முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் சுயநலத்திற்காக ஆடவில்லை: காம்பீர் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜனவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஜன. 6 - இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவேன் என்றும் தான் சுயநலத்திற்காக ஆடவில்லை என்று துவக்க வீரர் கௌதம் காம்பீர் தெரிவித்து இருக்கிறார். 

இந்திய அணியின் முன்னணி தொடக்க வீரர் காம்பீர். மோசமான ஆட்டம் காரணமாக அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட அவர் மீண்டும் அணியில் இடம் பெற கடுமையாக போராடி வருகிறார். 

காம்பீர் சர்வதேச போட்டிகளில் விளையாடி ஒரு ஆண்டு ஆகிறது. 2012 _ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார். 

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நா ள் தொடரோடு ஒரு நாள் போட்டிக்கான அணியில் இருந்தும் கழற்றி விடப்பட்டார். 

ரஞ்சி டிராபி சீசனில் 578 ரன்கள் குவித்தார். அரியானா அணிக்கு எதிராக 153 ரன்கள் குவித்தார். இந்தஆட்டத்துக்கு பிறகு, தென் ஆப்பிரிக்கா தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டது. 

ஆனால் அதில் காம்பீர் இடம் பெறவில்லை. தற்போது நியூசிலாந்திற்கு எதிரான தொடரிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

காம்பீர் அணியில் இடம் பெறாததற்கு அவரது சுயநாலமான ஆட்டம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதை அவர் மறுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறியதாவது _ நான் சுயநலத்திற்காக கிரிக்கெட் ஆடவில்லை. சமநிலையிலான ஆடுகளத்தில் நான் 800 முதல் 900 ரன்கள் வரை குவித்து உள்ளேன். 

டெல்லி அணி தோல்விக்காக எ ன் மீது குற்றம் சாட்டுவது சரியில்லை. நான் எப்போதுமே அணியின் நலனுக்காக ஆடுவதில் தான் முக்கிய பங்கு வகித்து வருகிறேன். 

நான் சுயநலத்திற்காக ஆடுவது கிடையாது. கடுமையாகபோராடி இந்தியஅணியில் மீண்டும் இடம் பிடிப்பேன். 

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணியில் நான் இடம் பெற்று இருந்தேன். என்னால் மீண்டும் அணியில் நுழைய முடியும். 54 டெஸ்ட் வரை ஆடியிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

32 வயதான காம்பீர் 54 டெஸ்டில் மொத்தம் 4021 ரன் குவித்து இருக்கிறார். இதில் 9 சதம் அடங்கும். 

தவிர, 147 ஒரு நாள் போட்டியில் ஆடியுள்ள அவர் மொத்தம் 5238 ரன் சேர்த்து இருக்கிறார். இதில் 11 சதம் அடங்கும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்