முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.35 கோடி போதைப்பொருளுடன் டெல்லியில் இரண்டுபேர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை.- 23 - டெல்லியில் ரூ. 35 கோடி மதிப்புள்ள போதை ஒபருளை  அதிகாரிகள் பறிமுதல்  செய்துள்ளனர். டெல்லியில் விமானம் மூலம்  மலேசியாவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய்த்துறை  அதிகாரிகளுக்கு  தகவல் கிடைத்தது. இதை அடுத்து டெல்லியில் உள்ள இந்திரா  காந்தி சர்வதேச விமான நிலையத்தில்  மத்திய  போதை பொருள் தடுப்புப்படை அதிகாரிகள்  முற்றுகையிட்டனர். மலேசிய செல்லும் விமானத்தில் அனுப்பப்படுவதற்காக விமான நிலைய சரக்கு ஏற்றும் வளாகத்தில்  வைக்கப்பட்டிருந்த போதை பொருளை  அவர்கள் கண்டு பிடித்தனர். 352 கிலோ எடையுள்ள அந்த போதை பொருளை அதிகாரிகள் கைப்பற்றி அவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.35 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரண்டு தொழில் அதிபர்களை அதிகாரிகள்  கைது செய்துள்ளனர். அவர்கள் மீது போதை பொருள் கடத்தல்  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடந்த மிகப்பெரிய போதை பொருள் வேட்டை  இதுதான் என்று  அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த போதை பொருள் கடத்தலில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா ? என்பது  குறித்தும் அதிகாரிகள் புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்