எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,பிப்.24 - கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறிய வழக்கில் மத்திய அரசு, அமலாக்கப்பிரிவுக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது. 2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு வழக்கில் ஷாகித்உஸ்மான் பல்வாயின் ஸ்வான் டெலிகாம் நிறுவனம் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. ஸ்வான் நிறுவனம் சில துணை நிறுவனங்கள் மூலம் இந்த பணத்தை கைமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பணப்பரிமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து பணத்தை கைமாற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட நிறுவனங்களின் சொத்துக்களை முடக்குவதற்கு அமலாக்கப்பிரிவு உத்தரவிட்டது.
இதில் ஷாகித் பல்வாவுடன் தொடர்புடைய நிகார் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் ரூ.1.10 கோடி மதிப்பிலான சொத்துக்களும் அடங்கும். அந்த நிறுவனம் அமாக்கப்பிரிவு உத்தரவை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. எங்கள் சொத்துக்களை முடக்க அமலாக்கப்பிரிவு பிறப்பித்த உத்தரவுகள் சட்ட விரோதமானவை என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி எம்.எல்.மேத்தா முன்னிலையில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் அமலாக்கப்பிரிவுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை வரும் 27 -ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
நிகார் கன்ஸ்ட்ராக்ஷன் தவிர டைனமிக்ஸ் ரியால்டி ரூ134கோடி, கான்வுட் கன்ஸ்ட்ரக்ஷன் ரூ.22 கோடி, டி.பி.ரியால்டி ரூ.52கோடி, எவர்ஸ் மைஸ் கன்ஸ்ட்ரக்ஷன் ரூ.13 கோடி ஆகிய நிறுவனங்களின் சொத்துக்களை முடக்குவதற்கும் அமலாக்கப்பிரிவு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


