முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்சிங் மீது வழக்கு - சாந்திபூஷன் தொடர்ந்தார்

புதன்கிழமை, 20 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஏப்.20 - சி.டி.விவகாரம் தொடர்பாக சமாஜ்வாடி கட்சி முன்னாள் பொதுச் செயலாளர் அமர்சிங் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார் வழக்கறிஞர் சாந்திபூஷன்.

நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுத்து அவர்களை சரிக்கட்ட முடியும் என்று சாந்திபூஷன் பேசுவது போன்ற சி.டி. அண்மையில் சில தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் அமர்சிங் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளார் சாந்திபூஷன். அந்த சி.டியில் இருப்பது அமர்சிங்கின் குரலாக இருக்கலாம். எனவே இந்த சி.டியை அமர்சிங் தயாரித்திருக்கலாம். அல்லது போலி சி.டி. தயாரிக்க அவர் உதவியிருக்கலாம். இவ்வாறு போலி சி.டி. தயாரித்து தொலைக்காட்சி நிலையங்களுக்கு அனுப்பி ஒளிபரப்பு செய்திருப்பதன் மூலம் எனக்கு களங்கத்தை ஏற்படுத்தியதோடு நீதிமன்றத்தையும் அவமதித்துள்ளார். இதன் மூலம் நீதிபதிகள் பெயரை இழுத்து அலைக்கற்றை முறைகேடு புகார் வழக்கையும் லோக்பால் சட்ட மசோதாவையும் முடக்க சில சக்திகள் முயற்சி செய்துள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்