு ஒரு முடிவுக்கு வந்து விட்டது. வரும் புதன் கிழமைக்குள் அதாவது 23 ம் தேதிக்குள் கூட்டுக் குழு அமைப்பது பற்றி மத்திய அரசு ஒரு முடிவுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக 23 ம் தேதியன்று ஜே.பி.சி. பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலை பிரதமர் மன்மோகன்சிங், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சல் ஆகியோர் சூசகமாக தெரிவித்து விட்டனர். ஆகவே ஜே.பி.சி. விவகாரத்தில் கிட்டத்தட்ட ஒரு முடிவு ஏற்பட்டு விட்டது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இந்த கூட்டத் தொடரை அமைதியாக, சுமூகமாக நடத்துவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன் நேற்றும் சபாநாயகர் மீராகுமார் ஆலோசனை நடத்தினார். ஏற்கனவே இவர் பலமுறை இது போன்ற ஆலோசனைகளை நடத்தி விட்டார். அப்போது எதிர்க்கட்சிகள் எல்லாம் கூட்டுக் குழு அமைப்பதுதான் ஒரே தீர்வு என்று வலியுறுத்தின. அதன் எதிரொலியாகத்தான் மத்திய அரசும் பணிந்து விட்டது. இந்த சூழலில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது.
இது இந்த ஆண்டில் நடைபெறும் முதலாவது கூட்டத் தொடராகும். பொதுவாக ஆண்டின் முதல் கூட்டத் தொடரின் முதல் நாளன்று இரு சபைகளும் அடங்கிய கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவது வழக்கம். அந்த மரபுப்படி இன்று பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரதீபா உரையாற்றுகிறார். அவர் ஆற்றும் உரைக்கு மத்திய மந்திரி சபை ஏற்கனவே ஒப்புதலும் அளித்து விட்டது. இந்த கூட்டத் தொடர் மார்ச் 14 ம் தேதி வரை ஒரு பகுதியாகவும், ஏப்ரல் 4 ம் தேதி முதல் 21 ம் தேதி வரை 2 வது பகுதியாகவும் நடைபெறுகிறது. முதல் பகுதியில் 17 அமர்வுகளும், இரண்டாவது பகுதியில் 12 அமர்வுகளும் இடம் பெறும். வழக்கமாக, பட்ஜெட் கூட்டத் தொடர் நீண்ட நாட்கள் நடக்கும். ஆனால் இப்போது தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் நெருங்குவதால் பட்ஜெட் கூட்டத் தொடரின் நாட்கள் சுருக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற 25 ம் தேதியன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்கிறார். சட்டசபை தேர்தல் வருவதால் ரயில் கட்டணம் உயராது என்று அடித்துச் சொல்லலாம். வரும் 28 ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்கிறார். சட்டசபை தேர்தல் நெருங்குவதால் நிச்சயம் புது வரிகள் இருக்காது. மேலும் வருமான வரி விலக்கு உச்சவரம்பும் ரூ 2 லட்சமாக உயரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல சலுகைகளும் இருக்கலாம். இந்த கூட்டத் தொடரில் ஜி.எஸ்.டி. மசோதா உட்பட பல முக்கிய மசோதாக்கல் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
நடிகர் விஜய்யை விட அரசியல் விஜய் மிகவும் சக்திவாய்ந்தவர்: த.வெ.க. நிர்வாகி அருண் ராஜ் பேட்டி
21 Dec 2025கோவை, விஜய் இப்போது நடிகர் அல்ல என்றும் நடிகர் விஜய்யை விட அரசியல் விஜய் மிகவும் சக்திவாய்ந்தவர் என்றும் த.வெ.க.
-
நீலகிரி மாவட்டத்தில் இன்று உறைபனி ஏற்பட வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
21 Dec 2025சென்னை, தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ள சென்னனை வானிலை ஆய்வு மையம், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று உறைபனி ஏற
-
தமிழர்களின் வரலாற்றை விட்டுக்கொடுக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
21 Dec 2025நெல்லை, தமிழர்களின் வரலாற்றை விட்டுக்கொடுக்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-12-2025.
21 Dec 2025 -
பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்வர் விரைவில் அறிவிப்பார்: செந்தில்பாலாஜி தகவல்
21 Dec 2025கோவை, பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
செவிலியர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
21 Dec 2025சென்னை, செவிலியர்களின் சில கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடர்கிறோம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தகவல்
21 Dec 2025புதுச்சேரி, தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போதுவரை தொடர்கிறோம் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
-
உக்ரைன் போர் முடிவுக்கு வருமா...? அமெரிக்கா-ரஷ்யா பேச்சுவார்த்தை
21 Dec 2025வாஷிங்டன், உக்ரைன் , ரஷ்யா இடையே நேற்று 1 ஆயிரத்து 396வது நாளாக போர் நீடித்த நிலையில், போரை நிறுத்த அமெரிக்கா - ரஷ்யா அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
நெல்லைக்கு 3 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
21 Dec 2025நெல்லை, ரூ.16 கோடி செலவில், அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய மகளிர் தங்கும் விடுதி உள்ளிட்ட திருநெல்வேலி மாவட்டத்திற்கு 3 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளி
-
பூமியின் சுழற்சியிலிருந்து மின்சாரம் தயாரித்த அமெரிக்க விஞ்ஞானிகள்..!
21 Dec 2025நியூயார்க், பூமியின் சுழற்சி, காந்தப்புலத்தைப் பயன்படுத்தி எரிபொருள் இன்றி மின்சாரம் தயாரிக்கும் சிறிய கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
-
நெல்லை மாவட்டத்தில் 15 புதிய பேருந்துகளின் சேவை: முதல்வர் தொடங்கி வைத்தார்
21 Dec 2025நெல்லை, நெல்லை மாவட்டத்திற்கு 15 புதிய பேருந்து போக்குவரத்து சேவையை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
-
தென் ஆப்பிரிக்காவில் பயங்கரம்: துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலி
21 Dec 2025கேப் டவுன், தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியான நிலையில், 10 பேர் படுகாயமடைந்தனர்.
-
கிழக்கு சீன கடல் பகுதியில் உலகின் மிகப்பெரிய தங்கப்படிமம் கண்டுபிடிப்பு
21 Dec 2025பெய்ஜிங், கிழக்கு சீன கடல் பகுதியில், ஆசியாவின் மிகப்பெரிய கடலுக்கடியிலான தங்க படிமத்தை சீனா கண்டுபிடித்துள்ளது.
-
தி.மு.க. கூட்டணியில் தொடர காரணம் என்ன? தொல். திருமாவளவன் விளக்கம்
21 Dec 2025மதுரை, பதவி ஆசை இல்லாததே தி.மு.க. கூட்டணியில் தொடரக் காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் விளக்கமளித்தாா்.
-
த.வெ.க. சார்பில் இன்று விஜய் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி
21 Dec 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஓட்டலில் இன்று (திங்கள்கிழமை) கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறத
-
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ரூ.98 கோடியில் அமையவுள்ள காயிதே மில்லத் புதிய நூலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
21 Dec 2025நெல்லை, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ரூ.98 கோடியில் அமையவுள்ள காயிதே மில்லத் புதிய நூலகத்திற்கு நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
அரியானாவில் நிலநடுக்கம்
21 Dec 2025சண்டிகர், அரியானாவில் உள்ள ரோஹ்தக் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டசபை தேர்தலை முன்னிட்டு டிச. 29-ல் பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்
21 Dec 2025சென்னை, வரும் டிச. 29-ல் நடைபெறவுள்ள பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்துக்கு அந்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
-
கீழடி, பொருநை அருங்காட்சியங்களை பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் நேரில் வந்து பார்வையிட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
21 Dec 2025நெல்லை, தமிழக நாகரிகத்தின் தொன்மை குறித்து கீழடி, பொருநை அருங்காட்சியங்களை பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் நேரில் வந்து பார்வையிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
வரலாற்றை படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
21 Dec 2025நெல்லை, வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும் என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
மேற்கு வங்க மாநிலத்தில் மாநில வேலை உறுதி திட்டத்துக்கு காந்தியின் பெயர் சூட்டினார் மம்தா
21 Dec 2025கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தில் மாநில வேலை உறுதி திட்டத்துக்கு மகாத்மா காந்தியின் பெயர் அம்மாநில முதல்வர் மம்தா பானார்ஜி சூட்டியுள்ளார்.
-
பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட பொதுமக்களுக்கு வரும் 23-ம் தேத முதல் அனுமதி
21 Dec 2025நெல்லை, பொருநை அருங்காட்சியகத்தை டிச.23 முதல் பொதுமக்கள் பாா்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: போராட்டத்துக்கு இம்ரான்கான் அழைப்பு
21 Dec 2025லாகூர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
-
ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு
21 Dec 2025சென்னை, தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
2047க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க பல்வேறு திட்டங்கள் மத்திய நிதி அமைச்சர் அறிவிப்பு
21 Dec 2025பெங்களூரு, 2047ம் ஆண்டுக்குள் ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான துணைத் திட்டங்களை வகுக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித



