எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காரைக்குடி, ஏப்.- 6 - அ.தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் சீனாவில் உள்ள மான்சர்வர், நேபாளத்தில் உள்ள சாலிக்கிராமம் ஆகிய புனித தலங்களுக்குச் செல்ல இந்துக்களுக்கு அரசு உதவி செய்யும் என்று காரைக்குடியில் பிரச்சாரத்தின்போது ஜெயலலிதா பேசினார். நேற்று காரைக்குடியில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களான காரைக்குடி வேட்பாளர் சோழன் சித.பழனிச்சாமி, திருப்பத்தூர் வேட்பாளர் ராஜகண்ணப்பன், சிவகங்கை கம்யூனிஸ்ட் வேட்பாளர் குணசேகரன் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது, தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் உங்கள் முன் வந்திருக்கிறேன். ஒரு குடும்பத்திடம் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க பொன்னான வாய்ப்புதான் இந்த தேர்தல். கருணாநிதியும், தி.மு.கவிலுள்ள ஒருசில தலைவர்களும், சில குடும்பங்களும் தமிழ்நாட்டை சூறையாடிக் கொண்டிருக்கின்றன. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க உங்கள் முன் இருப்பதுதான் இந்த தேர்தல்.
விலைவாசி உயர்வால் நீங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளீர்கள். ரவுடியிசம், அரிசி கடத்தல், ஊழல், சுதந்திரமாக தொழில் செய்ய முடியாத அக்கிரமம், கள்ளச்சாராயம் போன்ற சமூகவிரோத செயல்கள் அனைத்திற்கும் இந்த தேர்தல் மூலமாக, தமிழகத்தை மீட்க முடியாவிட்டால், எப்போது கருணாநிதியிடம் இருந்து மீட்கப் போகிறோம் என்று நல்லோர் மனச்சாட்சி கேட்கிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் மூலமாக 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஊழல் புரிந்து வரலாற்றுச் சாதனை புரிந்து, இதனால் பொருளாதார வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கருணாநிதி ஆட்சியில் பின்தங்கி விட்டது. 1 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்தை கடனாளியாக ஆக்கி இருப்பதுதான் கருணாநிதியின் 5 ஆண்டுகால சாதனை. தன் குடும்பம் பலவழிகளில் கொள்ளையடித்து பேராசையினால் குபேரனாகியுள்ளார். இலவச டி.வியை ரூ.2000க்கு கொடுத்துவிட்டு வருடத்திற்கு ரூ,1000 கேபிள் டிவி மூலம் தன் குடும்பத்திற்கு தமிழக மக்களிடமிருந்து சூழ்ச்சி தந்திரத்தால் வாங்கிக் கொள்கிறார்.
உலகப் பணக்காரர்கள் வரிசையில் கருணாநிதியின் பேரன் கலாநிதி மாறன் 310-வது இடத்தில் இருப்பதை வெளிநாட்டில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு சொத்து மதிப்பை வெளியிட்டிருக்கிறது. உலகப் பணக்காரர்களில் ஒருவராக கருணாநிதியின் பேரன் சேர்ந்து விட்டார் என்றால் கருணாநிதியின் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் என்று ஒவ்வொருவராக சேர்த்தால் உலகிலுள்ள மிகப் பெரிய பணக்கார குடும்ப வரிசையில் கருணாநிதியின் குடும்பமும் உள்ளது. தமிழகம் ரூ.1 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது. பீகார். குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களை விட பின்தங்கி இருக்கிறது. அதற்கு காரணம் கருணாநிதி தன் குடும்பம் மட்டும் செழிப்பாக இருக்க திட்டம் தீட்டி செயல்படுகிறார்.
ஒரு தலைமுறையில் கருணாநிதியின் குடும்பம் குபேரனாக மாறி இருக்கிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க நமக்குக் கிடைத்த வாய்ப்பு தேர்தல். கருணாநிதியும், தி.மு.க கட்சியினரும் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் அவர்களை டெபாசிட் இழக்க வைத்து புதிய சாதனை செய்து முடிக்க வேண்டும். கருணாநிதியிடம் இருந்து தமிழகத்தை மீட்கவும், தமிழகத்திற்கு நல்ல எதிர்காலம் அமையவும் அ.தி.மு.க கூட்டணியை ஆதரியுங்கள்.
அ.தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் சட்டம் ஒழுங்க நன்கு பராமரிக்கப்படும். உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும் எஸ்.ஐ வெற்றிவேல் மீது வெடிகுண்டு வீசிய செயலை நேரில் பார்த்தும், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மைதீன்கான் எந்த உதவியும் செய்யாமல் வேடிக்கை பார்த்துச் சென்றதும் தெரியும். இதெல்லாம் அவர்களது மனிதாபிமானமற்ற செயலை எடுத்துக் காட்டுகிறது.
தி.மு.க.வை வீழ்த்தவேண்டும். தமிழ்நாட்டை சூழ்ச்சிகளிடமிருந்து மீட்டெடுக்கவும், சரியான முடிவு எடுக்க உலகமே உங்களை பாராட்டும் நாள்தான் தேர்தல் நாள்.
அனைவருக்கும்20 கிலோ தரமான இலவச அரிசி கிடைத்திட, தாய்மார்களுக்கு இலவச பேன், மிக்சி,கிரைண்டர் இலவசமாக வழங்கிட, பிளஸ்1, பிளஸ்2 பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப் கம்ப்யூட்டர் வழங்கிட, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவியரும் இலவச லேப்டாப் பெற்றிட, 10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக 1000 முதல் 5000 ரூபாய் வரை வழங்கிட, வீடில்லா ஏழை குடும்பங்களுக்கு 3 சென்ட் நிலம் அளித்திட, வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் 3 லட்சம் மக்களுக்கு 1,80,000 ரூபாய் செலவில் 300 சதுர அடியில் இலவசமாக நவீன பசுமை வீடுகள் கட்டித் தந்திட, முதியோர், ஊனமுற்றோர், ஆதரவற்றோருக்கான உதவித்தொகையை 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்திட, கேபிள் தொழிலை அரசுடமையாக்கி அனைத்து மக்களுக்கும் அரசு கேபிள் டி.வி இணைப்பு குறைந்த கட்டணத்தில் கிடைத்திட, 60000 பால் கறவை மாடுகளை இலவசமாக 6000 கிராமங்களுக்கு அளித்திட, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4ஆடுகள் இலவசமாக வழங்கிட, கரும்புக்கான கொள்முதல்விலையை 2500 ரூபாயாக உயர்த்திட, விவசாயிகளுக்கு இலவசமாக சொட்டு நீர் பாசன வசதி செய்து தந்திட, விவசாயிகளுக்கு தரமான விதைகள் மற்றும் இடுபொருட்கள் தள்ளுபடி விலையில் கிடைத்திட, சுய உதவிக் குழுக்களுக்கு 10 லட்சம் அளவிற்கு வழங்கும் கடனில் 25 விழுக்காடு மானியம் அளித்திட, 25 ஆயிரம் ரூபாய் திருமண உதவித் தொகையுடன் மணப்பெண்ணிற்கு திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கிட, 58 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் அருகில் உள்ள பகுதிகளுக்கு அரசு பேருந்துகளில் பயணம் செய்ய இலவச பஸ் பாஸ் வழங்கிட, தடையில்லா மின்சாரம் பெற்றிட, வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் வீடுகளுக்கு சூரியஒளி மூலம் தடையில்லா மின்சார வசதி இலவசமாக வழங்கிட, தமிழகம் எங்கும் உள்ள குடிநீர் பிரச்சனைகள் தீர, அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண, கட்டுக்கடங்காமல் ஏறியுள்ள விலைவாசியை கட்டுக்குள் கொண்டுவர, குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை மேம்படுத்த, சாலை இல்லாத ஊர்கள் சாலை வசதி பெற்றிட, போக்குவரத்து வசதிகளை மேம்படுத்திட, கடந்த 5 ஆண்டுகால மைனாரிட்டி தி.மு.க ஆட்சியில் கடுமையாக பாதிப்புக்கு உள்ளான விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் மீனவர்கள் ஆகிய உழைக்கும் மக்களுக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பினையும் உறுதி செய்திட, தொழில் வளம் பெருக, தொழில் அமைதியை உறுதி செய்திட, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்திட, சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, பாதாள சாக்கடைத் திட்டங்களை விரைந்து நிறைவேற்றிட, கருவறை முதல் கல்லறை வரை பயனளிக்கக்கூடிய உழவர் பாதுகாப்புத்திட்டத்தினை புதுப்பொலிவுடன் மீண்டும் செயல்படுத்திட, நடைமுறையில் உள்ள மக்களுக்குப் பயன் அளிக்கும் திட்டங்களைத்தொடர்ந்து செயல்படுத்திட, ஒரு குடும்பத்தின் பிடியில் உள்ள தமிழ்நாட்டில் மக்களை மீட்டிட, கருணாநிதி குடும்பத்தினர் உட்பட தி.மு.கவினரால் ஏழை எளிய மக்களிடமிருந்து மிரட்டிவாங்கப்பட்ட சொத்துக்களை மீட்டு உரியவர்களிடம் திருப்பிக் கொடுத்திட, ஒரு ரவுடிக் கும்பல் தமிழக மக்களை அடக்கி ஆள்வதற்கு முற்றுப்புள்ளி வைத்திட அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியை ஆதரிக்கவேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.
எம்.ஜி.ஆரின் நல்லாசியுடனும், உங்கள் நல்லாதரவுடனும் அ.தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் காரைக்குடியில் பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும். தேவகோட்டையில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்கப்படும். சாக்கோட்டையில் ஆரம்ப சுகாதார நிலையம் உருவாக்கப்படும். நவீனப்படுத்தப்படும். போக்குவரத்து வசதிகளையும், சாலைகளையும் மேம்படுத்தப்படும். ஹஜ் செல்வதற்கு இஸ்லாமியர்களுக்கு உதவுவது போல் கிறிஸ்துவர்களுக்கு ஜெருசலேம் செல்வதற்கு உதவி செய்யப்படும் என்று அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளேன். அதேபோல் சீனாவில் உள்ள மானசர்வர், நேபாளத்திலுள்ள சாலிக்கிராமம் போன்ற புனித தலங்களுக்கு இந்துக்கள் செல்ல உதவி செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக ஜெயலலிதா காரைக்குடிக்கு 3.35க்கு வந்தார். அவரை காரைக்குடி வேட்பாளரும், சிவகங்கை மாவட்டச் செயலாளருமான சோழன் சித.பழனிச்சாமி வரவேற்றார் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் திரளாக வந்திருந்து வரவேற்பளித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கனடா நாட்டு பொருட்களுக்கு 35 சதவீத வரி: டிரம்ப் அறிவிப்பு
11 Jul 2025வாஷிங்டன் : ''ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கனடா பொருட்களுக்கு 35 சதவீத வரி அமலுக்கு வரும்'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அ.தி.மு.க. பலமாக இருக்கும்: இ.பி.எஸ்.
11 Jul 2025விழுப்புரம் : கூட்டணி இல்லை என்றால் தி.மு.க. இல்லை. கூட்டணி இருந்தாலும், இல்லையென்றாலும் பலமாக இருக்கும் கட்சி அ.தி.மு.க. என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
தமிழ்நாடு உங்களுக்கு தலைவணங்காது: டெல்லியை அச்சுறுத்தும் தமிழ்நாட்டின் வளர்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
11 Jul 2025சென்னை, தமிழ்நாடு உங்களுக்கு தலைவணங்காது என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைவருக்கும் மருத்துவம் மற்றும் கல்வி போன்றவற்றில் தமிழ்நாட்டின் வளர்ச்சி டெல்லியை
-
தமிழ்நாட்டு பயங்கரவாத செயல்கள் இல்லாத மாநிலம் : டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உறுதி
11 Jul 2025சென்னை : வரும் காலங்களில் தமிழகத்தில் பயங்கரவாத செயல்பாடுகள் மற்றும் கடுமையான குற்றங்கள் நடக்காது என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவ
-
பிரதமரின் வெளிநாட்டு பயணம்: பஞ்சாப் முதல்வர் விமர்சனம்
11 Jul 2025புதுடெல்லி : “பிரதமர் மோடி நினைத்தால் பாகிஸ்தானுக்கும் செல்லலாம். ஆனால், அவரைப் போல நம்மால் செல்ல முடியாது” என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் விமர்சித்துள்ளார்.
-
தங்கம் விலை ரூ.440 உயர்வு
11 Jul 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 11) பவுனுக்கு ரூ.440 உயர்ந்து விற்பனையானது.
-
அழகுமுத்துக்கோன் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம்: விஜய்
11 Jul 2025சென்னை : மாவீரர் அழகுமுத்துக்கோன் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம் என விஜய் தெரிவித்துள்ளார்.
-
ஆடு, மாடுகள் முன் சீமான்: அமைச்சர் சிவசங்கர் வருத்தம்
11 Jul 2025அரியலூர் : ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு சீமான் தள்ளபட்டுள்ளார் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.
-
ரஷ்யா வெளியுறவு அமைச்சர் வடகொரியா பயணம்
11 Jul 2025மாஸ்கோ : ரஷ்யா வெளியுறவு அமைச்சர் வடகொரியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
-
தமிழகத்தில் 6,990 நடுநிலைப் பள்ளிகளில் ‘ஹைடெக்’ ஆய்வகங்கள் வரும் 15-ம் தேதி திறப்பு
11 Jul 2025சென்னை, தமிழகத்தில் உள்ள 6,990 அரசு நடுநிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டு வரும் ‘ஹைடெக்’ ஆய்வகங்களை, காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளன்று முதல்வர் மு.க.ஸ்
-
எடப்பாடி பழனிசாமி தனது பெயரை மாற்றிக்கொள்ளலாம்: அமைச்சர் சேகர்பாபு
11 Jul 2025சென்னை : எடப்பாடி பழனிசாமி தனது பெயரை 'பல்டி' பழனிசாமி என மாற்றிக்கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
குன்றக்குடி அடிகளாரின் தொண்டு தொடரட்டும்: முதல்வர் புகழாரம்
11 Jul 2025சென்னை : தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் தொண்டு தொடரட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஜி-மெயில் பயனர்களுக்கு கூகுள் கொண்டு வரும் புதிய அப்டேட்
11 Jul 2025வாஷிங்டன் : ஜி மெயில் பயனர்களுக்கு கூகுள் கொண்டு வரும் புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது.
-
கீழடி விவகாரம்: மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்
11 Jul 2025சென்னை : கீழடி விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்க தேர்தலை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு
11 Jul 2025சென்னை : தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஐரோப்பியவில் கடும் வெப்ப அலைக்கு 2,300 பேர் உயிரிழப்பு
11 Jul 2025பாரீஸ் : ஐரோப்பியவில் கடும் வெப்ப அலைக்கு இதுவரை 2,300 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை: அமெரிக்காவுக்கு இந்திய குழு விரைவில் பயணம்
11 Jul 2025புதுடெல்லி : வர்த்தக ஒப்பந்த பேசசுவார்த்தைககு அமெரிக்காவுககு இந்திய குழுவினர் பயணம் செய்ய உள்ளனர்.
-
சுபான்ஷு சுக்லா 14-ம் தேதி பூமி திரும்புகிறார் - நாசா அறிவிப்பு
11 Jul 2025புதுடெல்லி : சுபான்ஷு சுக்லா வருகிற 14-ந்தேதி பூமி திரும்புகிறார் என்று நாசா அறிவித்துள்ளது.
-
வழக்கின் சாட்சிகளை அழிக்க முயற்சி: தென்கொரியா முன்னாள் அதிபர் மீண்டும் சிறையில் அடைப்பு
11 Jul 2025சியோல் : தென் கொரியா அதிபராக இருந்தவர் யூன் சுக் இயோல். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார்.
-
பாக்.கில் கிளர்ச்சியாளர்களால் பயணிகள் 9 பேர் சுட்டுக்கொலை
11 Jul 2025கராச்சி : பாகிஸ்தானில் பஸ்சில் சென்ற 9 பேரை கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொன்றனர்.
-
பீகார் தேர்தலை 'திருட' பா.ஜ.க. முயற்சி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
11 Jul 2025புவனேஸ்வர் : மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலைப் போல, பீகார் தேர்தலையும் திருட பா.ஜ.க. முயல்கிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
கடமை தவறுவது போல் தெரிகிறது: அ.தி.மு.க. தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும்? தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் கேள்வி
11 Jul 2025சென்னை, அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கடமை தவறுவது போல் தெரிவதாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் நிபா வைரஸ் இல்லை: பொதுசுகாதாரத்துறை
11 Jul 2025சென்னை : தமிழகத்தில் 'நிபா' வைரஸ் இல்லை. மக்கள் பீதி அடைய தேவையில்லை என பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
-
குரூப்-4 வினாத்தாள் கசிவா? - டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மறுப்பு
11 Jul 2025சென்னை : குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் விளக்கமளித்துள்ளார்.
-
வரும் 27,28-ம தேதிகளில் 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
11 Jul 2025சென்னை, வரும் 27, 28-ம் தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.