முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பால்கனி இடிந்ததில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிதி

திங்கட்கிழமை, 8 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.9 - சென்னையில் வீட்டுப் பால்கனி இடிந்து விழுந்ததில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர்  ஜெயலலிதா வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 சென்னை, தேனாம்பேட்டை, நல்லான் தெருவில் அமைந்துள்ள ஒரு வீட்டின் பால்கனி 30.6.2013 அன்று இடிந்து விழுந்ததில், ஜெகதீசன் என்பவரின் மனைவி புவனேஸ்வரி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். 

இந்த விபத்தில் அகால மரணமடைந்த  திருமதி புவனேஸ்வரியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த திருமதி புவனேஸ்வரியின் குடும்பத்திற்கு  ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.  

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்