எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி,மார்ச்.23 - மேற்கு வங்க மாநிலத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக கடந்த சில நாட்களாக நீடித்து வந்த சஸ்பென்ஸ் நேற்று ஒரு முடிவுக்கு வந்தது. காங்கிரசுக்கும், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நேற்று ஒருவழியாக ஏற்பட்டது. இதன்படி காங்கிரஸ் கட்சி 65 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 229 தொகுதிகளிலும் போட்டியிட இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பிரதிநிதி ஷகீல் அகமது டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இங்கு தி.மு.க. காங்கிரஸ் இடையே சில ஆண்டுகளாக கூட்டணி நிலவுகிறது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கு 90 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கோரியது. பின்னர் படிப்படியாக குறைந்து ஒரு கட்டத்தில் 63 தொகுதிகளை கேட்டது காங்கிரஸ். ஆனால் 63 தொகுதிகளை கொடுக்க மனமில்லாத தி.மு.க, 60 தொகுதிகளைத்தான் கொடுக்க முடியும் என்று கூறியதோடு உறவை முறிப்பதாக தீர்மானமும் போட்டு நாடகம் நடத்தியது. இந்த நாடகம் 3 நாள் நீடித்தது. பிறகு காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளை அந்த கட்சிக்கு கொடுக்க தி.மு.க. ஒருவழியாக சம்மதித்தது. காங்கிரஸ் மேலிடத்தின் மிரட்டலுக்கு பணிந்தோ என்னவோ, அந்த கட்சி கேட்ட 63 தொகுதிகளை தி.மு.க. கொடுக்க முன்வந்தது. இது தமிழ்நாட்டில் நடந்த கதை.
மேற்கு வங்கத்திலும் இதே போல் கடந்த சில நாட்களாக சிக்கல் நீடித்தது. இம்மாநிலத்தில் மொத்தம் 294 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் தங்களுக்கு 90 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் காங்கிரஸ் கோரியது. ஆனால் மம்தா பானர்ஜி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. 45 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தார். தமிழ்நாட்டில் தி.மு.க.வை மிரட்டியது போல் தன்னை மிரட்ட முடியாது என்கிற பாணியில் அவர் பேசி வந்தார். அதன் பிறகும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பற்றி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்த இழுபறிக்கு நேற்று ஒருவழியாக தீர்வு ஏற்பட்டு சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்தது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டது.
முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியாவை டெல்லியில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்தித்து பேசினார். அந்த சந்திப்புக்கு பிறகு மம்தாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரணாப் முகர்ஜி பேசினார். இதைத் தொடர்ந்தே இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டது. இத்தகவலை டெல்லியில் நேற்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மேலிட பிரதிநிதி ஷகீல் அகமது நிருபர்களிடம் தெரிவித்தார். இது பற்றி அவர் கூறுகையில்,
காங்கிரசுக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டதாகவும், இந்த கூட்டணி மூலம் இடதுசாரிகளின் மோசமான ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க மேற்கு வங்க மக்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்று தெரிவித்தார். நேற்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி காங்கிரஸ் 65 தொகுதிகளில் போட்டியிடும் என்றும், திரிணாமுல் காங்கிரஸ் 229 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் ஷகீல் அகமது தெரிவித்தார். இந்த கூட்டணி மூலம் மேற்கு வங்கத்தில் கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதியை கிள்ளிக் கொடுக்கிறது : கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
26 Oct 2025நெல்லை : ஒவ்வொரு முறையும் கேட்கும் நிவாரணத்தை கொடுக்காமல் மத்திய அரசு கிள்ளிக் கொடுக்கிறது என்று கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
26 Oct 2025திருச்செந்தூர் : திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
-
கேரளாவில் நிலச்சரிவு: ஒருவர் பலி
26 Oct 2025திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இடுக்கி மாவட்டம் அடிமலி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
-
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் - 4 பேர் பலி
26 Oct 2025கீவ் : உக்ரைன் , ரஷ்யா இடையே நேற்று 1 ஆயிரத்து 340வது நாளாக போர் நீடித்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.
-
8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல்
26 Oct 2025சென்னை : 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல், சென்னைக்கு கிழக்கு - தென் கிழக்கு திசையில் 790 கி.மீ தூரத்தில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது.
-
அமெரிக்க் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்
26 Oct 2025நியூயார்க் : அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
-
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி
26 Oct 2025தென்காசி : குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
பட்டுக்கோட்டை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர், தலைமை ஆசிரியை கைது
26 Oct 2025பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் மற்றும் அது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியயை ஆகியோரை போலீஸார் சனிக்கிழ
-
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 2 பேர் பலி
26 Oct 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் கேளிக்கை நிகழ்ச்சியில் நடந்த சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-10-2025.
26 Oct 2025 -
கந்தசஷ்டி சூரசம்ஹார விழா; திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
26 Oct 2025திருச்செந்தூர் : கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவையொட்டி நெல்லை மற்றும் தாம்பரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
-
கரூர் சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சென்னையில் சந்திக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்
26 Oct 2025கரூர் : கரூர் சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சென்னையில் த.வெ.க. தலைவர் விஜய் சந்திக்கிறார்.
-
சிறையில் படுக்கை, தலையணை கோரிய நடிகர் தர்ஷன் மனு மீது 29-ந் தேதி தீர்ப்பு
26 Oct 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கோரிய நடிகர் தர்ஷன் மனு மீது 29-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தமிழ்நாடு விளையாட்டுத்துறை திறமையானவர்களுக்கு என்றென்றும் பக்கபலமாக இருக்கும்: துணை முதல்வர்
26 Oct 2025சென்னை : திறமையாளர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டுத்துறை என்றென்றும் பக்கபலமாக இருக்கும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நேரடியாக போர் தொடுப்போம்: ஆப்கானுக்கு பாக். பகிரங்க எச்சரிக்கை
26 Oct 2025லாகூர் : ஆப்கானிஸ்தானுடன் நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாவிட்டால் பாகிஸ்தான் வெளிப்படையான போரை தொடங்கும் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச
-
ஜார்க்கண்ட்டில் அதிர்ச்சி சம்பவம்: ரத்தமாற்றம் செய்யப்பட்ட 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி.
26 Oct 2025ராஞ்சி : ஜார்க்கண்ட்டில் ரத்தமாற்றம் செய்யப்பட்ட 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி.
-
மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 30 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
26 Oct 2025மேட்டூர் : மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
-
'பைசன்' படக்குழுவினருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு : இயக்குனர் மாரி செல்வராஜ் நன்றி
26 Oct 2025சென்னை : மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
-
ஆசியான் உச்சி மாநாடு: மலேசியாவில் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு
26 Oct 2025கோலாலம்பூர் : ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க மலேசியா சென்ற அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா: தங்க தேரில் சுவாமி வீதிஉலா
26 Oct 2025திருச்செந்தூர் : திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று தங்க தேரில் சுவாமி வீதிஉலா நடந்தது.ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம
-
கனடா மீதும் மேலும் 10 சதவீத வரி விதிப்பு : அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
26 Oct 2025வாஷிங்டன் : கனடா மீதும் மேலும் 10 சதவீத வரி விதிப்பு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
பாக்.குடன் அமெரிக்காவின் நெருக்கம் இந்தியாவுடனான நட்பை பாதிக்காது : மார்கோ ரூபியோ விளக்கம்
26 Oct 2025நியூயார்க் : பாகிஸ்தானுடன் அமெரிக்கா காட்டும் நெருக்கம் இந்தியாவுடனான உறவுகளை பாதிக்காது என அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
-
டிஜிட்டல் கைதுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
26 Oct 2025புதுடெல்லி : டிஜிட்டல் கைதுக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை நடைபெறுகிறது.
-
போர் நிறுத்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 93 பேர் பலி
26 Oct 2025டெல்அவீவ் : அக்டோபர் 10-ம் தேதி காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் 93 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காசா சுகாதர அமைச்சகம் த
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: தேஜஸ்வி வாக்குறுதி
26 Oct 2025பாட்னா : பீகாரில் இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர 20 நாட்களில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்


