முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா முன்னிலையில் கார்த்திக் தொண்டைமான் பதவிஏற்றார்

புதன்கிழமை, 20 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 20 - முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கார்த்திக் தொண்டை மான் நேற்று சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.அவருக்கு சபாநாயகர் டி.ஜெயக்குமார் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இதுப்பற்றிய விபரம் வருமாறு: கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்ட மன்றத்தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெற்றது. புதுக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் இருந்த  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் முத்துக்குமரன் மரணமடைந்ததையொட்டி கடந்த 12 ம் தேதி புதுக்கோட்டைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில்  அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட கார்த்திக் தொண்டைமான் 101998 வாக்குகள் பெற்று தே.மு.தி.க  வேட்பாளர் ஜாகீர் உசேனைவிட 71 ஆயிரத்து 498 வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றி பெற்றார். இதற்கு அனைத்துத் தரப்பிலும் வாழ்த்தும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற கார்த்திக் தொண்டைமான் சமீபத்தில்  முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து வாழ்த்தும் பெற்றார். இதைத்தொடர்ந்து நேற்று (19.06.2012) கார்த்திக் தொண்டைமான் புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை தலைவர் அறையில் பேரவைத்தலைவர் ஜெயக்குமார்    கார்த்திக் தொண்டைமானுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்