முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனது அமைப்பு தேர்தலில் போட்டியிடாது: ஹசாரே

திங்கட்கிழமை, 11 மார்ச் 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.12 - தாம் துவக்கியுள்ள ஜனதந்திரா மோர்ச்சா அமைப்பு எந்த தேர்தலிலும் போட்டியிடாது என்று சமூக சேவகர் அன்னாஹசாரே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தித் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, 

ஜனதந்திரா மோர்ச்சா அமைப்பு எந்த தேர்தலிலும் போட்டியிடாது. அரசியல் கட்சியை துவங்காது. அதன் முக்கிய இலக்கு போராடுவதுதான். கட்சி வேறுபாடின்றி நல்ல வேட்பாளர்களை அது ஆதரிக்கும். எங்கள் அமைப்பிற்கான நெறிமுறைகளை உருவாக்கி வருகிறோம். இதை உறுப்பினர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். எனது குழுவை சேர்ந்த முன்னாள ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு நான் ஆதரவு தரமாட்டேன் என்றார் ஹசாரே. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்