எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.- 11 - பெற்றோரை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கும் கல்வி கட்டணத்தை அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முத்தரப்பு குழு அமைத்து குறைப்போம் என்று ஜெயலலிதா கூறினார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று தென்சென்னையில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
முதலில் மயிலை மாங்கொல்லையில் நடந்த பிரச்சார கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது:
ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து தமிழ் நாட்டை மீட்டெடுக்க நமக்கெல்லாம் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு தான் நடைபெற உள்ள சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் என்பதை உங்களுக்கெல்லாம் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
கருணாநிதி குடும்பத்தினரும், திமுகவைச் சேர்ந்த ஒரு சில தலைவர்களின் குடும்பத்தினரும், தமிழ் நாட்டை சூறையாடி உலகப் பெரும் பணக்காரர்களாக மாறி இருக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்பது தான் உலகம் உங்கள் முன் வைக்கும் கோரிக்கை. கடுமையான மின்வெட்டு; எந்தப் பொருளையும் யாரும் வாங்க முடியாத அளவிற்கு உயர்ந்து நிற்கும் விலைவாசி; ஊருக்கு ஊர் ரவுடி சாம்ராஜ்ஜியம்; மணல் கொள்ளை; அரிசி கடத்தல்; எதைத் தொட்டாலும் ஊழல்; சமூகத்தில் யாருமே சுதந்திரமாக எந்தத் தொழிலும் செய்ய முடியாது என்ற அக்கிரமம்; அடிதடி; கட்டப் பஞ்சாயத்து; கள்ளச் சாராயம் என்று என்னென்ன சமூக தீமைகள் உண்டோ அவை அனைத்தும் தலைவிரித்து ஆடும் சூழ்நிலை இன்றைக்கு தமிழ் நாட்டில் நிலவுகிறது.
இந்தத் தேர்தல் மூலம் தமிழ் நாட்டை மீட்டெடுக்கவில்லை என்றால் வேறு எப்பொழுது கருணாநிதியின் குடும்பத்திடமிருந்து தமிழ் நாட்டை மீட்கப் போகிறோம் என்று நல்லோர்களின் மனசாட்சி நம்மையெல்லாம் பார்த்துக் கேட்கிறது.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் தேச சொத்தை கொள்ளையடித்த கருணாநிதி கும்பலுக்கு தமிழ் நாடு என்ன தண்டனை கொடுக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள இந்த நாடே காத்திருக்கிறது. தேச விரோத சக்திகளோடு கைகோர்த்துக் கொண்டு, கருணாநிதியும் அவரது குடும்பத்தினரும் நடத்தியிருக்கும் ஊழல் சாம்ராஜ்ஜியத்தை தமிழக வாக்காளர்கள் வேறோடும், வேறடி மண்ணோடும் வீழ்த்தினார்கள் என்ற வரலாற்றுச் சாதனையை செய்து முடிக்க உங்கள் முன் வருவது தான் இந்தத் தேர்தல்.
பொருளாதார வளர்ச்சியிலும், சட்டம் ஒழுங்கு பராமரிப்பிலும் முன்னோடி மாநிலமாக திகழ்ந்த தமிழ்நாடு, கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் மிகவும் பின்தங்கிவிட்டதை நீnullங்கள் அறிவீர்கள்.
ஒரு லட்சம் கோடி ரூபாய் தமிழ் நாட்டின் கடன் என்பது தான் கருணாநிதி நடத்திய கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியின் தலையாய சாதனை. தானும், தன் குடும்பமும் மக்கள் பணத்தில் வளம் பெற, எப்படியெல்லாம் திட்டம் தீட்ட வேண்டுமோ அப்படியெல்லாம் திட்டம் தீட்டி பல வழிகளில் மக்களுக்கு நன்மை செய்வதைப் போல மக்கள் பணத்தைக் கொள்ளையடித்திருக்கும் ஒரு பேராசைக்கார கும்பல் தமிழ் நாட்டை சூறையாடிக் கொண்டிருக்கிறது. இலவச கலர் டிவி என்று அரசு பணத்தைக் கொண்டு மக்களுக்கு 2,000 ரூபாய் மதிப்புள்ள டிவியை கொடுத்துவிட்டு; ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஆண்டுக்கு 1,000 ரூபாய் கேபிள் கட்டணம் வசூலிக்கும் ஒரு திட்டம் போதும் கருணாநிதி குடும்பத்தின் சூழ்ச்சியையும், தந்திரத்தையும் நமக்கு விளக்கிச் சொல்ல.
வாக்காளப் பெருமக்களே, சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளைக்காரர்களை எதிர்த்து நம் முன்னோர்கள் போராடியதைப் போல, இந்த தேர்தல் களத்தில் கருணாநிதி குடும்பம் என்ற கொள்ளைக்கார கூட்டத்தை எதிர்த்து மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்த வேண்டியது நம் ஒவ்வொருவர் முன்னும் இருக்கும் கடமை என்பதை உங்கள் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறேன். சில ஆண்டுகள் மத்தியில் அமைச்சராக இருந்து, சில ஆண்டுகள் மாநிலத்தில் ஆட்சி நடத்தி, இத்தனை லட்சம் கோடி ரூபாயை ஒரு குடும்பம் சம்பாதித்தது என்பது உலகத்தில் வேறு எங்குமே காண முடியாத அதிசயம்.
எனதருமை வாக்காளப் பெருமக்களே! தமிழ் நாடு ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிப்பதன் காரணம் என்னவென்று இப்பொழுது புரிகிறதா உங்களுக்கு?
பீகாரை விட, குஜராத்தை விட, பஞ்சாபை விட இன்றைக்கு குறைந்த வளர்ச்சி நிலைக்கு தமிழ் நாடு தள்ளப்பட்டிருக்கிறதே காரணம் என்ன? தமிழர்கள் பாடுபட்டு உழைக்கவில்லையா? தமிழர்கள் சேமிக்கவில்லையா? தமிழர்கள் சிக்கன வாழ்க்கை வாழவில்லையா? பின், ஏன் தமிழகம் தாழ்ந்து போனது? ஒரே ஒரு காரணம் தான். அது, தன் குடும்ப வளர்ச்சி ஒன்றை மட்டுமே மனதில் கொண்டு அதற்கேற்ப மட்டுமே திட்டங்களைத் தீட்டி, அதற்காகவே ஆட்சியை நடத்திய கருணாநிதி என்ற ஒரு மனிதர் தான் இதற்குக் காரணம்.
தலைமுறை தலைமுறையாக பாடுபட்டு தொழில் நடத்துபவர்களெல்லாம் பொருளாதார ஏற்ற இறக்கங்களில் அல்லல்படும் போது, கருணாநிதியும் அவரது குடும்பத்தினர் மட்டும் ஒரு தலைமுறை காலத்திற்குள் குபேரர்களாக மாறி இருப்பதன் மர்மம் என்ன? இந்த கொள்ளைகளுக்கெல்லாம் மக்களை சுரண்டும் இந்த கொடுமைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க உங்களுக்குக் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு இந்தத் தேர்தல். வாக்காளப் பெருமக்களே, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் அளவிற்கு ஊழலில் சாதனை செய்திருக்கிறது கருணாநிதி குடும்பம். கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் அளவிற்கு திமுக கூட்டணி போட்டியிட்ட இடங்களில் எல்லாம் டெபாசிட் இழந்தது என்ற புதிய சாதனையை தமிழக வாக்காளர்களாகிய நீnullங்கள் செய்து முடிக்க வேண்டும். செய்வீர்களா? நீnullங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கோஷம்) அப்போது தான் உங்களை சுரண்டிய ஒரு மனிதருக்கு nullநீங்கள் சரியான தண்டனை கொடுத்தீர்கள் என்று உலகம் உங்களை பாராட்டும். இப்படிப்பட்ட சுயநலவாத கருணாநிதி கடந்த ஐந்து ஆண்டுகளில் பல சாதனைகளை செய்திருப்பதாக கூறுகிறார். என்ன சாதனை செய்தார் கருணாநிதி?
தன்னுடைய மகனை துணை முதலமைச்சர் ஆக்கினார். மற்றொரு மகனை மத்திய அமைச்சராக ஆக்கினார். பேரனை மத்திய அமைச்சர் ஆக்கினார். மகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கினார். இதுதான் கருணாநிதியின் ஐந்தாண்டுகால சாதனை.
ஊழல் செய்வதில் கருணாநிதிக்கு நிகர் யாருமில்லை. 35 ஆண்டுகளுக்கு முன்பே விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் வல்லவர் என்று nullநீதிபதி சர்க்காரியாவிடமிருந்து சான்றிதழ் பெற்றவர் கருணாநிதி. இதுவரை வேறு எந்த முதலமைச்சரும் இப்படிப்பட்ட ஒரு சான்றிதழை பெற்றதில்லை. தமிழக மக்களுக்காக எந்த தியாகத்தையும் கருணாநிதி செய்யவில்லை. சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்க நினைக்கிறார் கருணாநிதி.
வாக்காளப் பெருமக்களே, ஏமாந்து விடாதீர்கள்! ஒரு குடும்பம் மட்டும் வளம் பெற, ஏழு கோடி குடும்பங்கள் அவதிப்பட வேண்டுமா? சிந்தித்து மனசாட்சிப்படி செயல்படுங்கள். ஏழு கோடி மக்கள் வளர்ச்சி பெற; தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கிட; தமிழர்கள் தலை நிமிர்ந்து நின்றிட; பண நாயகத்தின் மூலம் ஜனநாயகத்தை விலை பேச நினைக்கும் கயவர் கூட்டத்தை ஒழித்திட; அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வாக்காளப் பெருமக்களே, கருணாநிதியை இப்படியே விட்டுவிட்டால், தமிழக மக்களாகிய உங்களை எல்லாம் விரட்டிவிட்டு, தமிழகத்தையே தன் குடும்ப வசம் ஆக்கிக் கொண்டுவிடுவார். உங்களை விரட்ட நினைக்கும் கருணாநிதியை நீnullங்கள் விரட்டியடிக்க வேண்டும். செய்வீர்களா? nullநீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்)
ஜனநாயக நாட்டில் அதற்கான ஒரே வழி தேர்தல் தான். இந்தத் தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கருணாநிதியை குடும்பத்தோடு நீnullங்கள் அப்புறப்படுத்த வேண்டும். நான் முதலமைச்சராக இருந்த போது இலவச சைக்கிள், இலவச பாடப் புத்தகம், உழவர் பாதுகாப்புத் திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், மழைnullநீர் சேகரிப்புத் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. விலைவாசி கட்டுக்குள் இருந்தது. மின்வெட்டு என்ற பிரச்சினையே இல்லாமல் இருந்தது. தொழில் வளர்ச்சி பெருகியது. விவசாய உற்பத்தி அதிகரித்தது. சட்டம்ஒழுங்கு சீராக இருந்தது.
ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. உங்கள் பணத்திலிருந்து ஒரு சிலவற்றை உங்களுக்கு கொடுத்து, தன் குடும்ப வருமானத்தை பெருக்கிக் கொள்ளக்கூடிய திட்டங்களை மட்டுமே கருணாநிதியால் செயல்படுத்த முடியும். வளர்ச்சித் திட்டங்களை கருணாநிதியால் செயல்படுத்தவே முடியாது. அதை என்னால் நிச்சயம் செயல்படுத்த முடியும். ஏற்கெனவே செயல்படுத்தி காட்டி இருக்கிறேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்காளப் பெருமக்களே, கருணாநிதியால் விலைவாசியை கட்டுப்படுத்த முடியுமா? முடியாது. ஏனெனில் கடத்தல் பதுக்கல் தொழில்கள் மூலம் அவருடைய குடும்பத்திற்கு வருமானம் வருகிறது. ஐந்தாண்டுகளாக கருணாநிதியால் விலைவாசியை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் என்னால் நிச்சயம் முடியும். இதை ஏற்கெனவே எனது ஆட்சிக் காலத்தில் நிரூபித்துக் காட்டி இருக்கிறேன்.
கருணாநிதியால் மின்வெட்டைப் போக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்வெட்டைத் தான் அதிகப்படுத்தி இருக்கிறார் கருணாநிதி. ஆனால், என்னால் மின்வெட்டைப் போக்க முடியும். எனது ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமாக ஆக்கிக் காட்டி இருக்கிறேன். கருணாநிதியால் சட்டம்ஒழுங்கை பேணிக் காக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக சட்டம்ஒழுங்கை நிலைநாட்டாத கருணாநிதி இனிமேலா நிலை நாட்டப் போகிறார்? ஆனால், என்னால் நிச்சயம் சட்டம்ஒழுங்கை பாதுகாக்க முடியும். கருணாநிதியால் கேபிள் டி.வி. தொழிலை அரசுடைமையாக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது. தமிழ்நாட்டில் இந்தத் தொழிலை நடத்துகின்ற ஒரே குடும்பம் கருணாநிதி குடும்பம் தான். ஆனால், என்னால் கேபிள் டி.வி. தொழிலை அரசுடமையாக்க முடியும். நிச்சயம் இந்த முறை அதை நடத்திக் காட்டுவேன். கருணாநிதியால் திரைப்படத் துறையை சுதந்திரமாக செயல்பட வைக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. இந்தத் தொழிலே கருணாநிதியின் குடும்பத் தொழிலாகிவிட்டது. ஆனால், என்னால் முடியும்.
குடிநீர் பிரிச்சனைக்கு புதிய வீராணம் திட்டம் கொண்டு வந்தேன். கடல் நீரை குடிநீராக்கும திட்டம் கொண்டுவந்து குடிநீர் பிரச்சனைக்கு உரிய நடவடிக்கையை மேற்கொண்டேன். தமிழகத்தில் எல்லா வகையிலும் கொள்ளை அடித்த கருணாநிதி குடும்பம், கல்வித்துறையையும் விட்டுவைக்கவில்லை. தனியார் கல்வி கட்டண கொள்ளைக்கு எதிராக கருணாநிதி குடும்பத்தினர் என்ன செய்தனர்?
கல்விக்கட்டணம் சம்பந்தமாக நீதியரசர் கோவிந்தராஜன் கமிட்டி அமைத்தார்கள். கோவிந்தராஜன் கமிட்டி அறிக்கையை சமர்ப்பித்தது. தனியார் கல்வி நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்ககூடாது என்று அறிவித்தது. ஆனால், தனியார் கல்வி நிறுவனங்கள் , இவர்களுக்கு கப்பம் கட்டிவிட்டு கூடுதல் கட்டணங்களை பெற்றோரிடம் வசூலித்தது. இதனால் பாதிக்கப்பட்டது கூடுதல் கட்டணம் கட்டிய பெற்றோர்களும், கப்பம் கட்டிய கல்வி நிறுவனங்களும் தான்.
இதிலும் இவர்கள் குடும்பம் தான் ஆதாயம் அடைந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஒரு முத்தரப்பு குழு அமைத்து, கல்விக்கட்டணம் குறைக்கப்படும்.
தோல்வி பயத்தால் கருணாநிதி குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சி செய்கிறார். ராமாயணத்தில் ஒரு கதை உண்டு. ராமன் யுத்தத்தில் எப்படியும் வென்றுவிடுவான் என்று தெரிந்து கொண்ட ராவணன், ராமனின் மன உறுதியை சீர்குலைக்க, ஒரு மாய சீதையை உருவாக்கி, அந்த சீதையை கொல்வது போல் ஒரு காட்சியை உருவாக்கினான். இதனால், ராமன் தன் கண் எதிரிலேயே தன் மனைவி கொல்லப்படுவதை பார்த்து மயங்கி விழுந்தான்.
ராமனைத் தேற்றிய விபீஷணன் இந்த காட்சி உண்மையல்ல, மாயத்தோற்றம் என்றான். கருணாநிதியும் தான் தோற்பது உறுதி என்று தெரிந்ததால், வாக்காளர்களை மனமாற்றம் அடையச்செய்ய, பணத்தை வாரி இறைக்கிறார். 3 நாளில் பண மழை கொட்டுகிறது. பணத்தை வாங்கிக்கொண்டு வாக்காளர்கள் ஓட்டு போடுவார்கள் என்று திட்டமிடுகிறார்கள். தேர்தல் முடிவுகள் கருணாநிதியின் ஊழல் பணத்தால் மாறாது. நமது வெற்றியை யாராலும் தட்டிப்பறிக்க முடியாது. யாரும் சோர்வடைய வேண்டாம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் பெரும்பாலானவை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக் கூடிய திட்டங்கள் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொண்டு; தமிழ்நாட்டை கயவர்களிடமிருந்து காப்பாற்ற; இந்தியாவிலேயே தமிழகத்தை, முதன்மை மாநிலமாக ஆக்க; அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று உங்களை எல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
போதமலை மலைக் கிராமத்திற்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட இ.வி.எம்.
18 Apr 2024ராசிபுரம், ராசிபுரம் அருகே போதமலை மலைக் கிராம வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் அதிகாரிகள் சுமந்து
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.