எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விருதுநகர், ஜன. 20 - திருத்தங்கல்,சிவகாசி மற்றும் பூவநாதபுரம் ஆகிய இடங்களில் உள்ளஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.15 லட்சம் மதிப்பில் இரண்டு புதிய மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளையும்;, கூடுதல் நீர் ஆதாரத்துடன் புணரமைக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியையும் தமிழக செய்தி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நகராட்சி சி.ரா. அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ. 6 லட்சம் மதிப்பில் 1662 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் 30,000 லிட்டர் கொள்ள கொண்ட புதிய மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியையும், சிவகாசி நகராட்சி அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ. 5 லட்சம் மதிப்பில் 720 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் 10,000 லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியையும், பூவநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.4 லட்சம் மதிப்பில் 584 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் நீர் ஆதாரத்துடன் புணரமைக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியையும் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்து பேசியதாவது :-
தமிழகம் கல்வியில் முதலிடம் பெற மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கல்வித்துறைக்கு ரூ. 14500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சாதனை படைத்துள்ளார் தமிழக முதல்வர். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கிட ஊக்குவிக்கும் வகையில் கட்டணமில்லா கல்வி, சத்துணவு, பேரூந்து பயண அட்டை, விலையில்லா மடிகணினிகள், 2 ஜோடி சீருடைகளுக்கு பதிலாக நான்கு ஜோடி சீரூடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப்பை, கணித உபகரணப்பெட்டி, வண்ண பென்சில்கள், புவியியல் வரைப்பட புத்தகம், காலணிகள், ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு பதிவு வசதி, போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
மாணவர்கள் படிக்கின்ற பணியினை மட்டும் செய்தால் போதும். மாணவ மாணவியர்கள் கல்வி பயில அனைத்து உதவிகளையும் தமிழக முதல்வர் செய்து வருகிறார். உலகில் உள்ள செல்வங்களில் எல்லாம் முதன்மையானது கல்விச் செல்வம்தான். மற்ற செல்வங்கள் எல்லாம் அழிந்து விடும் கல்விச் செல்வம் ஆனது நமது உயிர் உள்ள வரை உடனிருக்கும். இதை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மாணவ, மாணவிகளின் தாயாக, தந்தையாக இருப்பதோடு மட்டும் இல்லாமல் குருவாக இருந்து கல்விக்காக அனைத்து உதவிகளையும் செய்து மாணவ, மாணவிகளை காக்கின்ற கடவுளாக திகழ்கிறார். எதிர்கால ஜனநாயகத்தின் தூண்களாக விளங்கும் இன்றைய மாணவ சமுதாயம், கல்வித்துறையில் முதல்வர் அளிக்கும் நலத் திட்டங்களை சரியான முறையில் பயன்படுத்தி கல்வியில் முழுமை பெற வேண்டும்.
திருத்தங்கல் சி.ரா.அரசு மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவன் நான், நான் படிக்கின்ற காலத்தில் மாணவர்களின் குடிநீர் தேவைக்காக சிறிய குடிநீர் தொட்டி மட்டுமே இருந்தது. தமிழக முதல்வர் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு சுகாதாரமான தடையில்லா குடிநீர் வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி எனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 2012-13 ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு செய்து மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.
சிவகாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் சிவகாசி தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்யப்பட்டு வருகிறது. திருத்தங்கல் சி.ரா. அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பெண்கள் சுகாதார வளாகம் ஆண்கள் சுகாதார வளாகம் ஆகியவை தலா ரூ. 5லட்சம் மதிப்பீட்டில் விரைவில் கட்டப்பட உள்ளது. எனது தொகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்ய ஒவ்வொரு நிமிடமும் நான் தயாராக இருக்கிறேன் என்றார்.
பூவநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி திறப்பு விழாவின் போது,
சிவகாசியில் இருந்து பூவநாதபுரம் வழியாக வடபட்டி கிராமத்திற்கு காலை 9.30 மணிக்கும் மதியம் 2.30 மணிக்கும் அரசு பேருந்து வந்து செல்கிறது. ஆசிரியர்களும், மாணவர்களும் பள்ளிக்கு வந்து செல்லும் வகையில் பேருந்தினை காலை 8.30-க்கும் மாலை 4.30 க்கும் மாற்றி அமைக்க மாணவர்களும், ஆசிரியர்களும் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையின் மீது நடவடிக்கையாக அமைச்சர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சிவகாசி கிளை மேலாளரிட
ம் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பூவநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில், அரசு பேருந்தின் நேரத்தை மாற்றி அமைக்க கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சிகளில் திருத்தங்கல் நகர் மன்ற தலைவர் தனலட்சுமிகணேசமூர்த்தி, சிவகாசி நகர்மன்ற தலைவர் மரு.கதிரவன், நகர்மன்ற துணைத்தலைவர் அசன்பகுருதீன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கருப்பசாமி, பூவநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திருநாராயணசாமி, திருத்தங்கல் நகர் மன்ற உறுப்பினர்கள் கோவில்பிள்ளை, கிருஷ்ணமூர்த்தி, பரமன், சீனிவாசன், மாரீஸ்வரிகாளிராஜ், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் ரெங்கன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் மு.புகழேந்தி, உதவி நிர்வாக பொறியாளர் குணசேகரன், உதவி பொறியாளர் ராமசுப்பிரமணி, திருத்தங்கல் நகராட்சி ஆணையாளர் (பொ) முருகன், தலைமை ஆசிரியர்கள் ராஜாராம், பாலசுப்பிரமணியம், கதிரேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.மாரியப்பன், வட்டாட்சியர் சாந்தா, ரமணபிரியன் உட்பட ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2025
13 May 2025 -
மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளை தி.மு.க. அரசு நிலைநாட்டி வருகிறது : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
13 May 2025சென்னை : மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளை தி.மு.க. அரசு நிலைநாட்டி வருகிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
இந்தியாவுடனான மோதலில் 11 பாக்., வீரர்கள் உயிரிழப்பு
13 May 2025இஸ்லாமாபாத் : மே 7 முதல் 4 நாட்களுக்கு நடைபெற்ற இந்தியாவுடனான மோதலில் தங்கள் ராணுவத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
-
ரூ.586.94 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 13 பகுதிகளில் 5,180 அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு : அமைச்சர் தா. மோ. அன்பரசன் தகவல்
13 May 2025சென்னை : 13 திட்டப்பகுதிகளில் 5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படவுள்ளதாக குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு திட்டங்களால் மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டி : தமிழக அரசு பெருமிதம்
13 May 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு திட்டங்களால் மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டியாக உள்ளது என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்து
-
9 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது: மகளிர் உரிமைத் திட்டத்தில் வரும் ஜூன் 4-ம் தேதி விண்ணப்பிக்கலாம்
13 May 2025சென்னை : மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுப்பட்ட பெண்கள் வரும் ஜூன் 4-ம் தேதி விண்ணப்பிக்கலாம்.
-
அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்க இந்தியா முடிவு
13 May 2025புதுடெல்லி : அமெரிக்க தயாரிப்புகளுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது.
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : கோவை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
13 May 2025கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
சி.பி.எஸ்.சி 10, 12-ம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
13 May 2025புதுதில்லி : நாடு முழுவதும் 10, 12-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
-
சி.பி.எஸ்.இ. +2 தேர்வில் 83.39 சதவீதம் பேர் தேர்ச்சி
13 May 2025புதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 83.39 சதவீத மாணவர்க்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்ச்சியில் சென்னை மண்டலம் 4-ம் இடம்
13 May 2025புதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் வெளியிடப்பட்ட நிலையில், மொத்தம் 93.66 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
13 May 2025சென்னை : பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது.
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 8 பெண்களுக்கு 85 லட்சம் ரூபாய் இழப்பீடு: சி.பி.ஐ. வழக்குரைஞர்
13 May 2025கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 ல
-
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்ற நடந்த முயற்சிகளை தி.மு.க .முறியடித்தது : தீர்ப்பை வரவேற்று துணை முதல்வர் உதயநிதி பதிவு
13 May 2025சென்னை : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்றைக்கு நீதி கிடைக்க தி.மு.க.வே காரணம் என்று பொள்ளாச்சி வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து வழங்கிய தீர்ப்பை வரவேற்று துணை மு
-
அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை : 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
13 May 2025சென்னை : அந்தமானில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தில் திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக
-
பொள்ளாச்சி வழக்கு: பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும்: அன்புமணி
13 May 2025சென்னை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை சிறை என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
-
எங்களுடைய கூட்டணி வலுவாக இருக்கிறது: 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி கூட்டணி தொடரும் : முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில்
13 May 2025சென்னை : எங்களுடைய கூட்டணி வலுவாக, கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
சேலம் ஏற்காடு கோடை விழா வரும் 23-ம் தேதி தொடக்கம்: அமைச்சர் ராஜேந்திரன் தகவல்
13 May 2025சேலம், சேலம் ஏற்காடு கோடை விழா வருகின்ற 23ஆம் தேதி துவங்கி 29ஆம் தேதி வரை தொடர்ந்து 7 நாள்கள் நடைபெறும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.
-
பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு பிரதமர் மோடி திடீர் விசிட் : வீரர்களுடன் கலந்துரையாடி பாராட்டு
13 May 2025புதுடெல்லி : பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, வீரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் துணிச்சலை பாராட்டினார்.
-
முப்படைத் தளபதிகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனை
13 May 2025புதுடெல்லி, பாதுகாப்புத் துறைச் செயலாளர், முப்படைத் தளபதிகளுடன் நேற்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனை நடத்தினார்.
-
பாகிஸ்தான் ராணுவத்தின் 51 இடங்களை தாக்கினோம்: பலுசிஸ்தான் விடுதலைப்படை தகவல்
13 May 2025குவெட்டா, பாகிஸ்தானின் தென்மேற்கில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க கோரி பலுசிஸ்தான் விடுதலைப்படை (பிஎல்ஏ) என்ற பெயரில் கிளர்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக
-
லிபியா தலைநகரில் கடும் மோதல்: 6 பேர் உயிரிழப்பு
13 May 2025வட ஆப்பிரிக்க, வட ஆப்பிரிக்க நாடான லிபியாவின் தலைநகர் திரிப்பொலியில் இரண்டு ஆயுதப் படைகளுக்கு இடையிலான மோதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
-
இந்தியாவுடனான மோதலில் 11 பாக்., வீரர்கள் உயிரிழப்பு
13 May 2025இஸ்லாமாபாத் : மே 7 முதல் 4 நாட்களுக்கு நடைபெற்ற இந்தியாவுடனான மோதலில் தங்கள் ராணுவத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
-
பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு: தமிழ்நாடு தலைவர்கள் கருத்து
13 May 2025சென்னை, தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், 9 பேருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
-
ஜம்மு -காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
13 May 2025ஜம்மு : ஜம்மு -காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) காலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.