முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொத்து குவிப்பு: சாத்தூர் ராமச்சந்திரன் கோர்ட்டில் ஆஜர்

வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2013      அரசியல்
Image Unavailable

 

மதுரை,பிப்.15 - சொத்துகுவிப்பு வழக்கு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று மதுரை கோர்ட்டில் ஆஜரானார்.   விருதுநகர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, உறவினர் மூர்த்தி ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது. தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் வடமலை முன்னிலையில் இந்த வழக்கின் முதல் விசாரணை நேற்று நடந்தது. அப்போது முன்னாள்  அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அவரது உறவினர் மூர்த்தி ஆகியோர் ஆஜரானார்கள்.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வடமலை அடுத்த மாதம் 21ம்  தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்