எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி,பிப்.21 - கூட்டுக் குழு பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்ட நிலையில் பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது - 25 ம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கல்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வந்த விவகாரத்தில் கிட்டத்தட்ட ஒரு தீர்வு ஏற்பட்டு விட்ட சூழ்நிலையிலும் பரபரப்பான சூழ்நிலையிலும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. முதல் நாளான இன்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார். 25 ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 28 ம் தேதி மத்திய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது.
ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை நாட்டுக்கு ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ஜே.பி.சி. எனப்படும் பாராளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க, பாரதீய ஜனதா போன்ற கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதன் காரணமாக கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரே முற்றிலுமாக ஸ்தம்பித்துப் போனது. அந்த கூட்டத் தொடரில் எந்த அலுவல்களுமே நடக்கவில்லை. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலும் இந்த பிரச்சினையை எழுப்புவோம். விட மாட்டோம் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் ஆளும் அரசு அரண்டு போனது.
இதையடுத்து கூட்டுக் குழு விவகாரத்தில் மத்திய அரசு ஒரு முடிவுக்கு வந்து விட்டது. வரும் புதன் கிழமைக்குள் அதாவது 23 ம் தேதிக்குள் கூட்டுக் குழு அமைப்பது பற்றி மத்திய அரசு ஒரு முடிவுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக 23 ம் தேதியன்று ஜே.பி.சி. பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலை பிரதமர் மன்மோகன்சிங், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சல் ஆகியோர் சூசகமாக தெரிவித்து விட்டனர். ஆகவே ஜே.பி.சி. விவகாரத்தில் கிட்டத்தட்ட ஒரு முடிவு ஏற்பட்டு விட்டது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இந்த கூட்டத் தொடரை அமைதியாக, சுமூகமாக நடத்துவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன் நேற்றும் சபாநாயகர் மீராகுமார் ஆலோசனை நடத்தினார். ஏற்கனவே இவர் பலமுறை இது போன்ற ஆலோசனைகளை நடத்தி விட்டார். அப்போது எதிர்க்கட்சிகள் எல்லாம் கூட்டுக் குழு அமைப்பதுதான் ஒரே தீர்வு என்று வலியுறுத்தின. அதன் எதிரொலியாகத்தான் மத்திய அரசும் பணிந்து விட்டது. இந்த சூழலில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது.
இது இந்த ஆண்டில் நடைபெறும் முதலாவது கூட்டத் தொடராகும். பொதுவாக ஆண்டின் முதல் கூட்டத் தொடரின் முதல் நாளன்று இரு சபைகளும் அடங்கிய கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவது வழக்கம். அந்த மரபுப்படி இன்று பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரதீபா உரையாற்றுகிறார். அவர் ஆற்றும் உரைக்கு மத்திய மந்திரி சபை ஏற்கனவே ஒப்புதலும் அளித்து விட்டது. இந்த கூட்டத் தொடர் மார்ச் 14 ம் தேதி வரை ஒரு பகுதியாகவும், ஏப்ரல் 4 ம் தேதி முதல் 21 ம் தேதி வரை 2 வது பகுதியாகவும் நடைபெறுகிறது. முதல் பகுதியில் 17 அமர்வுகளும், இரண்டாவது பகுதியில் 12 அமர்வுகளும் இடம் பெறும். வழக்கமாக, பட்ஜெட் கூட்டத் தொடர் நீண்ட நாட்கள் நடக்கும். ஆனால் இப்போது தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் நெருங்குவதால் பட்ஜெட் கூட்டத் தொடரின் நாட்கள் சுருக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற 25 ம் தேதியன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்கிறார். சட்டசபை தேர்தல் வருவதால் ரயில் கட்டணம் உயராது என்று அடித்துச் சொல்லலாம். வரும் 28 ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்கிறார். சட்டசபை தேர்தல் நெருங்குவதால் நிச்சயம் புது வரிகள் இருக்காது. மேலும் வருமான வரி விலக்கு உச்சவரம்பும் ரூ 2 லட்சமாக உயரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல சலுகைகளும் இருக்கலாம். இந்த கூட்டத் தொடரில் ஜி.எஸ்.டி. மசோதா உட்பட பல முக்கிய மசோதாக்கல் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-09-2025.
17 Sep 2025 -
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
மயிலாடுதுறை ஆணவக்கொலை: பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
17 Sep 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆணவக் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது: துணை பிரதமர்
17 Sep 2025தோஹா: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது என்றும் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும்
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: மீண்டும் ஒரு உரிமைப் போரை நடத்தி நாட்டை பாதுகாப்போம் கரூர் தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
17 Sep 2025கரூர்: தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று தெரிவித்துள்ள தி.மு.க.
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.
-
திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினி அதிரடி பதில்
17 Sep 2025சென்னை: திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி பதில் அளித்துள்ளார்.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு
17 Sep 2025சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
இந்திய வீராங்கனை விலகல்
17 Sep 2025ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.