முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் ஒருவர்கைது

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஆக.- 18 - டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 12 துப்பாக்கி குண்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு ஒருவர் கைப்பையுடன் வந்தார். அவர் மீது சந்தேகம் வரவே சோதனை அதிகாரிகள் அந்த பையை வாங்கி சோதித்தனர். அப்போது பையில் துப்பாக்கி குண்டுகள் இருப்பது தெரியவந்தது. பையை பிரித்து பார்த்தபோது துப்பாக்கி குண்டுகள் இருக்கும் இடம் தெரியவில்லை. பைக்குள் அவர் வைத்திருந்த கேமிராவை சோதனை அதிகாரிகள் திறந்து பார்த்தனர். அப்போது கேமிராவுக்குள் 12 துப்பாக்கி குண்டுகள் இருப்பது தெரியவந்தது. உடனே அவரை விமான நிலைய பாதுகாப்பு படையினர் அழைத்து சென்றனர். அப்போது துப்பாக்கி குண்டுகள் வைத்திருந்தவர் பெயர் புந்த்சோ தோர்ஜி என்றும் அருணாசலப்பிரதேச மாநிலத்தில் உள்ள மேற்கு கேமங் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. டெல்லியில் இருந்து அவர் அருணாசலப்பிரதேச மாநிலத்தில் உள்ள பக்டோக்ரா என்ற இடத்திற்கு ஜெட் விமானத்தில் செல்ல வந்தது தெரியவந்தது. அந்த 12 துப்பாக்கி குண்டுகளையும் கைப்பற்றிக்கொண்டு போலீசாரிடம் விமான நிலைய பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர். தோர்ஜியிடம் போலீசாரும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் விசாரணையின்போது தோர்ஜியிடம் துப்பாக்கி லைசென்ஸ் இருந்ததாகவும் ஆனால் அது அருணாசலப்பிரதேசம் மற்றும் அசாம் மாநிலத்திற்கு மட்டுமே செல்லும் என்றும் தெரிய வந்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்