முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழிக்கு விதிவிலக்கு அளிக்க சி.பி.ஐ. கோர்ட்டு மறுப்பு

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2011      இந்தியா
Image Unavailable

'டில்லி, மே.- 8 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களான கனிமொழி, சரத்குமார் (நிர்வாக இயக்குனர்) ஆகியோர் சி.பி.ஐ. கோர்ட்டில் வருகிற 14 ம் தேதிவரை தினமும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஓ.பி.ஷைனி நேற்று உத்தரவிட்டார். சி.பி.ஐ. கோர்ட்டில் தினமும் ஆஜராக வேண்டும் என்பதில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கனிமொழியும், சரத்குமாரும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஆய்வு செய்த நீதிபதி ஷைனி, இவர்கள் இருவரும் தினமும் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று மறுத்துவிட்டார். எனவே கனிமொழியும், சரத்குமாரும் 14 ம் தேதிவரை சி.பி.ஐ. கோர்ட்டில் தினமும் ஆஜராவார்கள் என்பது உறுதியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்