எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.27 - சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை ஆதரிக்க மாட்டோம் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பை மீறி ஆரம்பிக்கப்பட்டுள்ள சென்னை அண்ணாநகரில் உள்ள வால்மார்ட் அலுவலகத்தை இடதுசாரி அமைப்புகளின் ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்த விபரம் வருமாறு:-
இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய மூலதனத்தை, பன்னாட்டு நிறுவனங்களை மத்திய அரச அனுமதித்துள்ளது. இது இந்திய வர்த்தகச் சந்தையை கைப்பற்றவும், வேலைவாய்ப்பைப் பறிக்கவும், வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்கவுமே வழிவகுக்கும். எனவே, இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. தமிழகத்தில் வால்மார்ட் நிறுவனம், அண்ணாநகரில் தனது வணிக அலுவலகத்தை திறந்துள்ளது. திருவேற்காடு பள்ளிக் குப்பத்தில் ஒரு லட்சம் சதுர அடியில் சேமிப்பு குளிர்பதன கிடங்கையும் அந்த நிறுவனம் அமைத்து வருகிறது. சில்லரை வியாபாரிகளை அணுகி அனைத்து பொருட்களையும் குறைந்த விலை, கடன் வசதி, விரும்பிய இடத்தில் விநியோகம் உள்ளிட்ட பலவற்றைச் சொல்லி உறுப்பினர்களாக சேர்த்து வருகிறது. ஜனவரி முதல் வியாபாரத்தை தொடங்கவும் உள்ளது. சில்லரை வணிகத்தில் வால்மார்ட் போன்ற நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம் என்ற தமிழக அரசின் முதல்வர் ஜெயலலிதாவின் முடிவையும் மீறி இத்தகைய அத்துமீறல் நடந்து வருகிறது.
இதனை கண்டித்தும், வால்மார்ட் நிறுவனத்தை வெளியேற்ற வலியுறுத்தியும் சிபிஎம், சிபிஐ கட்சிகள் சார்பில் நேற்று (டிச.26) இந்த போராட்டம் நடைபெற்றது. அண்ணாநகர் மேற்கு போக்குவரத்து பணிமனை அருகே இடதுசாரி கட்சிகளின் ஊழியர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டனர். பன்னாட்டு நிறுவங்கள் இந்தியாவிற்குள் வந்ததால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை விவரிக்கும் வகையில் கட்சி ஊழியர்கள் வேடமிட்டு வந்தனர்.
பன்னாட்டு நிறுவனங்களால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் கருத்துப்படங்களை கொண்டு வந்திருந்தனர். வால்மார்ட் அலுவலகத்தை நோக்கி பெண்கள், மாணவர்கள், வாலிபர்கள், தொழிலாளர்கள், கட்சி ஊழியர்கள், வணிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
மாநிலச் செயலாளர் தா.பாண்டின் தலைமையில் ஊர்வலமாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான முழக்கங்களை முழங்கியபடி, போலீசாரின் 6 பாதுகாப்பு வளையங்களையும் உடைத்துக் கொண்டு சென்றனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனையும் மீறி, வால்மார்ட் அலுவலகம் அமைந்துள்ள ஏ.வி.கே.டவரை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். அப்போது இளைஞர்கள் அமெரிக்க கொடியை எரித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:-
சில்லரை வணிகம் செய்யவில்லை; சில்லரை வணிகர்களுக்கு மொத்தமாக பொருட்களை வழங்குகிறோம் என்று வால்மார்ட் நிறுவனம் புது விளக்கம் தருகிறது. சில்லரை வர்த்தகத்தில் தந்திரமாக நுழைகிறது. திருவேற்காட்டிலிருந்தும், அண்ணாநகரிலிருந்தும் வால்மார்ட் நிறுவனத்தை வெளியேற்ற வேண்டுமென்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. அதனை வலியுறுத்தி இந்த மகத்தான முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது. வால்மார்ட் நிறுவனத்தை முழுமையாக அகற்றும் வரை போராட்டம் ஓயாது. இந்தியாவில் எங்கு வால்மார்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் கடைகள் திறந்தாலும் அதனை எதிர்த்து இடதுசாரிகள் போராடுவார்கள் என்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்த மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ, பொதுச் செயலாளர் பெ.சண்முகம், சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ, சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் பி.செல்வசிங், என்.சீனிவாசன், என்.குணசேகரன், கே.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ் எம்எல்ஏ, எஸ்.கண்ணன், ப.சுந்தரராசன் மாவட்டச் செயலாளர்கள் ஏ.பாக்கியம் (தென்சென்னை), கே.செல்வராஜ் (திருவள்ளுர்), மோகனன் (காஞ்சிபுரம்) சிபிஐ தேசியக்குழு உறுப்பினர்கள் எஸ்.எஸ்.தியாகராஜன், மு.வீரபாண்டியன், மாவட்டச் செயலாளர்கள் மு.சம்பத் (வடசென்னை), எஸ்.ஏழுமலை (தென்சென்னை), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆர்.வேல்முருகன், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.எஸ்.கனகராஜ், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்கள் கே.வனஜகுமாரி, எஸ்.ராணி உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக செய்கிறேன் - அர்ஜூன் தாஸ்
06 May 2024தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.
-
ஓடிடி பிளஸ் தளத்தை துவங்கி வைத்த சீனுராமசாமி
06 May 2024தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை.