முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டாசு குடோன் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.1 லட்சம்

வியாழக்கிழமை, 27 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.27 - சேலம் மாவட்டம் மேச்சேரி கிராமத்தில் பட்டாசு குடோனில் ஏற்பட்டதீவிபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-   

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி கிராமம், செங்காட்டூர் பிரிவு ரோடு என்ற இடத்தில் உள்ள பட்டாசு குடோனில்  25.12.2012 அன்று ஏற்பட்ட 

வெடி  விபத்தில்  எட்டு  நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், குளக்கட்டாக்குறிச்சி கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில்  25.12.2012 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் குளக்கட்டாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 

ராஜம்மாள் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து  நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இவ்விரு விபத்துகளில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு  எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும்,  இவ்விரு விபத்துகளில் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்று வருகிறார்கள் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தம்  அடைந்தேன். சிகிச்சை பெற்று வரும் இவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை  அதிகாரிகளுக்கும், சேலம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட நிருவாகங்களுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.  இவர்கள்  அனைவரும் விரைவில் nullரண குணமடைந்து வீடு திரும்ப  வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 இவ்விரு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு  தலா  ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/​ ரூபாயும்,  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்