இந்திய மத்திய வங்கியில் உள்ள 'தொழிற்பழகுநர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜன.20 - காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் இன்னமும் வெளியிடாது காலம் தாழ்த்துவது; மின்சாரம் தர மறுப்பது; கூடுதல் நிதி தர மறுப்பது; மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டைக் குறைப்பது என தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருவதோடு மட்டுமல்லாமல், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகளையும், ரயில்வே கட்டணத்தையும் உயர்த்தி, ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும், தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசைக் கண்டித்து, அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் அரசு ரீதியான மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் 24.1.2013 அன்று நடைபெறுகிறது.
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய அம்சமாக விளங்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில், மாநில அரசின் உரிமைகளை பறிப்பதையும், காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகளின் நியாயமான கோரிக்கைகளை நிராகரிப்பதையும், இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை எடுப்பதையும், தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது.
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடாத சூழ்நிலையில், அதனை தி.மு.க.வும் வேடிக்கை பார்த்து வந்த நிலையில், நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் பாரதப் பிரதமரை நேரில் சந்தித்தும், கடிதங்கள் வாயிலாகவும் இதனை வலியுறுத்தினேன். இதனை மத்திய அரசு உதாசீனம் செய்துவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கினை தொடுத்து, அதன் விளைவாக 31.1.2013-க்குள் மத்திய அரசு தனது முடிவினை அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு இந்த விஷயத்தில் மவுனம் சாதித்து வருகிறது. கருணாநிதியும் தன்னலத்தைக் கருத்தில் கொண்டு காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடக் கூடாது என்று மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளதாக தமிழக மக்கள் கருதுகின்றனர்.
இது மட்டும் அல்லாமல், டெல்லி மாநில அரசால் தேவையில்லை என்று ஒப்படைக்கப்பட்ட மின்சாரத்தை தமிழகத்திற்கு தருவதற்கும், கூடங்குளம் மற்றும் மத்திய அரசு நிறுவனங்கள் மூலம் தமிழ் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையினை நிறைவேற்றுவதற்கும், தமிழகத்திற்கு தேவையான மண்ணெண்ணெயினை அளிப்பதற்கும், கூடுதல் நிதியினை ஒதுக்கீடு செய்வதற்கும், டிஜிட்டல் உரிமத்தை தமிழக மக்களின் நலனுக்காக செயல்படும் தமிழ் நாடு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனுக்கு தருவதற்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மறுத்து வருகிறது.
இன்னும் சொல்லப் போனால், தமிழக அரசின் தேவைகளைப் பற்றியும், உரிமைகளைப் பற்றியும், திட்டங்களைப் பற்றியும் தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் தெரிவிப்பதற்கு கூட போதிய கால அவகாசத்தை வழங்க மத்திய அரசு மறுக்கிறது.
இதே போன்று, விஷம் போல் உயர்ந்து கொண்டே இருக்கும் விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, ரயில்வே கட்டண உயர்வு என அனைத்தையும் உயர்த்தி விலைவாசி மேலும் உயர வழி வகுக்கும் நடவடிக்கைகளை, மக்களை வாட்டி வதைக்கும் நடவடிக்கைகளை, மக்களை சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கும் நடவடிக்கைகளை திமுக அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு எடுத்து வருகிறது.
தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கின்ற, தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடுகின்ற, கூட்டாட்சித் தத்துவத்திற்கு கேடு விளைவிக்கின்ற தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கும், மத்திய அரசுக்கு உறுதுணையாக இருந்து கொண்டு, தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் தி.மு.க. தலைவர்
கருணாநிதிக்கும் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கின்ற; காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடாத; தமிழகத்திற்கு தேவையானவற்றை தர மறுக்கின்ற; பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகளையும் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே இருக்கின்ற; ரயில்வே கட்டணத்தை உயர்த்தியுள்ள தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசைக் கண்டித்தும், தமிழ் நாட்டின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வலியுறுத்தியும், 24.1.2013 வியாழக் கிழமை அன்று காலை 10.30 மணி அளவில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில், அரசு ரீதியான மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
மாவட்ட அளவில் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை ஏற்போர் மற்றும் முன்னிலை வகிப்போர்களது பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது.
கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த, மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளும், அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் இணைந்து செயல்பட்டு வரும் அனைத்து இணைப்புச் சங்கங்களின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் இந்த ஆர்ப்பாட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டு, திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான சர்வாதிகார மத்திய கூட்டணி அரசுக்கு தங்களுடைய கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்.
மக்கள் நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டைக்கோஸ் வடை![]() 1 day 12 hours ago |
கீரை ஆம்லெட்![]() 4 days 11 hours ago |
உருளை கிழங்கு புட்டு![]() 1 week 1 day ago |
-
மகளிர் உலக குத்துச்சண்டை போட்டி : 2ஆவது தங்கம் வென்றது இந்தியா
26 Mar 2023புதுடெல்லி : உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் நிது கங்காசையடுத்து இந்திய வீராங்கனை சவீதி புரா தங்க பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-26-03-2023
26 Mar 2023 -
இம்ரான்கானுக்கு இன்று வரை ஜாமீன் நீட்டிப்பு
26 Mar 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு லாகூர் ஐகோர்ட்டு ஜாமீனை இன்று திங்கட்கிழமை வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
-
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி?
26 Mar 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
இந்திய வம்சாவளி சிறுமி சுட்டுக்கொலை செய்த அமெரிக்கருக்கு 100 ஆண்டு சிறை
26 Mar 2023நியூயார்க் : அமெரிக்காவில் 5 வயது இந்திய வம்சாவளி சிறுமியை சுட்டு கொன்ற அமெரிக்கருக்கு மொத்தம் 100 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.
-
தமிழர்களின் பாரம்பரிய பெருமையை சொல்ல 2 நூற்றாண்டுகள் தேவை : அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
26 Mar 2023மதுரை : தமிழர்களின் பாரம்பரிய பெருமையை சொல்ல வேண்டும் என்றால் அதற்கு 2 நூற்றாண்டுகள் தேவைப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
-
தமிழகம் - காசி இடையேயான உறவு: மான் கீ பாத்தில் பிரதமர் மோடி பேச்சு
26 Mar 2023புதுடெல்லி : தமிழகம் மற்றும் காசி இடையேயான பழமையான உறவை காசி தமிழ் சங்கமம் கொண்டாடி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
தமிழகம், புதுச்சேரியில் 30-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்
26 Mar 2023சென்னை : தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 30-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பழைய விதிகள் தொடர்ந்தால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டி : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
26 Mar 2023மயிலாடுதுறை : பழைய விதிகள் தொடர்ந்தால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவேன் என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
-
மதுரை மெட்ரோ திட்ட அறிக்கை தயாரிக்க ரூ. 1.35 கோடி ஒதுக்கீடு
26 Mar 2023மதுரை : மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.1.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
திருத்தணி முருகன் கோவிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம்
26 Mar 2023திருவள்ளூர் : திருத்தணி முருகன் கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று சாமி தரிசனம் செய்தார்.
-
கால்பந்து உலகில் பிரேசிலுக்கு எதிராக முதல் வெற்றி : அசாத்திய அணியை அப்செட் செய்த மொராக்கோ
26 Mar 2023டேன்ஜர் : கால்பந்து விளையாட்டு உலகின் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணிக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது ஆப்பிரிக்க அணியான மொராக்கோ.
-
குரூப்-4 தேர்வு முடிவு: குளறுபடிகளை சரி செய்ய தேர்வர்கள் கோரிக்கை
26 Mar 2023சென்னை : வெளியிடப்பட்டுள்ள குரூப் - 4 தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்து, சரியான முடிவுகளை வெளியிட வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
தமிழக சட்டசபையில் இன்று இரவு காங். எம்.எல்.ஏ.க்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டம்
26 Mar 2023சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று இரவு உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
-
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி: தனது டுவிட்டர் பக்கத்தை மாற்றம் செய்த ராகுல்காந்தி
26 Mar 2023புதுடெல்லி : தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி. என ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தை மாற்றம் செய்துள்ளார்.
-
வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு : ஏப். 1 முதல் நடைமுறைக்கு வருகிறது
26 Mar 2023புதுடெல்லி : 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில், புதிய வரி முறையின் கீழ் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டது. ஏப்ரல
-
ராஜஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவு
26 Mar 2023ஜெய்ப்பூர் : ராஜஸ்தானின் பைக்னர் மாவட்டத்தில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.
-
இலங்கை அரசு கையகப்படுத்திய தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை: எல்.முருகன்
26 Mar 2023மதுரை : இலங்கை அரசு கையகப்படுத்திய தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.
-
36 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் எல்.வி.எம்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது : இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
26 Mar 2023ஸ்ரீஹரிகோட்டா : எல்.வி.எம்-3' ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
-
நியூயார்க்கில் புகழ்பெற்ற பிளாடிரான் கட்டிடம் ரூ.1,564 கோடிக்கு ஏலம்
26 Mar 2023நியூயார்க் : நியூயார்க்கில் புகழ் பெற்ற 22 மாடிகளை கொண்ட பிளாடிரான் கட்டிடம் ரூ. 1,564 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.
-
‘ஓய்வு பெற்றாலும் கிரிக்கெட்டில் எனது பங்களிப்பு இருக்கும்’ - பயிற்சியாளராகும் விருப்பத்தை தெரிவித்த டிம் பெய்ன்
26 Mar 2023புதுடெல்லி : ஓய்வு பெற்றாலும் கிரிக்கெட்டில் தனது பங்களிப்பு இருக்கும் என்று ஆஸ்திரேலிய முன்னள் வீரர் டிம் பெய்ன் தனது பயிற்சியாளராகும் விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
-
கீழடி அருங்காட்சியகத்தை காண ஏப். 1-ம் தேதி முதல் கட்டணம்
26 Mar 2023சிவகங்கை : கீழடி அருங்காட்சியகத்தை காண வரும் 1-ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதத்தை நிறுவும் ரஷ்யா : ஐரோப்பிய நாடுகள் கலக்கம்
26 Mar 2023மாஸ்கோ : ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பெலாரஸ் நாட்டில் ரஷ்யா அணு ஆயுதத்தை நிறுவ உள்ளது.
-
புளோரிடா பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழுவில் இந்தியர்
26 Mar 2023வாஷிங்டன் : புளோரிடா பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழுவில் இந்தியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
ராகுலின் எம்.பி. பதவி பறிப்பு எதிரொலி: டெல்லியில் தடையை மீறி காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம் : மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா பங்கேற்பு
26 Mar 2023புதுடெல்லி : ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து நேற்று நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.