முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலி வீரர்கள் விவகாரம்: ஏ.கே. அந்தோணி திட்டவட்டம்

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2014      இந்தியா
Image Unavailable

 

கொச்சி, பிப்.25 - இந்திய  மீனவர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் இத்தாலி கடற்படை வீரர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில்  விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அமைச்சர்  ஏ.கே.அந்தோணி கூறினார். இதுபற்றி் கொச்சியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

இத்தாலி கடற்படை வீரர்களுக்கு எதி்ரான வழக்கு இந்திய சட்டத்தின் அடிப்படையிலேயே நடைபெற்று வருகிறது. அரசின்  இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. உள்துறை அமைச்சகமும், வெளிவிவகாரத்துறை  அமைச்சகமும் இந்த விஷயத்தை கை ய யாண்டு வருகின்றன. இதுபற்றி நாங்கள் அடிக்கடி விவாதித்து வருகிறோம் என்றார். இந்திய ராணுவமும், கடற்படையும் வளர்ச்சி அடைந்து வரும் அமைப்புகளாகும். சீனா உடனான உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்