எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,மார்ச் 13 - சிவில் சர்வீஸ் தேர்வு முறையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்) மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மாற்றமானது இந்தி பேசாத மாணவர்களை வெகுவாக பாதிக்கும் என்பதால் அந்த மாற்றத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது தேர்வு முறையில் மாற்றம் செய்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் முதன்மை தேர்வில் (பூர்வாங்க தேர்வில்) இந்தி பேசாத மக்களை பாதிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிராமபர்புறங்களில் இருந்து கஷ்டப்பட்டு படித்து வரும் மாணவர்களை அதிக அளவில் பாதிக்கும் வகையில் உள்ளது. அதாவது மாநில மொழிகளில் தேர்வு எழுதுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாநில மொழிகளில் தேர்வு எழுதுவதற்கு குறைந்தபட்சம் 25 மாணவர்கள் அந்த மொழியில் தகுதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த விதிமுறை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிக்கு பொருந்தாது. அதேபோல் பட்டப்படிப்பில் எந்த மொழி வாயிலாக மாணவர்கள் பயின்றார்களோ அந்த மொழி வாயிலாகவே பூர்வாங்க தேர்வு எழுத வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மாற்றமானது தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைத்துவிடும். தமிழ் இலக்கியத்தை விருப்பப்பாடமாக யார் வேண்டுமானாலும் தேர்வு செய்து படிக்கலாம் என்று இருந்தது. இப்போது தமிழ் இலக்கியம் படித்தவர்கள் மட்டுமே அதை விருப்பப்பாடமாக தேர்வு செய்ய முடியும் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றமானது மிகவும் பாரபட்சமானது இந்தி பேசாத மாணவர்களுக்கு அநீதியானது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இந்த மாற்றத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ஜெயலலிதா மேலும் கூறியுள்ளதாவது:-
2013-ம் ஆண்டில் இருந்து ஐ.பி.எஸ்.,ஐ.ஏ.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மாற்றம் செய்துள்ளது. இந்த மாற்றமானது பாரபட்சமாகவும் அநீதியாகவும் உள்ளது. தேர்வு முறையில் பெரிய அளவில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றமானது தமிழகத்தில் இருந்து ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுபவர்களின் நலன்களை கடுமையாக பாதிக்கும். அதுவம் கிராமப்புற மாணவர்களை கடுமையாக பாதிக்கும். உயர்நிலைப்பள்ளி அளவில் தமிழ் மொழி வாயிலாகவும் அதன் பின்னர் ஆங்கிலம் மூலம் பட்டப்படித்தவர்கள் தமிழில் சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுதலாம் என்று விதிமுறை இருந்தது. தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது தற்போது பட்டப்படிப்பு வரை தமிழ் மொழியில் படித்திருந்தால்தான் தேர்வில் விருப்பபாடங்களை முதல்நிலை தேர்வை எழுத முடியும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் மாணவர்கள் தங்களுடைய தாய் மொழியில் தேர்வு எழுத மறுக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் இந்தி மொழியில் தேர்வு எழுத விரும்புவர்களுக்கு எந்தவித மாற்றமும் இல்லை. அரசியல் சட்டம் 8-வது அட்டவணையில் இந்தி, தமிழ் மொழிகள் சேர்க்கப்பட்டுள்ள போதிலும் இந்த மாற்றமானது தமிழ் மாணவர்களுக்கு மட்டுமல்லாது இந்தி பேசாத இதர மொழி மாணவர்களுக்கு குறிப்பாக ஆதிதிராவிடர், மலை ஜாதியினர், பின்தங்கிய மற்றும் மிகவும் பின்தங்கிய வகுப்புகளை சேர்ந்த மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது, பாரபட்சமானது. மேலும் பள்ளி அளவில் தாய் மொழியல் படித்த ஒருசில குறைந்தபட்ச எண்ணிக்கையை உடைய சமூகத்தை சேர்ந்த மாணவர்களையும் கடுமையாக பாதிக்கும். இது இந்திய அரசியல் சட்டப்பிரிவு 14 மற்றும் 16 ஆகிய பிரிவுகளுக்கு எதிரானது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதும் மாணவர்களுடன் ஒப்பிடும்போது தமிழ் மற்றும் இதர மொழிகளில் படித்த மாணவர்களை வெகுவாக பாதிக்கும்.
தேர்வாணையம் செய்துள்ள இரண்டாவது மாற்றமானது மிகவும் ஆட்சேபகத்திற்குரியது மட்டுமல்லாது பாரபட்சமானதும் கூட. தேர்வில் விருப்பப்பாடமாக விரும்பும் இலக்கியத்தை எடுக்க வேண்டுமானால் அதே இலக்கியத்தை பட்டப்படிப்பில் விருப்பப்பாடமாக படித்திருக்க வேண்டும். அதாவது தமிழ் இலக்கியம் விருப்பப்பாடமாக எடுக்க வேண்டுமென்றால் பட்டப்படிப்பில் தமிழ் இலக்கியத்தை விருப்பப்பாடமாக படித்திருக்க வேண்டும். இந்த இரண்டாவது மாற்றமானது பாரபட்சமன்றி சட்டவிரோதமானது. வேறு பாடத்தை விருப்பமாக எடுப்பவர்களுக்கு இந்த மாற்றம் செய்யப்படவில்லை. கணிதப்பாடம் படிப்பவர்கள் தேர்வில் விருப்பப்பாடமாக வரலாறு பாடத்தை எடுத்துக்கொள்ள முடியும். அதேசமயத்தில் தமிழ் இலக்கியத்தை விருப்பப்பாடமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த மாற்றமானது சட்டவிரோதமானது, பாரபட்சமானது, நியாயமற்றதாகும். மேலும் ஒரு குறிப்பிட்ட பாடத்தில் தேர்வு எழுத வேண்டுமென்றால் குறைந்தது 25 மாணவர்களாவது இருக்க வேண்டும். ஆனால் இந்தி, ஆங்கில மொழியல் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த மாற்றம் பொருந்தாது என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த மாற்றமானது அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சமஉரிமையை மீறுவதாகும். தேர்வில் 4-வதாக செய்யப்பட்டுள்ள மாற்றமானது இந்திய மொழியல் ஏதாவது ஒன்றில் கட்டாயம் தேர்வு பெற்றிருக்க வேண்டும் என்பதை மாற்றி, அதற்கு பதில் ஆங்கிலத்தில் கட்டுரைகள்,சுருங்க எழுதுதல் ஆகியவற்றை சேர்த்து இருப்பது நகரப்புற மாணவர்களுக்கு சாதகமாகவும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தும்.
மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் செய்துள்ள இந்த 4 மாற்றங்களும் இந்திய கூட்டமைப்பு கொள்கைகளிலும்,அரசியல் சட்டத்தில் சம உரிமை கொடுக்கப்பட்டுள்ள தமிழ் மற்றும் இதர மொழிகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ள சமஉரிமையை பாதிக்கும். இந்திய அரசியல் சட்டம் 16-வது பிரிவில் அரசு பணியாளர் நியமன உரிமையை பாதிக்கும். கிராமப்புற மாணவர்கள், பள்ளியில் தாய்மொழியிலும் பட்டப்படிப்பை இதர மொழிகளிலும் படித்து வரும் மாணவர்களை வெகுவாக பாதிக்கும். அரசியல் சட்டம் 8-வது அட்டவணையில் கூறப்பட்டுள்ளபடி அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் சம அந்தஸ்து கொடுக்க வேண்டும். தேர்வை எந்த மொழியிலும் எழுத மாணவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். குறிப்பாக அவர்களின் தாய் மொழியில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையமானது இந்த பிற்போக்கான மாற்றங்களை செய்திருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது, ஒருதலைப்பட்சமானது மட்டுமல்லாது தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் அதிக அளவில் பங்கு பெற்று பிரதிநிதித்துவம் பெறுவதை மறுப்பதாகும். இந்த மாற்றமானது இறுதியில் இந்தியாவில் நிர்வாகத் திறமையை பாதிக்கும். அதனால் இந்த விஷயத்தில் நீங்கள் (பிரதமர் மன்மோகன்சிங்) தலையிட்டு தேர்வாணையம் செய்துள்ள இந்த பாரபட்சமான,நியாயமற்ற மாற்றத்தை திரும்பப்பெறுவது குறித்து பரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொள்ள வேண்டும். மேலும் இந்த மாற்றமானது தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களை பாதிக்கும். அதனால் இந்த பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 18 hours ago |
மினி பான் கேக்6 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஓடிடி பிளஸ் தளத்தை துவங்கி வைத்த சீனுராமசாமி
06 May 2024தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை.