முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்., ஆளும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு சரியில்லை

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

சண்டிகார். ஜூன். 3 -காங்கிரஸ்  கட்சி ஆளும் மாநிலங்களில்  சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று இந்திய தேசிய லோக் தளம் கட்சியின்  தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா குற்றம்சாட்டியுள்ளார். இந்திய தேசிய லோக் தளம்  கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷவ் சவுதாலா நேற்று சண்டிகார் நகரில் செய்தியாளர்க்கு  பேட்டியளித்தார். 

அப்போது அவர் கூறுகையில்  காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு  நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது என்றும்  டெல்லியில்  தங்களது கட்சியின் தலைவர் மாநில தலைவர் தாக்கப்பட்ட சம்பவத்தை இதற்கு உதாரணமாக கூறலாம் என்றும் அவர் கூறினார்.

டெல்லியாக இருந்தாலும் சரி அரியானாவாக  இருந்தாலும்  சரி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு  முழுமையாக சீர் கெட்டுள்ளது என்றும்டெல்லியில் ஒரு எம்.எல்.ஏ.வுக்கே பாதுகாப்பு இல்லாத போது சாமானிய மக்களுக்கு எப்படி பாதகாப்பு  கிடைக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்