முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோலார் மோசடி: கேரள முதல்வர் மீது பாய்ச்சல்

சனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2013      ஊழல்
Image Unavailable

 

மலப்புரம், ஆக. 25 - சோலார் பேனல் மோசடி தொடர்பாக மாநில அரசுடன் பேச்சு நடத்த எதிர்க்கட்சியினர் தயாராக இல்லை என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி குற்றம்சாட்டினார். கேரளத்தில் சூரிய ஒளி பேனல்கள் அமைத்துக் கொடுப்பதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி நடந்தது. இது தொடர்பாக சரிதா நாயர், அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டனர். பின்னர் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, முதல்வர் உம்மன் சாண்டியின் முன்னாள் தனிச்செயலாளர் டென்னி ஜோசடிப், பிரபல டி.வி. நடிகை ஷாலு மேனன் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில், மலைப்புறத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய உம்மன் சாண்டி எதிர்க்கட்சியினரை கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார். நீதி விசாரணை தொடர்பாக விவாதிக்கவும், விசாரணைக் குழுவின் அதிகார வரையறைகளை தீர்மானிக்கவும் அரசுடன் கலந்தாலோசிக்க எதிர்க்கட்சியினர் முன்வரவில்லை. அரசுடன் பேச்சு நடத்தாமல், மேலும் மேலும் புதிய கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். அவர்களது கோரிக்கைகளை எழுத்து மூலம் அளித்தால்தான் அரசு அதை கருத்தில் கொள்ளும் என்று உம்மன் சாண்டி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்