முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தகவல் கொடுத்த கிராமவாசியை கடத்தி கொன்ற நக்சலைட்கள்

வெள்ளிக்கிழமை, 3 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

கயா,மே.3 - போலீசுக்கு தகவல் கொடுத்த கிராமவாசிகள் 2 பேரை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கடத்திச்சென்று கம்பால் அடித்தனர். அதில் ஒருவர் அடி தாங்கமுடியாமல் இறந்துபோனார் மற்றொருவரை உயிருடன் விட்டுவிட்டனர். பீகார் மாநிலத்தில் வரலாற்று சிறப்புமிக்க கயா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. அவர்கள் நடமாட்டம் குறித்து அந்த மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்தை சேர்ந்த 2 பேர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த விபரம் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு தெரிந்துவிட்டது. உடனே மாவோயிஸ்ட்கள் அந்த கிராமத்திற்குள் நள்ளிரவில் நுழைந்து அந்த 2 பேர்களையும் பிடித்து சென்றனர். அவர்களை பொதுமக்கள் மத்தியில்  கையை கட்டிப்போட்டு கம்பால் அடித்தனர். இதன் வலியை தாங்க முடியாத ஒருவர் அதேஇடத்தில் இறந்துவிட்டார். அவரது உடலை சாலையில் தூக்கி எறிந்துவிட்டு மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தப்பியோடிவிட்டனர். மற்றொருவர் இனிமேல் துப்புக்கொடுக்கமாட்டேன் என்று உறுதிமொழி அளித்ததால் அவரை மாவோயிஸ்ட்கள் உயிருடன் விடுவித்தனர். இந்த சம்பவத்தையொட்டி அந்த பகுதியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் பெரும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்