முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மன்மோகனுடனான பேச்சு வார்த்தை ஆக்கப்பூர்வமானது

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், அக். 2 - இந்திய பிரதமர் மன்மோகன்சிங்குடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானது என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் இடையே நியூயார்க் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் ஐ.நா. சபை கூட்டத்தை முடித்து கொண்டு நியூயார்க் நகரில் இருந்து இஸ்லாமாபாத் செல்ல நவாஸ் ஷெரீப் லண்டன் விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் ஷெரீப் கூறுகையில்,

இந்திய பிரதமர் மன்மோகன்சிங்குடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானது. இரு நாடுகளுக்கும் இடையே இயல்பு நிலை திரும்ப பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்வதுதான் ஒரே வழி. பயங்கரவாதம் என்பது பாகிஸ்தானுடன் நின்று விடவில்லை. மற்ற நாடுகளும் அந்த சவாலை சந்தித்து வருகின்றன என்று ஷெரீப் தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தையில் காஷ்மீர் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் இந்தியாவின் அத்துமீறல் இருப்பதாக பிரதமர் மன்மோகன்சிங்கிடம் நவாஸ் ஷெரீப் சுட்டிக் காட்டியதாகவும் பாகிஸ்தான் நாட்டின் வானொலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்