Idhayam Matrimony

சாரதா சீட்டு நிறுவன மோசடி வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்

வெள்ளிக்கிழமை, 9 மே 2014      ஊழல்
Image Unavailable

 

கொல்கத்தா,மே.10 - மேற்குவங்க மாநிலம் சாரதா சீட்டு நிறுவன மோசடி வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் கடைசி கட்ட தேர்தல் நடைபெற இன்னும் 2 நாட்களே உள்ளன. சாரதா சீட்டு நிறுவன மோசடியில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள் நிறைய பேருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மம்தா அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் ஜார்கண்ட், அசாம் உள்ளிட்ட வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஏராளமான கிளைகளை தொடங்கியது. இந்த நிறுவனத்தை பிரபல தொழில் அதிபர் சுதிப்தா சென் நடத்தி வந்தார். இவற்றில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. சுதிப்தா சென் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இந்நிலையில் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago