முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலூரில் சுப்பிரமணிய சுவாமி பிரச்சாரம்

வெள்ளிக்கிழமை, 8 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

மேலூர்,ஏப்.- 8 - மேலூரில் ஜனதா கட்சி வேட்பாளர் தர்மலிங்கத்தை ஆதரித்து அக்கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அழகர்கோவில், அரிட்டாபட்டி, கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட அவர், ஊழலற்ற ஆட்சி அமைக்க ஜனதா கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார். மேலும் அவர் பேசுகையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை நான்தான் தொடர்ந்தேன். இப்போது ராசா கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். இதையடுத்து வரிசையாக அனைவரும் செல்வார்கள். அதே போல் துபாயில் கருணாநிதியின் குடும்பம் பல கோடி மதிப்பில் வீடு கட்டி வருவதாகவும் அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்