முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துபாய் படகுவிபத்தில் பலியான மீனவர் குடும்பத்துக்கு ரூ1 லட்சம் நிதிஉதவி

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

ராமநாதபுரம்ஆக -18 - துபாய் படகு விபத்தில் பலியான மீனவர் குடும்பத்துக்கு தமிழக அரசின் சார்பில் ரூ 1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது. ராமநாதபுரத்தை அடுத்த தோப்புவலசை கிராமத்தை சேர்ந்த முருகேசன்  எனபவர் துபாயில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.  கடலில் மீன்பிடித்துக்கொணடிருந்தபோது இரண்டு படகுகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் முருகேசன் இறந்துவிட்டதாக நேற்று அங்கிருந்து தகவல் வந்தது. அதனை தொடர்ந்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். இந்த தகவல் அறிந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி தமிழக அரசின் சார்பில் ராமநாதபுரம் கோட்டாட்சியர் முத்துக்குமரன் இறந்துபோன முருகேசன் குடும்பத்தினரிடம் ரூ 1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட முருகேசன் குடும்பத்தினர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்ததோடு பலியானவரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கும்படியும், இறந்தவர் உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படியும் கோரிக்கை விடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்