முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4-வது ஒரு நாள்: நியூசி., வெற்றி - தொடரையும் கைப்பற்றியது

புதன்கிழமை, 29 ஜனவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

ஹேமில்டன், ஜன. 29 - இந்தியஅணிக்கு எதிராக ஹேமில்டன் நகரில் நடந்த 4 _வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை நியூசிலாந்து அணி 3 _ 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது 

குறிப்பிடத்தக்கது. 

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளு

க்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வந்தது. 

ஏற்கனவே முடிந்த 3 ஆட்டத்தில் அந்த அணி 2_ 0என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இதன் 4 _வது  போட்டி ஹேமில்டன் நகரில் நேற்று நடந்தது. 

கடந்த 3 போட்டியில் பீல்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 

ஆனால் முதலில் களம் இறங்கிய இந்திய அணி ரன் எடுக்க திணறியது. இறுதியில் இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்னை எடுத்தது. 

இந்திய அணி தரப்பில் துவக்க வீரர்

ரோகித்சர்மா, ராயுடு, கேப்டன் தோனி மற்றும் ஜடேஜா ஆகிய 4 பேர் தவிர மற்ற வீரர்கள் வழக்கம் போல சொதப்பி விட்டனர். 

மேற்படி நால்வரில் மூவர் அரை சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மா அதிகபட்சமாக 79 ரன் எடுத்தார். 

ராயுடு 37 ரன்னும், கேப்டன் தோனி 79 ரன்னும், ஜடேஜா 62 ரன்னும் எடுத்தனர். 

நியூசிலாந்து அணி 279 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை இந்தியஅணி நிர்ணயித்தது. 

அடுத்து களம் இறங்கிய அந்த அணி 48. 2 ஓவரில் 3விக்கெட் இழப்பிற்கு 280 ரன்னை எடுத்து 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றது. 

நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர் அதிரடியாக ஆடி 154 பந்தில் 112 ரன் எடுத்தார். தவிர, வில்லியம்சன் 68 ரன் எடுத்தார். 

இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் நியூசிலாந்து  அணி 3_ 0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்