எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், நவ. - 6 - அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறப் போவது தற்போதைய அதிபர் பாரக் ஒபாமாவா அல்லது குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் ரோம்னியா என்பது தேர்தலுக்கு பிறகு தெரிந்து விடும். கிட்டத்தட்ட 18 மாதங்களாக அமெரிக்கா முழுவதும் நடைபெற்று வரும் இந்த தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் ஒரு முடிவுக்கு வந்தது. இறுதிக்கட்ட வாக்கு சேகரிக்கும் பணியில் அதிபர் பாரக் ஒபாமாவும், அவரை எதிர்த்து போட்டியிடும் ரோம்னியும் ஈடுபட்டனர். இந்த தேர்தலில் அதிபர் ஒபாமாவுக்கு பெண்களின் ஆதரவு அமோகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இவரை எதிர்த்து போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் ரோம்னிக்கு ஆண் வாக்காளர்களின் ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த 18 மாதங்களாக நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது இரு வேட்பாளர்களுமே கிட்டத்தட்ட 3 முறை நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது தன்னை எதிர்த்து போட்டியிடும் ரோம்னியை சில கட்டங்களில் ஒபாமா கிண்டலடித்தும் பேசினார். இது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரச்சாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் ஒபாமாவுக்கு 48 சதவீத ஆதரவும், ரோம்னிக்கு 45 சதவீத ஆதரவும் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. எனவே ஒபாமா மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவே வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இரவுடன் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. இன்று அமெரிக்க அதிபர் தேர்தல் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடக்கிறது. எனவே வெள்ளை மாளிகைக்குள் அடியெடுத்து வைக்கப் போவது ஒபாமாவா, அல்லது ரோம்னியா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும். ஒபாமாவுக்கு வாக்கு சேகரித்த பாடகி
அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில் விஸ்கான்சின் மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பராக் ஒபாமாவின் பார்வர்ட் என்ற பிரசார வாசகம் பொறிக்கப்பட்ட இறுக்கமான, கவர்ச்சி உடை அணிந்து ஆடிப் பாடி வாக்கு சேகரித்தார் பிரபல பாடகி கேத்தி பெர்ரி.
ஒபாமா, ஒபாமா, ஒபாமா... இதுதான் அமெரிக்கா முழுவதும் பெரும்பான்மையாக ஒலிக்கும் குரலாக மாறியுள்ளது. இன்று தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமெரிக்கா முழுவதும் படு உஷ்ணமாகியுள்ளது. சான்டி புயலின் தாக்குதல் சோகத்தையும் தாண்டி ஒபாமா புகழ் பாடும் கோஷங்கள் அதிகரித்து வருகின்றன.இந்த நிலையில் விஸ்கான்சின் மாகாணம், மில்வாக்கி நகரில் உள்ள டெல்டா மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரபல பாப் பாடகி கேத்தி பெர்ரி கலந்து கொண்டு ஆடிப் பாடி ஒபாமாவுக்காக வாக்கு சேகரித்தார். ஒபாமா இந்த தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்திய பார்வர்ட் அதாவது முன்னேறிச் செல்வோம் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட, இறுக்கமான சிவப்பு, வெள்ளை, நீல நிறத்திலான உடையில் அவர் மேடையேறிப் பாடிய போது அரங்கமே குதூகலித்து கோஷமிட்டு கூடப் பாடியது.
அமெரிக்க தேச பக்திப் பாடலுடன் பாட ஆரம்பித்த கேத்தி பெர்ரி, தொடர்ந்து ஒபாமாவை ஆதரித்துப் பாடினார். படு கவர்ச்சிகரமான மேக்கப்புடனும் பாடிய கேத்தி அத்தனை பேரின் இதயங்களையும் கொள்ளை கொண்டு விட்டார். பாடலின் இடையே, சாண்டி புயலில் பாதிக்கப்பட்டோருக்கு தாராளமாக உதவுங்கள் என்ற கோரிக்கையையும் அவர் வைக்கத் தவறவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.