முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இ.கம்யூனிஸ்டு தலைவருக்கு புத்ததேவ் கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா,ஏப்.24 - தேர்தல் பொதுக் கூட்டம் ஒன்றில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மத்திய ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜிக்கு எதிராக ஆபாச வார்த்தைகளை பேசி திட்டிய இ. கம்யூனிஸ்டு தலைவர்களில் ஒருவரான அனில் பாசுவுக்கு அம்மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கடும் கண்டனம் தெரிவித்தார். எதிர்காலத்தில் இதுபோல் பேசாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் அனில் பாசுவை எச்சரித்தார். 

இது குறித்து புத்ததேவ் பட்டாச்சார்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவது மன்னிக்கத்தக்கதல்ல. ஒரு கம்யூனிஸ்டு தலைவருக்கு இது அழகல்ல. ஆக, அந்த வகையில் அனில் பாசு பேசிய பேச்சு எனக்கு வருத்தமளிக்கிறது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அனில் பாசுவை கட்சி மேலிடமும் எச்சரிக்க வேண்டும் என்றும் புத்ததேவ் பட்டாச்சார்யா கேட்டுக் கொண்டார். தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அனில் பாசு உள்ளூர் தலைவர்கள் முன்னிலையில் மம்தாவை அசிங்கமாக பேசினாராம். இதையடுத்து அவர் மீது தேர்தல் கமிஷன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. மம்தாவை வசை பாடிய அனில் பாசு ஒரு முன்னாள் எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்