முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்கு மாநிலங்களில் லேசான நிலநடுக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

கவுஹாத்தி, ஜூலை.- 2- அசாம் மற்றும் மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாகாணங்களில் லேசான நிலநடுக்கம் உணரப்படடது.  அசாம் மாநிலத்தில் நேற்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் தொடர் மழையால் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அம்மாநிலத்தின் 23 மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் அப்பகுதியில் சுமார் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளப்பெருக்கினால் 61 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் உலகிலேயே மிகப் பெரிய நன்னீர்தீவு என்று அழைக்கப்படும் பிரம்மபுத்திரா நதிக்கு நடுவே உள்ள மஜூலி தீவை மையமாகக் கொண்டு நேற்று காலை 9.45 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டராக பதிவாகி இருந்தது. அசாம் மாநிலத்தின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. அசாமின் அண்டை மாநிலமான மேகலாயா மற்றும் மணிப்பூரிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இருப்பினும் பெரிய அளவிலான சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago