எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.23 - விளையாட்டு மேம்பாட்டிற்காக ரூ35 .77 .கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:_
கல்வியில் மேன்மை, விளையாட்டுப் போட்டிகளில் திறமை ஆகிய இரண்டும் இளைஞர் சமுதாயத்திற்கு இன்றியமையாதது. கல்வியின் மேன்மை அறிவாற்றலை வளர்க்கும். விளையாட்டுத் திறமை உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்கும். அறிவார்ந்த மற்றும் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதற்கு கல்வி மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டும் இன்றியமையாதது என்பதால், இவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
விளையாட்டு விடுதிகள் துவக்குதல், தினப் பயிற்சி திட்டத்தின் மூலம் வீரர்களுக்கு முழுமையான பயிற்சி அளித்தல், பன்னாட்டு போட்டிகளில் பங்கு கொள்வதற்காக பன்னாட்டுத் தரத்தில் விளையாட்டு மைதானங்கள் அமைத்தல், விளையாட்டு வீரர்கள் பன்னாட்டு போட்டிகளில் பங்கு கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக ஊக்கத் தொகை வழங்குதல், உள்விளையாட்டு அரங்கங்களை அமைத்தல், கிராம விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவித்தல், பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்துதல், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பொறியியல் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டுள்ள 100 இடங்களை 500 ஆக உயர்த்தியது, மாற்றுத் திறனாளிகளுக்கிடையே உள்ள விளையாட்டுத் திறமையை வெளிக் கொணர்வதற்காக விளையாட்டு போட்டிகள் நடத்துதல் போன்ற எண்ணற்ற திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
சர்வதேச விளையாட்டரங்கில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவர்கள் மற்றும் உணவு நிபுணர்களின் ஆலோசனைப்படி விஞ்டான முறையில் விளையாட்டின் தன்மையின் அடிப்படையில் சத்தான சமச்சீர் உணவு வழங்கப்படடு வருவது அவர்களின் வெற்றிக்கு மூலக் காரணம் என்பதைக் கருத்தில் கொண்டு, விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெறும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சத்தான சமச்சீர் உணவு வகைகள் நாள்தோறும் வழங்குவதற்கு ஏதுவாக தற்பொழுது நாளொன்றுக்கு வழங்கப்பட்டு வரும் தொகையான 75 ரூபாயை 250 ரூபாயாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள். இதற்காக 10 கோடியே 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிலும் சிறுவர், சிறுமியருக்கு உணவுக்காக நாளொன்றுக்கு நபர் ஒன்றுக்கு 150 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று கல்லூரியில் பயிலும் மாணவ , மாணவியருக்காக தனித்தனியாக சிறப்பு விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவர்களுக்கு நபர் ஒன்றுக்கு நாளொன்றுக்கு 90 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இனிமேல் முதன்மை விளையாட்டு மையம் மற்றும் சிறப்பு விளையாட்டு விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டு வரும் உணவுப்படி, நாளொன்றுக்கு நபர் ஒன்றுக்கு 250 ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள். இதற்காக தேவைப்படும் செலவினத்திற்காக கூடுதலாக 55 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டின்போது ஹாக்கி போட்டிகள் நடத்துவதற்காக செயற்கை இழை வளைகோல்பந்து ஆடுகளம் 1995 ஆம் ஆண்டு மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் அமைக்கப்பட்டது. இந்த ஆடுகளத்தில் பல்வேறு மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆடுகளம் 2004 ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. இநத ஆடுகளம் சீரமைக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆகிவிட்டப்படியால், தற்பொழுது இந்த ஆடுகளம் வழுக்கும் தன்மையுடையதாக உள்ளதால் விளையாட்டு வீரர்கள் பயிற்சிகள் மேற்கொள்வதில் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டும், வருங்காலங்களில் நடைபெறவுள்ள பன்னாட்டு, தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளை கருத்திற் கொண்டும், செயற்கை இழை ஆடுகளத்தினை 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் சீரமைத்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் மாவட்ட விளையாட்டு வளாகங்கள் அனைத்தும் 15 முதல் 20 ஆண்டுகளுக்கு மேல் கட்டப்பட்டவையாதாலால் அவைகளை சீரமைத்து புதுப்பிக்க வேண்டியது அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, விளையாட்டு அரங்கங்கள் மற்றும் கட்டமைப்புகளை புதுப்பிக்கவும் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் ஒரு முறை சிறப்பு மானியமாக5 கோடி ரூபாய் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
10 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட பள்ளிக்கல்வி பயிலும் 25 மாணவர்கள் மற்றும் 25 மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு விளையாட்டில் உயர்தரமான பயிற்சி அளிப்பதற்காக, சென்னை நேரு விளையாட்டரங்கில் சிறுவர்களுக்காகவும், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சிறுமியர்களுக்காகவும் இரண்டு உலகத் தரம் வாய்ந்த முதன்மை விளையாட்டு மையங்கள் துவக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, இதேபோன்று உலகத்தரம் வாய்ந்த முதன்மை விளையாட்டு மையங்களை ஸ்ரீரங்கம், திருநெல்வேலி மற்றும் ஈரோடு ஆகிய 3 இடங்களில் துவக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள். இதற்காக 1 கோடியே 60 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற 7_வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைபெற்ற போது, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக சென்னையில் நவீனமயமாக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், உள்விளையாட்டரங்கம், மேயர் ராதாகிருஷ்ணன் வளைகோல்பந்து விளையாட்டு அரங்கம், வேளச்சேரி நீச்சல்குள வளாகம், டென்னிஸ் விளையாட்டரங்கம் போன்ற விளையாட்டு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. சமீபத்தில் நேரு உள்விளையாட்டரங்கம் அருகில் செயற்கை இழை தடகள ஓடுதளம் மற்றும் இயற்கை புல்வெளி கால்பந்து திடல் வசதிகள் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. இப்பகுதியில் விளையாட்டு வீரர்கள் மேலும் பயன் அடைவதற்காக ஸ்குவாஷ் அரங்கம், இறகு பந்து உள்ளரங்கம், கையுந்து பந்து, கூடை பந்து ஆடுகளங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கென பிரத்யேக நீர் சிகிச்சை நீச்சல் குளம் ஆகியவை கொண்ட மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம் ஒன்றினை 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் போது, விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்குவதற்கான கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளதைக் கருத்தில் கொண்டு, விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வசதியாக தங்குவதற்காக சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இரு இடங்களில் தலா 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன தங்குமிடம் மற்றும் உணவுக்கூட வசதிகள் ஏற்படுத்திட 3 கோடி ரூபாய் நிதியினை வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேற்கண்ட உத்தரவுகளின்படி விளையாட்டு மேம்பாட்டிற்காக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 35 கோடியே 77 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
தமிழ்நாடு தேசிய மாணவர் படை இயக்குநரகம் நாட்டிலுள்ள தேசிய மாணவர் படையில் மூன்றாவது பெரிய இயக்குநரகமாகும். 300 கல்லூரிகள் மற்றும்
600 பள்ளிகளில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களை உள்ளடக்கிய இயக்கமாகும். நமது தேசிய மாணவர் படையினர் புதுடில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்று அங்கு நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு 11 முறை பரிசுகள் பெற்றுள்ளனர்.
திருத்தியமைக்கப்பட்ட தேசிய மாணவர் படை பயிற்சித் திட்டத்தின்படி, ஆளுமை மேம்பாட்டு வளர்ச்சி மற்றும் ராணுவத்தில் சேருவதற்கான தகுதிகளுடன் கூடிய உயர் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியினை தேசிய மாணவர் படை மாணவ, மாணவியர்களுக்கு அளிப்பதற்கென்று தனியாக பயிற்சி அகாடமி ஒன்றினை அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்திலுள்ள இடையப்பட்டி கிராமத்தில் தேசிய மாணவர் பயிற்சி அகாடமியை அமைப்பதற்கு 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
- நீரிழிவு நோயாளிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்: குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை கண்டுபிடித்தது சென்னை ஐ.ஐ.டி.
- நமது இயக்கத்தை ஒழித்து விடலாம் என்று யார் யாரோ இன்று கிளம்பி இருக்கிறார்கள்: தி.மு.க.வை எந்த கொம்பனும் தொட்டுக்கூட பார்க்க முடியாது : திருமண விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
6 மாவட்டங்களில் இன்று கனமழை
06 Nov 2025சென்னை: தமிழகத்தில் 8-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று மதுரை, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்
-
மாநில கல்விக்கொள்கையை பின்பற்றி புதிய பாடத்திட்டங்களை உருவாக்க உயர்மட்டக்குழு தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணை
06 Nov 2025சென்னை: மாநில கல்விக்கொள்கையை பின்பற்றி புதிய பாட திட்டங்களை உருவாக்க உயர்மட்டக்குழு அமைத்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
பெண்ணை தாக்கியதாக ஜி.பி.முத்து மீது வழக்குப்பதிவு
06 Nov 2025தூத்துக்குடி: பெண்ணை தாக்கியதாக நடிகர் ஜி.பி.முத்து உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. - த.வெ.க. இடையேதான் போட்டி: டி.டி.வி. தினகரன் தகவல்
06 Nov 2025சென்னை, வரும் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. - த.வெ.க. இடையேதான் போட்டி என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
-
ஜெர்மனியில் நடந்த கொடூரம்: நோயாளிகளை ஊசி போட்டு கொன்ற ஆண் செவிலியர்..!
06 Nov 2025பெர்லின்: ஜெர்மனியில் நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த ஆண் செவிலியரால் பரபரப்பு ஏற்பட்டது.
-
தென்ஆப்பிரிக்காவில் நடக்கும் ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டேன் - ட்ரம்ப் திட்டவட்டம்
06 Nov 2025வாஷிங்டன்: தென்ஆப்பிரிக்காவில் நடக்கும் ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
துரித அஞ்சல் கட்டணம் உயர்வு: செல்வப்பெருந்தகை கண்டனம்
06 Nov 2025புதுடெல்லி: பதிவு அஞ்சல் சேவை நிறுத்தம், துரித அஞ்சல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவில் மதுபானங்கள் பயன்பாடு 7 சதவீதம் உயர்வு
06 Nov 2025புதுடெல்லி: இந்தியாவில் மதுபானங்கள் பயன்படுத்துவது 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
-
நாசா தலைவராக எலான் மஸ்க் ஆதரவாளர் மீண்டும் நியமனம்
06 Nov 2025வாஷிங்டன்: நாசா தலைவராக எலான் மஸ்க் ஆதரவாளர் மீண்டும் நியமிக்கப்பட்டார்.
-
இந்திய அரசியலுக்கும் எனக்கும் எந்தவதி தொடர்பும் இல்லை: பிரேசில் மாடல் அழகி தகவல்
06 Nov 2025பிரேசிலியா, இந்திய அரசியலுக்கும் எனக்கும் எந்த தொடர்பு இல்லை என்று பிரேசில் மாடல் அழகி தெரிவித்துள்ளார்.
-
ஆசிய மாஸ்டர்ஸ் தடகளம்
06 Nov 2025இந்திய மாஸ்டர்ஸ் தடகள சம்மேளனம் சார்பில் 23-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் தொடங்கியது.
-
திருச்செந்தூரில் 2-வது நாளாக உள்வாங்கிய கடல்
06 Nov 2025திருச்செந்தூர், திருச்செந்தூரில் 2-வது நாளாக கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
மகளிர் உலகக்கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியுடன் ஜனாதிபதி திரெளபதி சந்திப்பு
06 Nov 2025புதுடெல்லி: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியினரை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
-
மெரினா கடலில் இறங்கி போராட்டம்: தூய்மைப்பணியாளர்கள் மீது வழக்கு
06 Nov 2025சென்னை: மெரினா கடலில் இறங்கி போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
சோமாலியா கப்பல் மீது திடீர் தாக்குதல்
06 Nov 2025லண்டன், சோமாலியா கப்பல் மீது கடற்கொள்ளையர்கள் திடீர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சீனாவில் நிலநடுக்கம்
06 Nov 2025பீஜிங்: சீனாவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானது.
-
ரூ.17 ஆயிரம் கோடி பணமோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு மீண்டும் சம்மன்
06 Nov 2025புதுடெல்லி, ரூ.17 ஆயிரம் கோடி பணமோசடி வழக்கில் ஆஜராக அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
-
4-வது டி-20 போட்டி: ஆஸி.யை வீழ்த்தி இந்தியா முன்னிலை
06 Nov 2025கராரா: 4-வது டி-20 போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
-
காகிதக் கப்பலில் கடல் தாண்ட முனைகிறார் விஜய் - வைகோ
06 Nov 2025சென்னை: காகிதக் கப்பலில் கடல் தாண்ட நினைக்கிறார் விஜய் என்று வைகோ தெரிவித்தார்.
-
தமிழக சட்டப்பேரவை முன்பு தியாகி சங்கரலிங்கனார் சிலை நிறுவ வழக்கு அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
06 Nov 2025மதுரை: தமிழக சட்டப்பேரவை முன்பு தியாகி சங்கரலிங்கனார் சிலை நிறுவக்கோரிய மனுவை அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
வரும் 2026 ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவார் சி.எஸ்.கே. அணி சி.இ.ஓ. தகவல்
06 Nov 2025சென்னை: வரும் 2026 ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
-
தேவகோட்டை அருகே 13-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் கண்டெடுப்பு
06 Nov 2025சிவகங்கை: தேவகோட்டையில் 13-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது.
-
2026 டி-20 உலக கோப்பை போட்டிக்கு இந்தியாவில் மைதானங்கள் தேர்வு; அகமதாபாத்தில் இறுதிப்போட்டி
06 Nov 2025மும்பை: 2026 டி-20 உலக கோப்பை போட்டிக்கு இந்தியாவில் அகமதாபாத், டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய 5 மைதானங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இறுதிப்போட்டி
-
அபராதம் செலுத்தாததால் 30 ராமேசுவரம் மீனவர்கள் மீண்டும் சிறையில் அடைப்பு
06 Nov 2025ராமேசுவரம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் 9-ந் தேதி 4 விசைப்படகுகளில் 30 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
-
சபரிமலை பக்தர்களுக்காக 25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட் தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டது
06 Nov 2025சென்னை: சபரிமலை பக்தர்களுக்காக 25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட் தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டது.


