எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மே 8-
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கருணாநிதியின் மகள் கனிமொழியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை இம்மாதம் 14 ம் தேதிவரை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அதுவரை கனிமொழி தினமும் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு செல்போன் கம்பெனிகளுக்கு 2 ம் தலைமுறையினருக்கான (2 ஜி.) தொழில்நுட்ப வசதியை அளிப்பதற்காக தொலைத் தொடர்புத் துறை சார்பில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடுகளுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டன. இந்த உரிமங்களை அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சரான தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா தான் வழங்கியுள்ளார். இந்த ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு மத்திய கணக்கு தணிக்கைக் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. இந்த இழப்புக்கு அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாதான் முழுப்பொறுப்பு என்றும் அந்த குழு குற்றம் சாட்டியுள்ளது. இது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலக அளவில் நடந்த மிகப்பெரிய ஊழல் இதுதான் என்று அமெரிக்க பத்திரிகைகள் தலைப்புச் செய்திகளாக வெளியிட்டு இருந்தன. இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக கடந்த பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரே ஸ்தம்பிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த ஊழல் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. இந்த விவகாரம் விசுவரூபம் எடுக்கவே, தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பதவியை ஆ.ராசா ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் இந்த ஊழல் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி ஆ.ராசா அவரது உதவியாளர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதைத் தொடர்ந்து ஆ.ராசாவிடம் துருவித் துருவி விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் பிறகு ராசாவை கைது செய்து தங்கள் காவலில் எடுத்தனர். சி.பி.ஐ. காவல் முடிந்ததும் ஆ.ராசா டெல்லியில் உள்ள அதிக பாதுகாப்பு மிக்க திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இப்போதும் இவர் இதே சிறையில் இருக்கிறார். இந்த வழக்கில் ஆ.ராசாவின் உதவியாளர்களான சந்தோலியா, சித்தார்த் பெகூரா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மேலும் டி.பி.ரியாலிட்டீஸ் நிறுவன அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட மேலும் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். ஆ.ராசா உள்ளிட்ட இவர்கள் 9 பேரும் தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சட்ட விரோதமாக ஆதாயமடைந்த ஒரு நிறுவனத்திடம் இருந்து ரூ. 214 கோடி பணம் கலைஞர் டி.வி.க்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இந்த பணத்தை திருப்பிச் செலுத்திவிட்டதாக கலைஞர் டி.வி. பிறகு தெரிவித்தது. இருந்தாலும் அந்த ரூ.214 கோடி பணம் கலைஞர் டி.வி.க்கு எதற்காக கொடுக்கப்பட்டது என்பது மர்மமாகவே இருந்தது. இந்த கலைஞர் டி.வி.யில் தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீதமும், கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு 20 சதவீதமும், நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கு 20 சதவீதமும் பங்குகள் உள்ளன. இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலில் கடந்த ஏப்ரல் 25 ம் தேதி சி.பி.ஐ. தனது இரண்டாவது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதில் கனிமொழி கூட்டுச் சதிகாரர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் கனிமொழி, சரத்குமார் ஆகியோரது பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளதை அடுத்து இவர்கள் இருவரையும் மே 6 ம் தேதி சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி இவர்கள் இருவரும் நேற்று முன்தினம்(மே 6) இந்த கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். அப்போது கனிமொழி சார்பில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி ஆஜராகி வாதாடினார். கனிமொழி, சரத்குமார் சார்பில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி விசாரணை நடத்தினார். நேற்று முன்தினம் வாத பிரதிவாதங்கள் முடிவடையாத நிலையில் இந்த விசாரணயை நீதிபதி ஷைனி நேற்றைக்கு ஒத்திவைத்தார்.
அதன்படி நேற்றும் இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. அப்போது கலைஞர் டி.வி.யை கனிமொழிதான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். எல்லாவற்றையும் அவரே கவனிக்கிறார். இந்த கலைஞர் டி.வி.தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற பால்வா குழுமத்திடம் இருந்து ரூ. 200 கோடியை பெற்றுள்ளது எனவே கனிமொழிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று சி.பி.ஐ. சிறப்பு வழக்கறிஞர் யு.யு.லலித் வாதாடினார். கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் அந்த டி.வி.யை நிர்வகிப்பவராக இருக்கலாம். ஆனால் திரைக்குப் பின்னால் இருந்து எல்லாக் கட்டுப்பாடுகளையும் இயக்குபவர் கனிமொழிதான் என்றும் எனவே கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவதை தாம் ஆட்சேபிப்பதாகவும் அவர் கூறினார்.
கலைஞர் டி.வி.யில் கனிமொழிக்கும் அவரது குடும்பத்திற்கும் பெரும்பான்மையான பங்குகள் உள்ளன. அந்த கலைஞர் டி.வி.க்குத்தான், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை சட்டவிரோதமாக பெற்ற நிறுவனத்தினரிடம் இருந்து ரூ. 200 கோடி சென்றது என்றும் லலித் வாதாடினார். இந்த ரூ.200 கோடி பரிமாற்றத்தில் கனிமொழிக்கு தொடர்பு இருப்பதை நிரூபிக்க தங்களிடம் போதுமான ஆதாரம் உள்ளது என்றும் சி.பி.ஐ. வழக்கறிஞர் வாதாடினார். ரூ. 200 கோடி பணப் பரிமாற்றத்தில் கனிமொழி, சரத்குமார் இருவருக்கும் சம்பந்தம் உள்ளது என்பது தெள்ளத்தெளிவாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவே இவர்கள் இருவருக்கும் சாதகமாக தீர்ப்பு வழங்கக்கூடாது என்றும், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிற குற்றவாளிகளைப் போல நீதிமன்ற காவலுக்கு (சிறைக்கு) அனுப்ப வேண்டும் என்றும் லலித் தனது வாதத்தில் கேட்டுக்கொண்டார்.
இந்த கலைஞர் டி.வி.யில் 80 சதவீத பங்குகள் கருணாநிதி குடும்பத்தினருக்கே இருப்பதால் நிதி பரிவர்த்தனை தொடர்பான அனைத்து முடிவுகளும் அவர்களுக்கு தெரிந்திருக்கும் என்றும் சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டது. கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகள் கலைஞர் டி.வி.யில் உள்ளன. ஆனால் இந்த டி.வி.யின் நிர்வாக பணிகளில் அவர் தீவிரமாக எதிலும் ஈடுபடவில்லை. அந்த டி.வி.யை 20 சதவீத பங்குகளை வைத்திருக்கும் கனிமொழியும், சரத்குமாரும்தான் நிர்வகித்து வருகிறார்கள் என்றும் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
இந்த ஜாமீன் மனுக்கள் மீதான வாத பிரதிவாதங்களைக் கேட்ட நீதிபதி ஓ.பி.ஷைனி, இவற்றின் மீதான தீர்ப்பை வருகிற 14 ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை கனிமொழியும், சரத்குமாரும் தினமும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-10-2025.
27 Oct 2025 -
கரூர் நெரிசல் சம்பவ வழக்கை தள்ளிவைத்து ஐகோர்ட் உத்தரவு
27 Oct 2025சென்னை, கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளும் 3 வாரத்துக்கு தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கவே வாய்ப்பு : ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
27 Oct 2025சிவகங்கை : தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைக்க வாய்ப்புள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
-
பைசன் படத்தை பாராட்டிய தமிழக முதல்வர்
27 Oct 2025தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பைசன் திரைப்படம் பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
-
தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
27 Oct 2025சென்னை : தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம் என்று உலகச் செயல்முறை மருத்துவ நாளையொட்டி முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ராஜ் B. ஷெட்டி நடிக்கும் ஜுகாரி கிராஸ்
27 Oct 2025பிரபல இயக்குநர் குருதத்த கனிகா, ராஜ் B. ஷெட்டியுடன் இணைந்து, ஒரு புதிய படத்தை சமீபத்தில் துவங்கியுள்ளார்.
-
ஜிடி நாயுடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
27 Oct 2025மாதவன் நடிப்பில் உருவாகி வரும் ஜிடி நாயுடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
-
நாட்டின் ஒற்றுமைக்காக - தமிழகத்தின் வளர்ச்சிக்காக தி.மு.க.வும்-காங்கிரசும் இன்று ஒரே அணியில் பயணிக்கிறது: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Oct 2025சென்னை, தி.மு.க.வும் காங்கிரஸ் பேரியக்கமும் கடந்த காலங்களில் வெவ்வேறு பாதைகளில் பயணித்திருந்தாலும், இன்று நாட்டின் நன்மைக்காக, தமிழகத்தின் வளர்ச்சிக்காக, இந்தியாவின் ஒற
-
'மோந்தா' புயலுக்கு அடுத்து வரும் புயலுக்கு பெயர் என்ன தெரியுமா?
27 Oct 2025சென்னை, மோந்தா புயலுக்கு அடுத்து வரும் புயலின் பெயர் விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
-
இந்தவாரம் வெளியாகும் ஆர்யன்
27 Oct 2025விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்கும் படம் ஆர
-
தடை அதை உடை படத்தின் இசை வெளியீட்டு விழா
27 Oct 2025காந்திமதி பிக்சர்ஸ் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்கி ’அங்காடித்தெரு’ மகேஷ் மற்றும் குணா பாபு நடிக்கும் படம் தடை அதை உடை.
-
மீண்டும் பிரமாண்ட படத்தில் நடிக்கும் பிரபாஸ்
27 Oct 2025மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி சீரிஸ் வழங்கும் பான் இந்தியா படம் ஃபௌசி.
-
டிஜிட்டல் கைது தொடர்பான வழக்குகள்: சி.பி.ஐ.க்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் யோசனை
27 Oct 2025சென்னை, டிஜிட்டல் கைது தொடர்பான வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ.க்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 215 இடங்களில் நிவாரண மையங்கள்: தமிழ்நாடு அரசு
27 Oct 2025சென்னை, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 215 இடங்களில் மழை வெள்ள நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்க சூர்யகாந்த் பெயர் பரிந்துரை
27 Oct 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சூர்ய காந்தை நியமிக்க, சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.
-
குடும்பத்தில் ஒருவனாக நான் இருப்பேன்: கரூர் சம்பவத்தில் உயிரிழந்வர்கள் குடும்பத்தினரிடம் விஜய் உறுதி
27 Oct 2025சென்னை : குடும்பத்தில் ஒருவனாக நான் இருப்பேன் என்று கரூர் சம்பவத்தில் உயிரிழந்வர்களின் குடும்பத்தினரிடம் த.வெ.க. தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளார்.
-
தங்கம் விலை சரிவு
27 Oct 2025சென்னை : தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.400 குறைந்தது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
-
கரூர் சம்பவத்தில் முன்ஜாமீன் மனுவை புஸ்ஸி ஆனந்த் வாபஸ் பெற்றதால் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்
27 Oct 2025சென்னை : கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் கோரி த.வெ.க.
-
மோந்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆந்திர முதல்வருடன் பிரதமர் மோடி பேச்சு
27 Oct 2025அமராவதி, மோந்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆந்திர முதல்வருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
-
‘மோந்தா’ புயல் எதிரொலி: தமிழக துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
27 Oct 2025ராமேசுவரம் : வங்கக்கடலில் உருவாகியுள்ள `மோந்தா’ புயலினால் தமிழக துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
உலகத்தின் நுழைவாயிலாக ‘இந்தியா கேட்’ மாறும் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
27 Oct 2025மும்பை : நிகோபார் தீவு மேம்பாட்டுத் திட்டம் நமது கடல்சார் வர்த்த கத்தை பலமடங்கு அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘இந்தியா கேட்’ விரைவில
-
கரூர் சம்பவம்: ஆதவ் அர்ஜுனா மனு குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம்
27 Oct 2025சென்னை : கரூர் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பதிவு சர்வையானதையடுத்து அவரது மனு குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
பயங்கரவாதிகள் பட்டியலில் பிரபர நடிகர் சல்மான்கான்..? பின்னணியில் பாகிஸ்தான் அரசு
27 Oct 2025லாகூர், பிரபர நடிகர் சல்மான்கானை பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
-
தலைமை நீதிபதி மீது காலணி வீச்சு விவகாரம்: கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு
27 Oct 2025புதுடெல்லி : நீதிபதி மீது காலணி வீச்சு விவகாரத்தில் கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.
-
அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’-க்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் : தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
27 Oct 2025சென்னை : அரசியல் கட்சித் தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை


