முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி ஆசிரியரை எரித்துக் கொன்ற சக ஆசிரியர்கள்

செவ்வாய்க்கிழமை, 28 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புர்னியா, மே. 29 ​- பீகார் மாநிலத்தில் பள்ளி ஆசிரியரை சக ஆசிரியர்கள் சேர்ந்து உயிருடன் தீ வைத்து எரித்துக் கொன்ற கொடூரம் நடந்துள்ளது. பீகார் மாநிலம் புர்னியா மாவட்டம் மாரங்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடுநிலைப் பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் ரஞ்சித் குமார்(40). நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு மாணவர்கள் வருவதற்கு முன்பு ரஞ்சித் குமாரை சக ஆசிரியர்களும், தலைமை ஆசிரியரும் சேர்ந்து கழிவறைக்கு தூக்கிச் சென்று அங்கு அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர்.

உடல் முழுவதும் தீ பரவியவுடன் ரஞ்சித் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு கதிஹார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த கொலைக்கான காரணம் என்னவென்று உடனடியாகத் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியரை தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்