முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் கைது

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, டிச.6 - தனது கட்சியின் உறுப்பினரைக் கொலை செய்த வழக்கில் இலங்கையின் வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் கே.கமலேந்திரன் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள நெடுந்தீவி்ன் நகராட்சித் தலைவராக இருந்த டேனியல் ரெக்ஸியான் (44) என்பவர் நவம்பர் 26 ம் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் கே.கமலேந்திரன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் டேனியலின் மனைவியும் கைது செய்யப்பட்டார். கமலேந்திரனுக்கும், டேனியலின் மனைவிக்கும் இடையே திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு இருந்ததாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் அதிகாரி அஜித் ரோஹானா தெரிவித்துள்ளார். முன்னாதக, துப்பாக்கிக் குண்டுக் காயங்களுடன் உயிரிழந்த டேனியல், தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் கூறியிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்