முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூரில் கற்பழிக்கப்பட்ட 8 வயது சிறுமியின் சிகிச்சைக்கு உதவ ரெடி

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம்: ஏப் - 25 - திருப்பூர் அருகே கற்பழிக்கப்பட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமியின் சிகிச்சைக்கு உதவ தயாராக இருப்பதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். திருப்பூர் அருகே 8 வயது சிறுமி 4 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிறுமியின் தாயார் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கிறார். இந்த பிரச்சனை குறித்து நேற்று கேரள சட்டசபையில் பேசப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் அச்சுதானந்தன் சட்டசபையில் இந்த பிரச்சனையை எழுப்பினார். ஆதரவற்ற ஏழை குடும்பத்தைச் சேர்ந்த சிறுமியை கேரளாவுக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறுகையில், சிறுமியின் சிகிச்சைக்கு உதவ கேரள அரசு தயாராக உள்ளது. இது குறித்து தமிழக அரசை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago