முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தானில் இருவேறு விபத்துகளில் 12 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

ஜெய்ப்பூர், ஏப்.24 - ராஜஸ்தானில் நேற்று நடந்த இருவேறு சாலை விபத்துக்களில் 12 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர். ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தில் ஸ்வர்ப்கன்ஞ் என்ற நகரை நோக்கி ஒரு ஜீப் சென்றுகொண்டிருந்தது. அப்போது வேகமாக எதிரே வந்த ஒரு லாரி மீது அந்த ஜீப் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 பெண்கள் உள்பட 9 பேர் அதே இடத்தில் பரிதாபமாக துடிதுடித்து பலியானார்கள். இந்த விபத்தில் மேலும் இரண்டுபேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 

இதேபோல டோன்க் மாவட்டத்தில் ஜூனியாமோடு என்ற இடத்தில் ஒரு தனியார் பஸ் ஒரு லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் டிரைவர் உள்பட  3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள். மேலும் 12 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்களில் மேலும் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் அவர்கள் அனைவரும் டோன்க் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு விபத்துக்கள் குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்