எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலூர், ஜூன்.- 9 - காவேரிப்பாக்கம் அருகே தனியார் சொகுசு பஸ் கவிழ்ந்து எரிந்து விபத்துக்கு உள்ளாகியதில் பஸ்சில் பயணம் செய்த 22 பேர் அதே இடத்தில் உடல் கருகி இறந்தனர். இதில் 11 பேருடைய உடல்கள் அடையாளம் காணப்பட்டன. வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் உடல்களை அடையாளம் காண ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அங்கு உறவினர்கள் கதறி அழுதபடி சோகத்தில் மூழ்கி உள்ளனர். நெஞ்சை உலுக்கும் இந்த கோர விபத்து பற்றிய விவரம் வருமாறு- சென்னையில் இருந்து நேற்று முன்தினம் தனியார் சொகுசு பஸ் ஒன்று, பொள்ளாச்சி நோக்கி புறப்பட்டது. சேலத்தைச் சேர்ந்த டிரைவர் நாகராஜன் பஸ்சை ஓட்டி வந்தார். பஸ்சில் 6 பெண்கள் உள்பட 24 பேர் பயணம் செய்தனர். வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே அவலூர் என்ற இடத்தில் நள்ளிரவு 11.30 மணி அளவில் பஸ் வேகமாக வந்துகொண்டு இருந்தது. அப்போது பஸ்சுக்கு முன்பு இரண்டு லாரிகள் போட்டி போட்டு சென்றன. முன்னால் சென்ற லாரி மீது பின்னால் வந்த லாரி திடீரென்று மோதியது. அதனால் 2 லாரிகளும் உரசிக்கொண்டு தடுமாறியபடி ரோட்டில் நின்றன. லாரிகளுக்கு பின்னால் வந்த தனியார் பஸ்சை, லாரிகள் மீது மோதாமல் இருக்க, அதன் டிரைவர் இடதுபுறம் திருப்பி உள்ளார். இதனால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து சிறிய பாலத்தின் மீது மோதியது. இதனால் முன் சக்கரம் இரண்டும் உடைந்தது. பஸ் நிலை தடுமாறி 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அதே நேரத்தில் டீசல் டேங்க்கும் வெடித்து சிதறி தீப்பிடித்தது. தீ மளமளவென்று பரவியதில் பஸ் முழுவதும் பனைஓலை எரிவது போல் சடசடவென எரிந்து உருக்குலைந்தது. பஸ்சில் பயணம் செய்தவர்களில் பயணிகள் அனைவரும் தூக்க கலக்கத்தில் இருந்ததால் என்ன நடந்தது? என்று யூகிக்க முடியவில்லை. என்ன செய்வது என தெரியாமல் பஸ்சுக்குள் பயணிகள் அங்குமிங்கும் ஓடினர். பஸ் ஏ.சி. வசதி கொண்டதால், கண்ணாடிகள் மூடியபடி இருந்தது. அதை அந்த அவசர நேரத்தில் திறக்க முடியாமல் பயணிகள் பலர் தீக்கிரையாயினர். பஸ் டிரைவர் நாகராஜன் கதவை உடைத்துக் கொண்டு பயணிகளை காப்பாற்ற முயன்றார். ஆனால் கதவை திறக்க அவர்களால் முடியவில்லை. பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்ததால் பின்னால் அமர்ந்திருந்த சென்னை முகப்பேறை சேர்ந்த கார்த்திக் ராஜா என்ற பயணி வெளியேவந்து விழுந்து விட்டார். அதனால் அவரும் லேசான காயத்துடன் தப்பிவிட்டார். அந்த வழியாக சென்ற வாகனங்களில் பயணம் செய்தவர்கள், இந்த கோர விபத்தினை பார்த்து துடித்துப்போனார்கள். அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ 50 அடி உயரத்துக்கு எரிந்ததால் யாரையும் காப்பாற்ற முடியவில்லை. இதனால் 22 பயணிகளும் தீயில் கருகி பலியானார்கள்.
தகவல் அறிந்ததும் காவேரிப்பாக்கம், சோளிங்கர், வாலாஜா பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்களால், தீயை அணைக்கத் தான் முடிந்ததே ஒழிய தீயில் சிக்கியவர்களை உயிருடன் மீட்க முடியாமல் போனது. அதற்குள் தீ, பஸ்சில் இருந்த பயணிகளை அடையாளம் காண முடியாத அளவுக்கு கரிக்கட்டையை போல் எரித்து சாம்பலாக்கி விட்டது. விபத்து நடந்த இடத்தை வேலூர் மாவட்ட கலெக்டர் நாகராஜன், வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஜெயராம், திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி, வேலூர் மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குனர் டேவிட் வின்சென்ட், வேலூர் கோட்ட தீயணைப்பு அலுவலர் பார்த்திபன் ஆகியோர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவர் நாகராஜனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியானவர்களின் உடல்கள் வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப் பட்டு உள்ளன. இதுவரை, விபத்தில் பலியான 22 பேரில் 11 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. பலியானவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
பொள்ளாச்சியைச் சேர்ந்த டாக்டர் சுப்பிரமணியன் (29), பொள்ளாச்சியை சேர்ந்த சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் வெங்கடேசன் (32), சென்னை முகப்பேரை சேர்ந்த சுனிதா (32), சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த செல்வராஜ் (58), மதுரையைச் சேர்ந்த மாசானகார்த்திக் (29), ஒரிசாவைச் சேர்ந்த பரத் (26), உடுமலையைச் சேர்ந்த ஜெயராணி (25), பொள்ளாச்சி ஆவாளம்பட்டியை சேர்ந்த விஜயகுமார் (49), மதுரையை சேர்ந்த ஒரே குடும்பத்தினரான விஜயலட்சுமி (58), இவரது மகன் விமல் (36), பேரன் பிரணவ்ராஜ் (11) உள்பட 11 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 20 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா சி.எம். சார்? - விஜய் கேள்வி
20 Sep 2025நாகை, வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீதா என்று முதல்வருக்கு விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-09-2025.
20 Sep 2025 -
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
ட்ரம்பின் கோல்டு கார்டு திட்டம்: இந்திய பணியாளர்களுக்கு சிக்கல்
20 Sep 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்பின் புதிய கோல்டு கார்டு திட்டத்தால் இந்திய பணியாளர்களுக்கு சிக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
டி-20-யில் 100 விக்கெட்: அர்ஷ்தீப் சிங் புதிய மைல்கல்
20 Sep 2025அபுதாபி, டி-20 கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
ஓமன் அணிக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்தது: சூர்யகுமார்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்ததாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
கடைசி லீக் ஆட்டம்...
-
சென்னை குடிநீர் செயலியை முதல்வர் தொடங்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, சென்னையில் குடிநீர் செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
பிரதமர் பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா? - த.வெ.க. தலைவர் கேள்வி
20 Sep 2025நாகை, பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
சிறப்பாக பந்து வீசியது: ஓமன் அணிக்கு சாம்சன் புகழாரம்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓமன் மிகவும் சிறப்பாக பந்து வீசியதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்: ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அறிவுறுத்தல்
20 Sep 2025வாஷிங்டன், எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள் என்று ஊழியர்களுக்கு முக்கிய நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.
-
கரடி நடமாட்டம் எதிரொலி: பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கான நேரம் குறைப்பு
20 Sep 2025தென்காசி, கரடி நடமாட்டம் அதிகரிப்பால் பழைய குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
2026 தேர்தலில் 2 பேருக்கு இடையே தான் போட்டி..! நாகையில் விஜய் பரபரப்பு பேச்சு
20 Sep 2025நாகை, 2026 தேர்தலில் 2 பேருக்கு நடுவில்தான் போட்டியே.. ஒன்று தவெக. ஒன்று திமுக. என்று விஜய் தெரிவித்துள்ளார்.