முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லட்டு தின்ன ஆசையா? விவகாரம்: பாக்யராஜ் வழக்கு

செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.13 - லட்டு தின்ன ஆசையா? படக் கதை விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டில் கே.பாக்யராஜ் வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகரும், டைரக்டருமான கே.பாக்யராஜ் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:- நான் 1980-களில் `இன்று போய் நாளை வா' என்ற படத்தை இயக்கினேன். அப்படத்தின் ரீமேக் உரிமையை என்னிடம் பலர் கேட்டனர். ஆனால் நான் யாருக்கும் அந்த உரிமையை கொடுக்கவில்லை.

ஆனால் `இன்று போய் நாளை வா' கதையை போன்று `லட்டு தின்ன ஆசையா' படம் உள்ளது. இப்படத்தை தயாரித்த ராம.நாராயணன், சந்தானம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த ஜனவரி மாதம் 2-​​ந் தேதி போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தேன். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்றார். இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்