எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மார்ச் 16 - ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதியைப் பற்றிய விவகாரத்தால் பாராளுமன்றத்தில் நேற்று கடும் அமளி ஏற்பட்டது. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் அங்கம் வகிக்கிறது. இந்த கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி ரயில்வேதுறை அமைச்சராக இருக்கிறார். இவர் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ரயில்வே பட்ஜெட்டில் ரயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். தங்களது கட்சியை கலந்தாலோசிக்காமல் தினேஷ் திரிவேதி தன்னிச்சையாக ரயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார் என்று திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரங்கள் கருத்து தெரிவித்திருந்தன. தங்களைக் கேட்காமல் ரயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்திய தினேஷ் திரிவேதியை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கட்சியின் தலைவர் மம்தா பேனர்ஜி கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து திரிவேதி ராஜினாமா செய்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. தினேஷ் திரிவேதி பதவி விலகாவிட்டால் கூட்டணியில் இருந்து விலகிக்கொள்ளப் போவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளதாக கூறப்பட்டது. இதனால் டெல்லியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்புக்கு இடையே பாராளுமன்றம் நேற்று காலை கூடியதும், திரிவேதி விவகாரத்தை பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கிளப்பின. கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு திரிவேதி விவகாரம் தொடர்பாக சபையில் விவாதம் நடத்த வேண்டும் என்று பா.ஜ.க. தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சுஷ்மா சுவராஜ் மற்றும் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் நோட்டீஸ் கொடுத்திருந்தனர். எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் எழுந்து, தினேஷ் திரிவேதி இன்னமும் ரயில்வே துறை அமைச்சராக இருக்கிறாரா? அவர் தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டிற்கு இன்னமும் உயிரோட்டம் இருக்கிறதா? அல்லது இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். அப்போது சபையில் பலத்த அமளி ஏற்பட்டது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கூட்டணிக் கொள்கை இந்த அளவுக்கு மிக மோசமாக உள்ளது என்று வேறு சில எதிர்க்கட்சி தலைவர்களும் குற்றம் சாட்டினர். திரிவேதி தாக்கல் செய்த பட்ஜெட்டின் கதிதான் என்ன? இந்த பட்ஜெட் லோக்சபையின் சொத்து. இதில் இந்த அரசு என்னதான் செய்யப்போகிறது? என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பினார்கள். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கணைகளுக்கு மத்திய நிதி அமைச்சரும் அவை முன்னவருமான பிரணாப் முகர்ஜி உடனுக்குடன் பதிலளித்தார். இது ஒன்றும் வழக்கத்திற்கு மாறானது அல்ல. கூட்டணி அரசாங்கத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் எல்லாம் ஏற்கனவே வந்துள்ளன என்றார். கூட்டணி அரசாங்கத்தில் இருந்து ஓடிப்போனவர்களுக்கு இதெல்லாம் நன்றாகத் தெரியும். எத்தனை முறை அவர்கள் கூட்டணியை விட்டு ஓடி இருக்கிறார்கள் என்பதும் அவர்களுக்கு தெரியும். குறிப்பாக மற்றவர்களைக் காட்டிலும் இந்த சபையில் இருப்பவருக்கு இதுபோன்ற நிகழ்வுகள் மிக நன்றாகத் தெரியும் என்றும் முகர்ஜி கூறினார். பிரதமருக்கு மம்தா பேனர்ஜி ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் திரிவேதியை பதவி நீக்கம் செய்யும்படி அவர் கூறவில்லை. ஆனால் ஒரு தகவலை கூறியிருக்கிறார். அந்த தகவலைப் பற்றி நாங்கள் ஆலோசித்து வருகிறோம் என்று கூறிய பிரணாப் முகர்ஜி, அந்த கடிதத்தில் என்ன கூறப்பட்டிருந்தது என்பதை கூற மறுத்துவிட்டார். லோக்சபையில் இந்த விவகாரம் பரபரப்பாக கடும் அமளிக்கிடையே நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சம்பந்தப்பட்ட தினேஷ் திரிவேதியும் முன்வரிசையில் உட்கார்ந்திருந்தார். பொதுவாக மூத்த அமைச்சர்கள்தான் முன்வரிசையில் அமர்வது வழக்கம். அந்த வரிசையில்தான் இவரும் அமர்ந்திருந்தார். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கணைகள் ஒருபுறம், ஆளும் கட்சியினரின் எதிர்ப்புக்குரல்கள் இன்னொருபுறம் என்று லோக்சபையில் பெரும் அமளி ஏற்பட்டது. இறுதியில் கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சபாநாயகர் மீராகுமார் நிராகரித்தார். இந்த கூச்சல் குழப்பத்திற்கு இடையே குறுக்கிட்டுப் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்தோபாத்யாயா, திரிவேதியை ராஜினாமா செய்யும்படி தங்களது கட்சி ஒருபோதும் கோரவில்லை என்றார். இந்த விஷயம் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் மம்தா பேனர்ஜிக்கும் இடையே தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 18 hours ago |
மினி பான் கேக்6 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்
06 May 2024சென்னை : நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தலா 478 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர்.
-
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.